SANGAMAM - LIVE NEWS

Friday, April 10, 2009

புலி ஆதரவுப் பேச்சு - வைகோ மீது நடவடிக்கை இல்லை தேர்தல் கமிஷன்

சென்னை, இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று முன்தினம் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசிய போது, விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் மீது சிறு துரும்பு விழுந்தாலும் தமிழ்நாட்டில் ரத்த ஆறு ஓடும் என்று கூறினார்.

வைகோவின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியது தவறு என்று புகார் கூறப்பட்டது. வைகோவின் பேச்சை வடக்கு கடற்கரை போலீசார் வீடியோவில் பதிவு செய்திருந்தனர்.



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails