SANGAMAM - LIVE NEWS

Monday, February 23, 2009

வான் புலிகளின் தாக்குதல் வெற்றி பெற்றிருந்தால் இலங்கை அரசு தனது விமானப்படையை முழுவதும் இழந்திருக்கும் - கெஹலிய ரம்புக்வெல

விடுதலைப் புலிகளின் வான் தற்கொலைத் தாக்குதல் முயற்சி வெற்றி பெற்றிருந்தால் இலங்கை அரசு தனது விமானப்படையை முழுவதுமாக இழந்திருக்கும் என அரசின் பாதுகாப்புப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

விடுதலைப் புலிகளின் முயற்சி வெற்றி பெற்றிருந்தால் விமானப்படையென்ற ஒன்று இங்கு இருந்திருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அந்த விமானங்கள் தமது இலக்குகளை அடைய முன்னர் சுட்டு வீழ்த்தப்பட்டமையால் பெரிய இழப்புகள் தவிர்க்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளிடம் இறுதியாக இருந்த இரு விமானங்களுமே வெள்ளிக்கிழமை இரவு அழிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிரான மகத்தான வெற்றி என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails