SANGAMAM - LIVE NEWS

Sunday, February 22, 2009

திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய - வக்கீல்கள் கோரிக்கை

சென்னை: நீதித்துறை 356-வது பிரிவை பயன்படுத்தி திமுக அரசை கலைக்க உத்தரவிட வேண்டும் என நேற்று நடந்த கூட்டத்தில் வக்கீல்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் நீதி மன்றங்களை வரும் செவ்வாய்க் கிழமை வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய தமிழ் நாடு பார் கவுன்சில் அலுவலக கட்டிடத்தில் வக்கீல்கள் சங்க கூட்டம் அதன் தலைவர் பால்கனகராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.


போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே நடந்த மோதல் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் ஆவேசமாக கருத்துக்களை தெரிவித்தனர். வக்கீல் சங்கத் தலைவர் பால்கனகராஜ் பேசும்போது, கடந்த 19-ந் தேதி நடந்த மோதல் சம்பவத்தை சில தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பின. அதனை தமிழகத்திலிருந்து சென்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அவர் உடனடியாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தொடர்பு கொண்டு டிவியை பார்க்க சொல்லி இருக்கிறார். அதை பார்த்த தலைமை நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை தொடர்பு கொண்டு, என்ன நடக்கிறது? என்று கேட்டிருக்கிறார். நிலைமை சரியாக இல்லையென்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த நீதிபதி சென்னைக்கு தற்போது விசாரணைக்கு வந்துள்ளார். அவரிடம் நடந்தவைகளை எடுத்துக் கூற வேண்டும்.

பிரச்சனை நடந்து கொண்டிருந்ததை கண்ட நீதிபதிகள் மீதும் கற்கள் வீசப்பட்டுள்ளன. நீதித் துறைக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே இருந்த பிரச்சனை வக்கீல்கள், போலீஸ் மோதலாக உருவாக்கப்பட்டுள்ளது. முட்டை வீசியதில் தவறு செய்த 20 பேர் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு ஒட்டு மொத்த வக்கீல்களை தாக்கியுள்ளனர். இது நீதித்துறைக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானமாகும் என்று கூறினார்.


allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails