SANGAMAM - LIVE NEWS

Sunday, April 26, 2009

இலங்கை இரண்டாக உடைந்து விடும் : அமெரிக்கா எச்சரிக்கை

நியூயார்க். இலங்கையில் உடனடியாக போரை நிறுத்தாவிட்டால் அந்த நாடு இரண்டாக உடைந்துவிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. மேலும், தமிழர்களின் நிலைமை குறித்து விசாரிப்பதற்காக ஐ.நா. மனிதநேய பிரிவு தலைவர் ஜான் ஹோம்ஸ், 3 நாள் பயணமாக கொழும்பு சென்றார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து ஒரு லட்சத்து 9 ஆயிரம் தமிழர்கள் தப்பி வந்துவிட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. மேலும், சில ஆயிரம் பேர் மட்டுமே அங்கு இருப்பதாக கூறி வருகிறது. ஆனால், போர் நடைபெறும் பகுதிக்குள் இன்னும் 50 ஆயிரம் பேர் இருப்பதாக ஐ.நா. சபை மதிப்பீடு செய்து உள்ளது.



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails