சென்னை: நதிநீர் பங்கீட்டு பிரச்னைகளுக்கு தேசிய நதிகள் இணைப்பு திட்டமே நிரந்தர தீர்வாகும் என பாளையில் நதிகள் இணைப்பு திட்டத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்து முதல்வர் கருணாநிதி பேசினார்.
சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தவாறு, நதிகள் இணைப்பு திட்டத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கிவைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நீர் பற்றாக்குறை பிரச்னை உள்ளது. நதிநீர் பங்கீட்டு பிரச்னைகளுக்கு தேசிய நதிகள் இணைப்பு திட்டமே நிரந்தர தீர்வாகும். இத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தின் முதல்கட்டமாக மாநிலங்களுக்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் திட்டங்களையாவது செயல்படுத்த முயற்சிக்க வேண்டும் என தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில் பேசினேன். பாசன வசதிக்கான நிதியுதவி திட்டத்தின் கீழ் மத்திய அரசு இதற்கு நிதியுதவி வழங்க ஒப்புக்கொண்டது.
சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தவாறு, நதிகள் இணைப்பு திட்டத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கிவைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நீர் பற்றாக்குறை பிரச்னை உள்ளது. நதிநீர் பங்கீட்டு பிரச்னைகளுக்கு தேசிய நதிகள் இணைப்பு திட்டமே நிரந்தர தீர்வாகும். இத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தின் முதல்கட்டமாக மாநிலங்களுக்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் திட்டங்களையாவது செயல்படுத்த முயற்சிக்க வேண்டும் என தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில் பேசினேன். பாசன வசதிக்கான நிதியுதவி திட்டத்தின் கீழ் மத்திய அரசு இதற்கு நிதியுதவி வழங்க ஒப்புக்கொண்டது.
No comments:
Post a Comment