கோவை சிறையில் இன்று கைதிகளுக்கும், வார்டன்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கைதிகள் தாக்கியதில் 3 வார்டன்களின் மண்டை உடைந்தது.
கோவை மத்திய சிறையில் சுமார் 1500 கைதிகள் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமைதோறும் கைதிகளை மகிழ்விக்க, அங்குள்ள அரங்கில் பெரிய ஸ்கிரீன் மூலம் திரைப்படம் காண்பிப்பது வழக்கம். இன்று ரஜினி நடித்த சிவாஜி படம் காண்பிக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் படம் பார்த்தனர்.
படம் முடிந்து அரங்கில் இருந்து கைதிகள் வெளியேறியபோது, வார்டர் பாலசுப்பிரமணியம், சீக்கிரம் வெளியே போங்கள் என கூறியுள்ளார். அப்போது ஆயுள் தண்டனை கைதிகள் இருவர், எதற்காக இப்படி விரட்டுகிறீர்கள். இன்று ஒருநாள் மட்டுமாவது ப்ரீயாக விடக்கூடாதா? என கேட்டுள்ளனர். அப்போது அவர்களை வார்டர் பாலசுப்பிரமணியம் கண்டித்து, தாக்கியதாக கூறப்படுகிறது. பாலசுப்பிரமணியத்துக்கு ஆதரவாக 20-க்கும் மேற்பட்ட வார்டர்கள் அங்கு வந்தனர்.
கோவை மத்திய சிறையில் சுமார் 1500 கைதிகள் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமைதோறும் கைதிகளை மகிழ்விக்க, அங்குள்ள அரங்கில் பெரிய ஸ்கிரீன் மூலம் திரைப்படம் காண்பிப்பது வழக்கம். இன்று ரஜினி நடித்த சிவாஜி படம் காண்பிக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் படம் பார்த்தனர்.
படம் முடிந்து அரங்கில் இருந்து கைதிகள் வெளியேறியபோது, வார்டர் பாலசுப்பிரமணியம், சீக்கிரம் வெளியே போங்கள் என கூறியுள்ளார். அப்போது ஆயுள் தண்டனை கைதிகள் இருவர், எதற்காக இப்படி விரட்டுகிறீர்கள். இன்று ஒருநாள் மட்டுமாவது ப்ரீயாக விடக்கூடாதா? என கேட்டுள்ளனர். அப்போது அவர்களை வார்டர் பாலசுப்பிரமணியம் கண்டித்து, தாக்கியதாக கூறப்படுகிறது. பாலசுப்பிரமணியத்துக்கு ஆதரவாக 20-க்கும் மேற்பட்ட வார்டர்கள் அங்கு வந்தனர்.
No comments:
Post a Comment