SANGAMAM - LIVE NEWS

Tuesday, February 24, 2009

சென்னை, கோட்டையை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் 140 பேர் கைது

இலங்கை இனப் படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி சென்னை தலைமைச் செயலகத்தை இன்று செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முயற்சித்த மாணவர்கள் 140 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் போரை நிறுத்த வேண்டும், சிறிலங்கா படையினருக்கு ஆயுதங்களை வழங்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாகச் சென்றபோது அவர்களைக் காவல்துறையினர் நடுவழியில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails