SANGAMAM - LIVE NEWS

Monday, February 23, 2009

உண்ணாவிரதம் அறிவித்தது ஏன் ? - கருணாநிதி விளக்கம்

வழக்கறிஞர்கள் - காவல்துறையினர் இடையே மோதல் உருவாகாதா, ரத்தம் வடியாதா அதில் இன்பம் காண முடியாதா என்று ஏங்குபவர்களுக்கு இடம்கொடுத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் உண்ணாவிரத அறிவிப்பை வெளியிட்டேன் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் உண்ணாவிரதம் இருக்கலாமா? அது உடல் நிலையை மேலும் பாதிக்காதா? வழக்கறிஞர்கள் போராட முன்வந்தது எதற்காக? இலங்கை தமிழர்களின் நலன் கருதி தானே. இலங்கை தமிழர்களின் பாதுகாப்புக்காக நீங்கள் பாடுபட்டது இன்று நேற்றிலிருந்தா? அரை நூற்றாண்டுக்கு மேலாக அல்லவா நீங்கள் அதற்காக எழுதியும், பேசியும், செயல்பட்டும் வருகிறீர்கள் என்றெல்லாம் கேள்வி மேல் கேள்விகள்.



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails