SANGAMAM - LIVE NEWS

Monday, April 27, 2009

அட்சய திரிதியையின் பெருமை

குறைவில்லாத நிறைவு அதுதான் அட்சயம் என்ற சொல்லின் பொருள். வளரக்கூடியது; பெருகக் கூடியது; செழித்தோங்கக் கூடியது அட்சயம் எனப்படும்.

அட்சய திரிதியைப் பற்றி வெவ்வேறுவிதமான வரலாறுகளை அண்மைக்
காலத்தில் சொல்லி வருகிறார்கள். வளர்ச்சி தொடர்பாக சொல்லப்படும் புராணக் கதைகள் அவை.

மணிமேகலை மாதவியின் மகள். இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையின் பாட்டுடைத் தலைவி சீத்தலைச் சாத்தனார் என்பவரால் எழுதப்பட்டதுதான் மணிமேகலை. இந்த நூலில் மணிமேகலையின் கையில் ஒரு அமுதசுரபி இருந்தது. அது ஆபுத்திரன் கையில் இருந்த அமுதசுரபி. அள்ள அள்ளக் குறையாமல் வளரக்கூடிய தன்மை படைத்த பாத்திரத்தைத் தான் அட்சய பாத்திரம் என்று சொல்வார்கள்.



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails