SANGAMAM - LIVE NEWS

Wednesday, March 18, 2009

3 வது அணி ஆட்சி அமைப்பது கடினம் - ஜோதிபாசு ஆருடம்

கொல்கத்தா, மார்ச் 18- மத்தியில் பா.ஜ. மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு மாற்றாக 3-வது அணி ஆட்சி அமைப்பது மிக கடினம் என மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான ஜோதிபாசு தெரிவித்துள்ளார்.

மத்தியில் 4 ஆண்டுகளாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்து வந்த இடதுசாரிகள் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த பிரச்னை காரணமாக ஆதரவை விலக்கிக் கொண்டனர். அதன் பிறகு 3-வது அணி அமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கினர். ஆரம்பத்தில் சமாஜ்வாடி, தெலுங்கு தேசம், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து 3-வது அணி உருவானது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கவிழாமல் இருக்க சமாஜ்வாடி உதவி நாடப்பட்டது. இதை தொடர்ந்து 3-வது அணி கலைந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து மாயாவதி விலகுவதாக அறிவித்தார். அவரது தலைமையில் மீண்டும் 3-வது அணி அமைந்தது. இதன் பின் தன்னிச்சையாக உ.பி. தொகுதிகள் அனைத்துக்கும் மாயாவதி வேட்பாளர்களை அறிவித்தார். இதனால் மீண்டும் 3-வது அணி பேச்சு முடங்கியது.

மேலும் படிக்க...


allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails