SANGAMAM - LIVE NEWS

Tuesday, November 2, 2010

கலெக்டர் சகாயம் தொடங்கிய திருச்செங்கோடு உழவன் உணவகம் தொடருமா?


நாமக்கல் கலெக்டராக இருந்த சகாயத்தால் தொடங்கப்பட்ட திருச்செங்கோடு உழவன் உணவகம் அதிகாரிகளின் இடையூறால் தொடர்ந்து நடைபெறுமா? என விவசாயிகள் சந்தேகமடைந்துள்ளனர்.

விவசாயிகள் விளைவிக்கும் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் தரகர்களே லாபம் பெறுவதை தடுக்கும் பொருட்டு விவசாயிகளையே முதலாளிகாளுக்கும் முயற்சியாக அப்போதைய நாமக்கல் கலெக்டர் சகாயத்தினால் கடந்த ஆண்டு செப்டம்பர் 14 ம் தேதி நாமக்கல் உழவர் சந்தையில் உழவன் உணவகம் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தினை மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் தொடங்கி வைத்தார். இதேபோல் அக்டோபர் 23 ம் தேதி திருச்செங்கோடு உழவர் சந்தையிலும் உழவன் உணவகம் விரிவுபடுத்தப்பட்டது.

விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை மதிப்பூட்டப்பட்ட பொருளாக விற்கும் பொழுது நல்ல லாபம் அடைவார்கள் என்ற நோக்கில் துவங்கப்பட்ட இந்த உழவன் உணவகங்களில் சோளப் பணியாரம், ராகி களி, ராகி தோசை, கீரை இட்லி, அதிரசம்,காய்கறி பக்கோடா, உளுந்தங்கஞ்சி, சுண்டல், ஒப்பிட்டு, ஆட்டுகால் கிழங்கு சூப்பு, கீரை சூப்பு, எள்ளுரண்டை, புட்டு மாவு என பல்வேறு இயற்கையான கிராம உணவு வகைகளை விவசாயிகள் தாங்களே தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

காலை நேரத்தில் காய்கறிகள், பால் வகைகள், நாட்டுக் கோழி என விற்பனை நடைபெறும் உழவர் சந்தை காலை 11 மணியுடன் முடிவடைந்து விடும். மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை உழவன் உணவகம் நடைபெறுகிறது.

நாமக்கல், திருச்செங்கோடு உழவன் உணவகத்தில் ஆரம்பிக்கப்பட்டு ஓர் ஆண்டு முடிவதற்குள்ளாக ரூ.1.5 கோடி ரூபாய் உணவு பொருட்கள் மட்டும் விற்பனை செய்யப்பட்டு சாதனை புரியப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளும் நல்ல பலனடைந்துள்ளனர். உழவன் உணவகத்தில் உணவுப் பொருட்களை விற்பனை செய்து கிடைத்த லாபத்தில் சில விவசாயிகள் கார் வாங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க.........


allvoices

Wednesday, October 27, 2010

செல்போன் எண்ணை மாற்றாமல் வேறு நிறுவனங்களுக்கு மாறும் வசதி

பொது மக்கள் தங்களிடம் உள்ள செல்போன் எண்ணை மாற்றாமல் வேறு செல்போன் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களாக மாறும் வசதி (என்.என்.பி) வருகிற திங்கட்கிழமை (நவம்பர் 1ந் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. மேலும்படிக்க

allvoices

Monday, October 25, 2010

தேர்தலில் நிற்க தொகுதி தேடும் துணை சபாநாயகர்


நாமக்கல் கலெக்டராக இருந்த உ.சகாயத்தை பதவி மாற்றம் செய்து அரசியல் பழிதீர்த்து கொண்ட துரைசாமியை பழிவாங்க சில சமூக அமைப்புகள் தேர்தலில் அவருக்கு எதிராக பிரச்சாரம் மூலம் களம் இறங்க தயாராகி வருகின்றன.

இந்த வருத்தத்தை விட தனக்கு எதிராக வீரபாண்டியாரும், நாமக்கல் காந்திசெல்வனும் பண்ணும் பாலிடிக்ஸ்தான் ‘துணை’யை மத்தளமாக இடிவாங்க வைத்திருக்கிறது என்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள். மேலும் படிக்க....

allvoices

Sunday, October 24, 2010

கெளதம் மேனனை கவிழ்த்த சமீரா ரெட்டி

நடுநிசி நாய்கள் படத்தில் பெட்ரூம் காட்சிகள், கவர்ச்சி படையல் என இளசுகளை கிளுகிளுப்பேற்றும் காட்சிகளில் உணர்ச்சிபூர்வமாக(!!?) நடித்து மேலும் படிக்க...

allvoices

Friday, October 22, 2010

ரத்தசரித்திரத்தால் ஆந்திராவில் போராட்டம் வெடித்தது

ராம்கோபால் வர்மா இயக்கத்தில் உருவான ரத்தசரித்ரா ஆந்திராவில் நேற்று வெளியானது. இந்த படத்தில் விவேக் ஓபராய் மற்றும் சூர்யா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆந்திராவின் ராயலசீமா பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் படுகொலை செய்யப்ப்பட்ட தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ., பரிடாலா ரவீவீந்தரா அவருடைய எதிரி மத்தல செருவு சூரி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் அதன் விளைவாக நடந்த தொடர் கொலைகளை அடிப்படையாக கொண்டு ரத்தசரித்திரம் படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க....

allvoices

Thursday, October 21, 2010

பிரிதிவிராஜை கைவிட்ட ப்ரியாமணி

ரத்த சரித்திரம் படத்தில் நடித்தபோது இந்தி நடிகர் விவேக் ஓபராயும், ப்ரியாமணியும் அடித்து விளையாடும் அளவுக்கு நெருக்கமான நண்பர்களாகிவிட்டனராம்.

தனது நட்பை மேலும் வெளிப்படுத்தும் விதமாக ரத்த சரித்திரத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடைபெற்ற பொழுது விவேக் ஓபராயை சென்னைக்கு அழைத்து வந்து தனது உறவினர்கள் படைசூழ ஸ்டார் ஓட்டலில் அசைவ விருந்து வைத்தாராம் ப்ரியாமணி. மேலும் படிக்க...


allvoices

தோல்வி பயத்தில் நடிகர் விக்ரம்

விக்ரம் பெரிய அளவில் எதிர்பார்த்த ராவணன் படம் ஏமாற்றி விட்டதால் அவர் தற்பொழுது நடித்து கொண்டிருக்கும் வெடியை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார். ஒருவேளை இந்த படமும் தோல்வியடைந்தால் தனது மார்க்கெட் ஆட்டம் கண்டுவிடும் என்று உள்ளூர ஆடிப் போயிருக்கிறார் சீயான்... மேலும் படிக்க...

allvoices
Related Posts with Thumbnails