புதுடெல்லி, மார்ச் 18- மக்களவை தேர்தலை ஒட்டி ஐபிஎல் 20-20 அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி டெல்லி, ஜெய்ப்பூர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் போட்டி நடைபெறாது என அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் சென்னையில் நடைபெறும் ஆட்டங்களும் குறைக்கப்பட்டுள்ளன.
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் தொடங்கப்பட்ட ஐபிஎல் அமைப்பு கடந்த ஆண்டு 20-20 போட்டியை நடத்தியது. இதில் விளையாட உலகின் முன்னணி வீரர்கள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு இந்த தொடர் பெரும் வெற்றியை பெற்றது. இதையடுத்து இந்த ஆண்டுக்கான ஐபிஎல் 20-20 தொடர் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கி மே 26 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் தொடங்கப்பட்ட ஐபிஎல் அமைப்பு கடந்த ஆண்டு 20-20 போட்டியை நடத்தியது. இதில் விளையாட உலகின் முன்னணி வீரர்கள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு இந்த தொடர் பெரும் வெற்றியை பெற்றது. இதையடுத்து இந்த ஆண்டுக்கான ஐபிஎல் 20-20 தொடர் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கி மே 26 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment