SANGAMAM - LIVE NEWS

Monday, March 9, 2009

புதுக்குடியிருப்பு, புலிகள் தாக்குதலில் 100 ராணுவத்தினர் பலி

புதுக்குடியிருப்பை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் இலங்கை ராணுவத்தினர் மேற்கொண்ட பெரிய அளவிலான முற்றுகை விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த சண்டையின் பொழுது இலங்கை ராணுவத்திற்கு மிகப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக படையினரின் உடல்களும், ஆயுதங்களும் சண்டை நடைபெற்ற பகுதி முழுவதும் சிதறிக் கிடப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் , சாலைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முயற்சியை முறியடித்துள்ளதாகவும், விடுதலைப் புலிகளின் உடல்களை பெருமளவில் தாம் கைப்பற்றியிருப்பதாகவும் ராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails