SANGAMAM - LIVE NEWS

Monday, April 27, 2009

கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் ஏன்?

ஆறேழுமாதங்களாக இலங்கையில் இட்லர் அராசபக்சேவின் அகோரபசிக்கு ஈழத்தமிழர்கள் நாள்தோறும் இரையாகி, வாழும் இல்லங்களே அவர்களுக்கு கல்லறையாக மாறியது; இல்லங்களை விட்டு காடுகளில் தஞ்சம் புகுந்தனர் நம் தமிழர்கள். அவர்கள் நொடிக்கு நொடி மரணபயத்தோடு மரத்தடிகளில் வானமே கூரையாகக் கொண்டு இருந்தபோதுகூட குண்டுகளை வீசி குடும்பம் குடும்பமாக கொன்று குவித்து எங்கும் பிணக்காடாக மாற்றி மகிழ்ந்தது மகிந்தவின் அரசு. சரணடையுங்கள் அல்லது செத்து மடியுங்கள் http://thelede.blogs.nytimes.com/2009/04/20/endgame-in-sri-lanka/?hp என்ற குறிக்கோளோடு கொன்று குவித்துவருகிறது. தங்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாகி இருக்கும் இந்த‌ நேரத்தில் யாராவது போரை நிறுத்த மாட்டார்களா, இந்த மரணபயத்திலிருந்து விடுதலை கிடைக்காதா? என்று தம் தொப்புள்கொடி உறவாக எண்ணியிருக்கும் தமிழகத்தை எதிர்பார்த்தனர். ஆனால் நடந்தது என்ன?



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails