SANGAMAM - LIVE NEWS

Sunday, December 20, 2009

நாமக்கல்லில் "தொடுவானம்" இணைய பயிலரங்கு - கிராம மக்களிடம் வரவேற்பு.

நாமக்கல், நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் "தொடுவானம்" எனும் பெயரில் இணைய பயிலரங்கு நடைபெற்றது. இந்த பயிலரங்கில் கிராம தன்னார்வலர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் கிராம தன்னார்வலர்களுக்கான இணைய பயிலரங்கு நடைபெற்றது.தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி அனைவரையும் வரவேற்று பேசினார்.இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சகாயம் பயிலரங்கினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.பயிலரங்கில் தகவல் தொடர்பில் வலைப்பூ எனும் தலைப்பில் காசி ஆறுமுகம் அவர்களும், எளிய பயிற்சியும் தகவல் தொடர்பும் எனும் தலைப்பில் கோபாலகிருஷ்ணனும்( ஹாய்கோபி), பயனரின் பார்வையில் வலைப்பூ எனும் தலைப்பில் சஞ்சய்காந்தியும், ஒரு அதிகாரியின் பார்வையில் வலைப்பூ எனும் தலைப்பில் நீலகிரி மாவட்ட வனத்துறை அதிகாரி ஆனந்த் (லதானந்த்) அவர்களும், மின்னியல் நிர்வாகம் குறித்து மாவட்ட தகவலியல்(NIC) துறை அதிகாரி செல்வகுமார் , தகவல் அறியும் உரிமைச் சட்டமும் பயன்பாடும் எனும் தலைப்பில் வழக்கறிஞர் மார்டின் அவர்களும் விளக்கவுரையாற்றினர். இதனை அடுத்து காணொளியூடாகா பிரான்சிலிருந்து பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, சிங்கப்பூரிலிருந்து மணியம், லண்டனிலிருந்து பேராசிரியர் சிவாபிள்ளை, மலேசியாவிலிருந்து இளந்தமிழ், ஆஸ்திரேலியாவிலிருந்து முகுந்தராசு,அமெரிக்காவிலிருந்து ஆல்பர்ட் பெர்ணான்டோ ஆகியோர் வாழ்த்து செய்தி வழங்கினர்.

மேலும் தொடர....

allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails