வாசிங்டன். போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற எங்களது வேண்டுகோளுக்கோ அல்லது உலகச் சமுதாயத்தின் வேண்டுகோளுக்கோ இலங்கை அரசு செவி சாய்க்க மறுப்பது குறித்து அமெரிக்க அரசு ஏமாற்றம் தெரிவித்துள்ளது. இலங்கை நிலைமை இடர் மிக்கதாக உள்ளது என்றும் அது கூறியுள்ளது.
அமெரிக்கா அரசின் வேண்டுகோளுக்கு மட்டுமின்றி, பரந்த பன்னாட்டுச் சமுதாயத்தின் வேண்டுகோளுக்கும் மோதலில் ஈடுபட்டுள்ள தரப்புகள் செவிசாய்க்க மறுக்கின்றன என்பதுதான் இப்போதுள்ள சிக்கல் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இராபர்ட் உட் கூறியுள்ளார்.
அமெரிக்கா அரசின் வேண்டுகோளுக்கு மட்டுமின்றி, பரந்த பன்னாட்டுச் சமுதாயத்தின் வேண்டுகோளுக்கும் மோதலில் ஈடுபட்டுள்ள தரப்புகள் செவிசாய்க்க மறுக்கின்றன என்பதுதான் இப்போதுள்ள சிக்கல் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இராபர்ட் உட் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment