SANGAMAM - LIVE NEWS

Saturday, May 16, 2009

தமிழினம் அறுந்து-தோற்றுப்போன தேர்தல் - 2009-நாக.இளங்கோவன்

"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே" என்ற கண்ணதாசனின் வரியோடு, "அவன் தறுதலையானது கழகங்களின் ஆட்சியிலே" என்ற வரியை சேர்த்துக் கொண்டு படித்தால் தேர்தல்-2009 பற்றி தன்மானம் இன்னும் கொஞ்சம் உள்ள தமிழ்நாட்டார்க்கு மனத்துயர் வாராது.

இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் மூன்று கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

தமிழினத்தைப் படுகொலை செய்த காங்கிரசு வெற்றி பெற்றுள்ளது. போனமுறை 10 இடங்கள். இந்த முறை 9 இடங்கள். ஆகவே அவர்கள் தோற்றார்கள், காங்கிரசுக்குத்
தமிழ்மக்கள் பாடம் புகட்டினார்கள் என்றெல்லாம் யாராவது சொன்னால் நான் நகைப்பேன்.

தமிழினத்தை அழித்த காங்கிரசுக்குத் துணை போன திமுக 18 இடங்களில் வென்றுள்ளது. போனமுறை 16 இடங்கள்.

"துரோகம் பழகு; நக்கிப் பிழை" என்றே இது தமிழ்நாட்டுக் குமுகத்திற்குப் போதிக்கிறது.



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails