SANGAMAM - LIVE NEWS

Monday, September 21, 2009

விடுதலைப்புலிகளை பிரிந்த யானை தனித்திருந்து சோகம் காக்கும் அவலம்

அரசியல் அனாதைகள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அடைக்கல அனாதைகள் என்பதை கேள்விப்பட்டிருக்க முடியாது. ஏதோ ஒரு காரணத்தினால் ஒருவர், தான் அன்போடு வளர்த்து வந்த விலங்கை விட்டு சென்றால் அந்த வளர்ப்பு பிராணி அடைக்கல அனாதையாகிறது. வேறு ஒருவரிடம் அடைக்க்லம் தேடி இப்படி அடைக்கல அனாதையாகி இருக்கிறது ஆஜானுபாகுவான 'பிடி' ஒன்று.

இந்த பெண் யானைக்கு பெயர் என்ன என்பது தெரியாவிட்டாலும் அது வளர்ந்த இடம் கண்ணி வெடிகள் காலைக் கவ்வும் யுத்த முனை. ஆம்... விடுதலைப்புலிகளின் மிச்ச சொச்சங்களில் இந்த பிடியும் ஒன்று...

மேலும் படிக்க...



allvoices

Sunday, September 20, 2009

``சிட்டி லிமோஸின்ஸ்'' நிறுவனம் மீது 1000 பேர் புகார்; கோடம்பாக்கம் அலுவலகம் முற்றுகை

சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ``சிட்டி லிமோஸின்ஸ்'' நிறுவனம் ஒன்று வாடிக்கையாளர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. ரூ.1 1/2 லட்சம் செலுத்தினால் 5 ஆண்டில் 5 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று கூறி இந்நிறுவனம் சார்பில் விளம்பரங்கள் செய்யப்பட்டது. இதனை நம்பி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணம் கட்டி வாடிக்கையாளர் ஆனார்கள். இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கமிஷனர் அலுவலகத்தில் திரண்டு புகார் மனுக்களை கொடுத்தனர்.

மேலும் படிக்க...

allvoices
Related Posts with Thumbnails