SANGAMAM - LIVE NEWS

Thursday, February 26, 2009

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சுடு நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார்.

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 600 படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். நேற்று மாலை கச்சத்தீவுப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். இதில் 35 படகுகளை சுற்றி வளைத்து, அவற்றில் இருந்த ஜி.பி.எஸ். கருவிகள், செல்போன்களை பறித்துக் கொண்டனர். வலைகளை அறுத்து சேதப்படுத்தினர். மீனவர்களை சரமாரியாக தாக்கி, அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை அள்ளிச்சென்றனர். உயிர் பிழைத்தால் போதும் என மீனவர்கள் அங்கிருந்து தப்பி நேற்று நள்ளிரவு கரைக்கு திரும்பினர்.



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails