சென்னை, மார்ச் 10- ஐகோர்ட் வக்கீல்கள் மற்றும் போலீசார் மோதல் வழக்கு குறித்து விசாரணை நடத்துவதற்காக முகோபாத்யா தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்சை தலைமை நீதிபதி கோகலே இன்று நியமித்தார்.
சென்னை ஐகோர்ட்டில் கடந்த மாதம் 19-ம் தேதி வக்கீல்களுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. மோதல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மோதல் மற்றும் வக்கீல்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஒரு கமிஷனை நியமித்தது. நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா சென்னை வந்து இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினார். மோதல் சம்பவம் நடந்த ஐகோர்ட் வளாகத்தையும் பார்வையிட்டார். விசாரணை குறித்த அறிக்கையை கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனிடம் தாக்கல் செய்தார். அதில், மோதலுக்கு இரு தரப்பினரும் காரணம் என்றும், தற்காலிக தலைமை நீதிபதியின் மெத்தனமும் இதற்கு காரணமாக அமைந்துவிட்டது என்றும் கூறியிருந்தார்.
சென்னை ஐகோர்ட்டில் கடந்த மாதம் 19-ம் தேதி வக்கீல்களுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. மோதல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மோதல் மற்றும் வக்கீல்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஒரு கமிஷனை நியமித்தது. நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா சென்னை வந்து இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினார். மோதல் சம்பவம் நடந்த ஐகோர்ட் வளாகத்தையும் பார்வையிட்டார். விசாரணை குறித்த அறிக்கையை கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனிடம் தாக்கல் செய்தார். அதில், மோதலுக்கு இரு தரப்பினரும் காரணம் என்றும், தற்காலிக தலைமை நீதிபதியின் மெத்தனமும் இதற்கு காரணமாக அமைந்துவிட்டது என்றும் கூறியிருந்தார்.
No comments:
Post a Comment