புதுடெல்லி,பாரளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் முடிவுகளை அரசியல் கட்சிகள் எதிர்நோக்கி இருக்கும் இந்த வேளையில் சில தேசிய கட்சிகள் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளன. இந்நிலையில் சில ஆங்கில செய்தி சேனல்கள் இந்திய தேர்தல் குறித்த கருத்துகணிப்பினை நேற்று வெளியிட்டன. அதில் தமிழகத்தில் அதிமுக முன்னிலை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தேசிய கட்சிகள் அதிமுகவை தங்களது பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி முதன்மையானதாக உள்ளதாகத் தெரிகிறது.
Thursday, May 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment