லண்டன், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள தற்கொலை கிளினிக்கில், சாவதற்காக பிரிட்டனைச் சேர்ந்த 800 பேர் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டின் ஜூரிச் நகரில் உள் ளது, "டிக்னிடாஸ்' என்ற பிரபல மருத்துவமனை. கேன்சர் உட்பட உயிரைப் பறிக்கும் பயங்கர நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சுயவிருப்பத்தின் பேரில் தற்கொலை செய்து கொள்ள இந்த மருத்துவமனை, சட்டப்படி ஏற்பாடு செய்துவருகிறது.பல நாடுகளைச் சேர்ந்த நோயாளிகள் இங்கு வந்து தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்கின்றனர். ஆனால், அவர்களை, சட்ட நிபுணர்களும், டாக்டர்களும் தீர விசாரித்த பின் தான், அவர்கள் சாவதற்குத் தகுதியானவர் என்று சான்றளிக்கின்றனர்.
Thursday, June 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment