சங்கமம் இன்றைய செய்திகள்
இலங்கையில் சிறுவர் பராமரிப்பு ...Wednesday, April 08, 2009 5:22 PM
வன்னியில் பாதுகாப்பு வலயப் பகுதி என இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பொக்கணை பிரதேசத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையம், பால்மா விநியோக நிலையம் ஆகியவற்றின் மீது இன்று இலங்கை இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 100 சிறுவர்கள் உட்பட 258 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ...Wednesday, April 08, 2009 5:18 PM
மும்பை, வங்கிகள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்கள் மார்ச் மாதத்தில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு மியூச்சுவல் பண்டு முதலீடுகளை திரும்பப் பெற்றதால் மியூச்சுவல் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஷூ வீசிய நிருபருக்கு சீட் - ...Wednesday, April 08, 2009 5:00 PM
1984ம் ஆண்டில் இந்திரா காந்தி கொலையான சமயத்தில் டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் டைட்லர் சமீபத்தில் இந்த வழக்கில் விடுவிக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தைனிக் ஜார்கன் பத்திரிக்கை நிருபர் ஜர்னைல் சிங், சிதம்பரம் மீது தனது ஷூவை கழற்சி வீசினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தைனிக் ஜார்கன் பத்திரிக்கை நிருபர் ஜர்னைல் சிங், சிதம்பரம் மீது தனது ஷூவை கழற்சி வீசினார்.
பஞ்சாப், வெடித்தது சீக்கியர்கள் ...Wednesday, April 08, 2009 4:54 PM
சண்டிகர்: சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் ஜெகதீஷ் டைட்லர் நிரபராதி என அறிவிக்கப்பட்டதைக் கண்டித்து பஞ்சாப் முழுவதும் சீக்கியர்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவுகிறது.
அதிமுக கூட்டணி ம.தி.மு.க. ...Wednesday, April 08, 2009 4:48 PM
சென்னை, அ.தி.மு.க. கூட்டணி யில் இடம் பெற்றுள்ள பா.ம.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. பா.ம.க. 7 தொகுதியிலும், கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. பா.ம.க.வும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் வேட்பாளர்களை அறிவித்து விட்டன.
ம.தி.மு.க.வுக்கு தொகுதி கள் ஒதுக்குவது தொடர்பாக 4 கட்ட பேச்சு நடந்த பிறகும் உடன்பாடு ஏற்படாமல் இழுபறி ஏற்பட்டது. ம.தி.மு.க. 5 தொகுதிகள் கேட்டது. அ.தி.மு.க. தரப்பில் 3 தொகுதிகளே ஒதுக்க முன் வந்தது. இதை ம.தி.மு.க. ஏற்க மறுத்ததால் பேச்சு வார்த்தை நீடித்தது. இதனால் ம.தி.மு.க.வினர் அதிருப்தியில் இருந்தனர்.
ம.தி.மு.க.வுக்கு தொகுதி கள் ஒதுக்குவது தொடர்பாக 4 கட்ட பேச்சு நடந்த பிறகும் உடன்பாடு ஏற்படாமல் இழுபறி ஏற்பட்டது. ம.தி.மு.க. 5 தொகுதிகள் கேட்டது. அ.தி.மு.க. தரப்பில் 3 தொகுதிகளே ஒதுக்க முன் வந்தது. இதை ம.தி.மு.க. ஏற்க மறுத்ததால் பேச்சு வார்த்தை நீடித்தது. இதனால் ம.தி.மு.க.வினர் அதிருப்தியில் இருந்தனர்.
பிரபாகரன் மீது துரும்பு ...Wednesday, April 08, 2009 4:40 PM
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மீது சிறு துரும்பு விழுந்தாலும் தமிழ்நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளதுடன் விடுதலைப் புலிகளை எவரும் அழிக்க முடியாது என்றும் சூளுரைத்துள்ளார்.
உலகத் தமிழர்களிடம் கலைஞர் ...Wednesday, April 08, 2009 4:37 PM
உலகத் தமிழர்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இலங்கை அரசாங்கம் இரசாயன ஆயுதங்களை ...Wednesday, April 08, 2009 4:00 PM
கடந்த வாரம் இராணுவத்தினர் புதுக்குடியிருப்பில் மேற்கொண்ட தாக்குதல்களின் போது, இரசாயன ஆயுதங்களை பாவித்துள்ளனர் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல்களில் இருந்து தப்பி வந்த விடுதலைப் புலிகளின் தளபதியான லாரன்ஸ் இந்த தகவலினை வெளியிட்டுள்ளார்.
இந்த தாக்குதல்களில் இருந்து தப்பி வந்த விடுதலைப் புலிகளின் தளபதியான லாரன்ஸ் இந்த தகவலினை வெளியிட்டுள்ளார்.
சிதம்பரம் தொகுதியில் தொல். ...Wednesday, April 08, 2009 3:53 PM
சென்னை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களாக தொழில் அதிபர் மடிப்பாக்கம் வேலாயுதமும், சிதம்பரம் தொகுதியின் வேட்பாளராக விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும், அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
10-ம் வகுப்பு தேர்வுத்தாள் ...Wednesday, April 08, 2009 3:25 PM
சென்னை, எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வுத் தாள்கள் திருத்தும் பணி வரும் 15-ம் தேதி துவங்குகிறது.
புதுச்சேரி அரசுக்கு அளித்து வந்த ...Wednesday, April 08, 2009 3:24 PM
புதுச்சேரி, புதுச்சேரி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாட்டாளி மக்கள் கட்சி வாபஸ் பெற்றுள்ளது.
கூட்டணி குறித்து பேச மதிமுக ...Wednesday, April 08, 2009 3:35 AM
சென்னை, பாரதீய ஜனதா கட்சித்தலைவர் இல.கணேசன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சோனியா காந்தியை போலவே ராகுல்காந்தியும் வேட்புமனுவில் தன்னுடைய கல்வி பற்றி தவறான தகவல் அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? வருண்காந்திக்கு ஒரு நியாயம்? ராகுல்காந்திக்கு ஒரு நியாயமா?
லாலுபிரசாத் யாதவ், ஒரு குறிப்பிட்ட நபரை ரோடுரோலரை ஏற்றி நசுக்கி கொல்வேன் என்று பகிரங்கமாக சொல்லியிருக்கிறார். கொடூரமான வாசகங்களை உதிர்த்திருக்கிறார். லாலு பிரசாத் யாதவ் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும்.
சோனியா காந்தியை போலவே ராகுல்காந்தியும் வேட்புமனுவில் தன்னுடைய கல்வி பற்றி தவறான தகவல் அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? வருண்காந்திக்கு ஒரு நியாயம்? ராகுல்காந்திக்கு ஒரு நியாயமா?
லாலுபிரசாத் யாதவ், ஒரு குறிப்பிட்ட நபரை ரோடுரோலரை ஏற்றி நசுக்கி கொல்வேன் என்று பகிரங்கமாக சொல்லியிருக்கிறார். கொடூரமான வாசகங்களை உதிர்த்திருக்கிறார். லாலு பிரசாத் யாதவ் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும்.
இலங்கையில் போர் நிறுத்த கோரி - ...Wednesday, April 08, 2009 3:32 AM
சென்னை, இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. அப்பாவி தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இலங்கை ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகிறது. கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றிய இலங்கை ராணுவம் தற்போது புதுக்குடியிருப்பு பகுதியில் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.
இலங்கை இராணுவத்தில் இந்திய இராணுவ ...Tuesday, April 07, 2009 5:03 PM
இலங்கையின் வட பகுதியில் சிங்கள இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்களும் பங்கெடுத்துள்ளதாகவும், இந்திய வீரர்கள் இரு படைப் பிரிவுகளில் இடம் பெற்றிருப்பதாகவும், இந்திய இராணுவ அதிகாரிகள், இலங்கைப் படையினரை வழி நடத்தி வருவதாகவும் பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கை தமிழர்களின் ஒவ்வொரு துளி ...Tuesday, April 07, 2009 4:46 PM
இலங்கை இராணுவத்தினர் புதுக்குடியிருப்பை கைப்பற்றியதாக அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் தமது அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்ககழகம் நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த போராட்டத்தின் இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் ஒன்றினை அறிவிக்கை வேண்டும் என அவர்கள் வலியுறுத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்ககழகம் நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த போராட்டத்தின் இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் ஒன்றினை அறிவிக்கை வேண்டும் என அவர்கள் வலியுறுத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருணாசல பிரதேச ஜனாதிபதி ...Tuesday, April 07, 2009 4:41 PM
ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் அருணாசல பிரதேச சுற்றுப்பயணத்துக்கு சீனா ஆட்சேபம் தெரிவித்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் சீனாவை ஒட்டியுள்ள அருணாசலபிரதேசத்துக்கு வெகுநாட்களாகவே சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. பிரதமர் மன்மோகன்சிங் அருணாசல் சென்ற போதும் ஆட்சேபணை தெரிவித்தது. இதற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதி என நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன்சிங் திட்டவட்டமாக அறிவித்தார்.
இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் சீனாவை ஒட்டியுள்ள அருணாசலபிரதேசத்துக்கு வெகுநாட்களாகவே சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. பிரதமர் மன்மோகன்சிங் அருணாசல் சென்ற போதும் ஆட்சேபணை தெரிவித்தது. இதற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதி என நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன்சிங் திட்டவட்டமாக அறிவித்தார்.
இத்தாலி பூகம்பம் 150 க்கு ...Tuesday, April 07, 2009 4:40 PM
இத்தாலியின் அப்ரூசோ மாநிலத்தில் 26 நகரங்களில் நேற்று அதிகாலை பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதில் 15 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. தலைநகர் அக்யூல்லாவில் பள்ளி மாணவர் விடுதி ஒன்றும் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் பலியாயினர். மீட்பு பணிகள் நேற்று உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. இதுவரை 150க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என கருதப்படுகிறது. காயம் அடைந்த 1500 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர்.
மும்பை, கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் ...Tuesday, April 07, 2009 4:36 PM
சேலம், மும்பையில் இருந்து கோவை வரும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் மூன்று பயணிகள் மயங்கி கிடந்தனர். இவர்களுக்கு கொள்ளை கும்பல் மயக்க மருந்து கொடுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மும்பையிலிருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட குர்லா எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று இரவு 9.30 மணியளவில் பெங்களூர் வந்தது. அப்போது மூன்றடுக்கு ஏசி பெட்டியில் மூன்று பயணிகள் மயங்கி கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் இதுகுறித்து விசாரிப்பதற்குள், பெங்களூரில் இருந்து ரயில் புறப்பட்டு விட்டது. இதுகுறித்து பெங்களூர் ரயில்வே போலீசார், சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
மும்பையிலிருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட குர்லா எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று இரவு 9.30 மணியளவில் பெங்களூர் வந்தது. அப்போது மூன்றடுக்கு ஏசி பெட்டியில் மூன்று பயணிகள் மயங்கி கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் இதுகுறித்து விசாரிப்பதற்குள், பெங்களூரில் இருந்து ரயில் புறப்பட்டு விட்டது. இதுகுறித்து பெங்களூர் ரயில்வே போலீசார், சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை ...Tuesday, April 07, 2009 4:32 PM
தமிழகத்தில் மே 13ம் தேதி மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 17ம் தேதி துவங்குகிறது. தேர்தலுக்காக ஒவ்வொரு கட்டமாக பல்வேறு நிலைகளில் உள்ள அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் பயிற்சி அளித்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தின் 32 மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள், நேர்முக உதவியாளர்கள் (தேர்தல்) மற்றும் தாசில்தார் களுக்கு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கவும், பயிற்சி அளிக்கவும் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா ஏற்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தின் 32 மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள், நேர்முக உதவியாளர்கள் (தேர்தல்) மற்றும் தாசில்தார் களுக்கு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கவும், பயிற்சி அளிக்கவும் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா ஏற்பாடு செய்துள்ளார்.
எந்த எந்த ஆவணங்களை காட்டி ஓட்டு ...Tuesday, April 07, 2009 4:16 PM
புதுடெல்லி, புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் அதற்கு மாற்றாக பயன்படுத்தக் கூடிய 13 ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில், ரேஷன் அட்டை இடம் பெறவில்லை.
மக்களவைக்கு வரும் 16ம் தேதி முதல் மே 13 வரை ஐந்து கட்டமாக தேர்தல் நடக்கிறது.
மக்களவைக்கு வரும் 16ம் தேதி முதல் மே 13 வரை ஐந்து கட்டமாக தேர்தல் நடக்கிறது.
அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வு ...Tuesday, April 07, 2009 4:11 PM
சென்னை, அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வு முறையை எதிர்த்து ஐகோட்டில் தொடரப்பட்ட வழக்கில் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கோவை பொறியியல் கல்லூரிகள் நிர்வாக சங்கத்தின் தலைவர் சுதானந்தன், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:
கோவை பொறியியல் கல்லூரிகள் நிர்வாக சங்கத்தின் தலைவர் சுதானந்தன், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:
அதிமுக,மதிமுக தொகுதி பங்கீட்டில் ...Tuesday, April 07, 2009 4:08 PM
சென்னை, அதிமுக கூட்டணியில் மதிமுகவுடன் மட்டும் இன்னும் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை. இதுகுறித்து இன்றும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், பாமக, மார்¢க்சிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணியில் புதிதாக சேர்ந்த பாமகவுக்கு எடுத்த எடுப்பிலேயே 7 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதன்பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 இடங்கள் தரப்பட்டது. மார்க்சிஸ்ட்டுக்கும் மதிமுகவுக்கும்தான் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது. கேட்ட தொகுதிகள் கிடைக்காததாலும் கூடுதல் தொகுதிகள் கேட்டதாலும் இந்த சிக்கல் தொடர்ந்தது.
அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், பாமக, மார்¢க்சிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணியில் புதிதாக சேர்ந்த பாமகவுக்கு எடுத்த எடுப்பிலேயே 7 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதன்பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 இடங்கள் தரப்பட்டது. மார்க்சிஸ்ட்டுக்கும் மதிமுகவுக்கும்தான் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது. கேட்ட தொகுதிகள் கிடைக்காததாலும் கூடுதல் தொகுதிகள் கேட்டதாலும் இந்த சிக்கல் தொடர்ந்தது.
சோமாலிய கடற்கொள்ளையர்கள் ஜெர்மன் ...Tuesday, April 07, 2009 4:01 PM
சோமாலிய கடற்கொள்ளையர்கள் 22,000 டன் எடை கொண்ட ஜெர்மன் நாட்டு சரக்கு கப்பல் ஒன்றை இந்திய பெருங்கடல் பகுதியில் கடத்தியுள்ளனர்.
கென்யாவுக்கும் ஷெஷல்ஸ்க்கும் இடைப்பட்ட இடத்தில், சோமாலிய கடற்கரையில் இருந்து சுமார் 400 கடல் மைல்களுக்கு அப்பால் இந்த கப்பலை இவர்கள் பிடித்துள்ளனர்.
கென்யாவுக்கும் ஷெஷல்ஸ்க்கும் இடைப்பட்ட இடத்தில், சோமாலிய கடற்கரையில் இருந்து சுமார் 400 கடல் மைல்களுக்கு அப்பால் இந்த கப்பலை இவர்கள் பிடித்துள்ளனர்.
வருண்காந்தியை தாக்கி பேசிய லாலு ...Tuesday, April 07, 2009 3:38 PM
பாட்னா, வருண்காந்தியை தாக்கிய பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மீது மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் கிருஷணன்கஞ்சில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பேசுகையில், Ôநான் மட்டும் உள்துறை அமைச்சராக இருந்திருந்தால், முஸ்லிம்களுக்கு எதிராக பேசிய வருண்காந்தியை ரோடு ரோலர் ஏற்றி நசுக்கியிருப்பேன்Õ என்றார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
பீகார் மாநிலம் கிருஷணன்கஞ்சில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பேசுகையில், Ôநான் மட்டும் உள்துறை அமைச்சராக இருந்திருந்தால், முஸ்லிம்களுக்கு எதிராக பேசிய வருண்காந்தியை ரோடு ரோலர் ஏற்றி நசுக்கியிருப்பேன்Õ என்றார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
நியூசிலாந்தில், 41 ஆண்டுக்கு பின் ...Tuesday, April 07, 2009 3:11 PM
வெலிங்டன், நியூசிலாந்து மண்ணில் 41 ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சாதனை படைத்தது. வெலிங்டனில் நடந்த கடைசி போட்டியில் இந்தியாவின் வெற்றியை மழை தட்டிப் பறித்தது.
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து இரு அணிகளும் 3 டெஸ்ட் கொண்ட தொடரில் மோதின. ஹாமில்டனில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. நேப்பியரில் நடந்த 2-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து இரு அணிகளும் 3 டெஸ்ட் கொண்ட தொடரில் மோதின. ஹாமில்டனில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. நேப்பியரில் நடந்த 2-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
No comments:
Post a Comment