SANGAMAM - LIVE NEWS

Tuesday, February 24, 2009

இலங்கை, இருதரப்பினரும் சண்டையை நிறுத்த வேண்டும் - அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கையில் நடைபெறும் போரில் அப்பாவி மக்கள் அதிகளவில் பாதிப்பது கவலையளிப்பதால், ராணுவத்தினரும், புலிகளும் சண்டை நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அமெரிக்க வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக போர் தீவிரமடைந்துள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான பகுதிகளை ராணுவம் கைப்பற்றியது. இந்த சண்டையில் ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர். போர் முனையில் சிக்கித் தவிக்கும் அப்பாவி மக்களின் நிலை கவலையளிப்பதாக ஐ.நா. உள்பட பல நாடுகள் கவலை தெரிவித்தன. இரு தரப்பினரும் சண்டை நிறுத்தம் செய்ய வேண்டும் என ஐ.நாவும், மற்ற நாடுகளும் கோரிக்கை விடுத்தன.


allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails