SANGAMAM - LIVE NEWS

Monday, February 23, 2009

இசைப்புயலின் சாதனை பயணம்

சர்வதேச அளவில் புகழ் பெற்ற இசையமைப்பாளராக விளங்கும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதையும் வென்று இந்தியாவுக்கும், தமிழகத் திற்கும் பெருமை தேடித் தந்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை தனது இசையால் வசீகரித்து இசைப்புயலாக உருவான ஏ.ஆர்.ரஹ்மானின் சாதனை பயணம் 1992 ஆம் ஆண்டு ரோஜா படத்தின் மூலம் ஆரம்பமானது.

இசையமைப்பாளராகவும, இசை நடத்துனராகவும் பணியாற்றியவர் ஆர்.கே.சேகர். இவரது மகனாக 1967ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி பிறந்தார் ஏ.எஸ்.திலீப் குமார். இவர்தான் இன்றைய ஏ.ஆர்.ரஹ்மான்.ரஹ்மானுக்கு 9 வயதாக இருந்தபோது தந்தை சேகர் மரணமடைந்தார். இதனால் குடும்பம் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டது. வீட்டில் இருந்த இசைப் பொருட்களையெல்லாம் விற்றும், வாடகைக்கு விட்டும் ஜீவனம் நடத்த வேண்டிய துர்பாக்கிய நிலை.



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails