SANGAMAM - LIVE NEWS

Tuesday, May 26, 2009

இலங்கைக்கு இந்தியத்தீர்வு : நீதியும் நியாயமும் அமைதியும்

சென்னை, போருக்குப் பிந்தைய வளர்ச்சித் திட்டங்களுக்கு மட்டும் இடமளித்துவிட்டு, அரசிய்ல அதிகார பகிர்வு குறித்து இந்தியாவும், சர்வதேச அமைப்புகளும், தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் கவனம் செலுத்தாமல் இருந்து விடக்கூடாது என்று பிரபல எழுத்தாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

2002ல் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் யாழ் வளைகுடா பகுதியை இலங்கைத் தீவுடன் இணைக்கும் ஏ-9 சாலை திறக்கப்பட்டது. இதுவும் 2005-ல் போர் துவங்கியவுடன் மூடப்பட்டது. இன்று கொழும்பு நகரிலிருந்து யாழ் செல்ல இருக்கும் ஒரே வழி வான்வழிதான். இது மிகவும் செலவு பிடிக்கும் வழியாகும். இதன் 30 வருட போரில் உடமைகளை இழந்து, வீடுகளை இழந்து, வருமானம் ஈட்டக்கூடிய இளைய சமூகத்தை இழந்து இருக்கும் ஒரு மக்களால் தாக்கப்பிடிக்க முடியாது. நாகரீகத்தின் முக்கிய வெளிப்பாடே போக்குவரத்து வசதிதான். இதை உறுதி செய்ய வேண்டிய அவசியம் அனைவருக்கும் உண்டு. அடுத்ததாக, எந்தவிதமான கட்டுமான வசதிகளும் கடந்த 30 வருடத்தில் ஏற்படுத்தப்படவில்லை. அடிப்படை கட்டுமான வசதிகளையும், உருவாக்க வேண்டியது அவசரத் தேவையாகும். கல்வி மற்றும் பொது சுகாதார வசதிகளையும் விரைவாக அனைத்து பகுதிகளிலும் உருவாக்க வேண்டும்.



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails