SANGAMAM - LIVE NEWS

Tuesday, February 24, 2009

துரைமுருகன் அழைப்பை வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் புறக்கணிப்பு - பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!

ஐகோர்ட் மோதல் சம்பவம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று காலை நடக்கவிருந்த பேச்சுவார்த்தைக்கு, வக்கீல்கள் சங்க பிரதிநிதிகள் யாரும் வராததால் ஒத்திவைக்கப்பட்டது.

சென்னை ஐகோர்ட்டில் கடந்த 19-ம் தேதி வக்கீல்களுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மோதலின்போது ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தர, ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி ஞானபிரகாசம் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails