SANGAMAM - LIVE NEWS

Wednesday, February 25, 2009

உலக நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்து போர்நிறுத்தம் செய்யமாட்டோம் - இலங்கை பிரதமர்

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் நெருக்கடிகளுக்கு பணிந்து போர்நிறுத்தம் செய்ய மாட்டோம் என இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான போர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கடைசி நகரமான புதுக்குடியிருப்பையும் பிடித்து விட்டதாக ராணுவம் இன்று அறிவித்துள்ளது. ஆனால் புலிகள் தரப்பில் இதனை மறுத்துள்ளனர். அங்கு கடும் யுத்தம் நடைபெற்று வருவதாக ஏஜென்சி செய்திகள் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் இரு தரப்பினருக்கும் இடையில் நடைபெறும் யுத்தத்தில் அப்பாவி மக்கள் பலியாவது குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. இரு தரப்பினரும் அமைதிபேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை வைத்தது. இதே கோரிக்கையை சில தினங்களுக்கு இங்கிலாந்து முன்வைத்தது. இலங்கைக்கு அதிக பொருளாதார உதவி அளிக்கும் ஜப்பான் நாடும், போரில் அப்பாவி மக்கள் பலியாவது தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது.


allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails