SANGAMAM - LIVE NEWS

Wednesday, March 4, 2009

அரசியலில் இருந்து கருணாநிதிக்கு நிரந்தர ஓய்வு தேவை ! - ஜெயலலிதா

முழு நேர அரசியலில் இருந்து கருணாநிதி நிரந்தர ஓய்வு எடுத்துக் கொள்வதுதான் அவருக்கும் நல்லது, தமிழக மக்களுக்கும் நல்லது என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதன் விபரம் வருமாறு:

கடந்த 19ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சம்பவத்தில் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறையே வன்முறையில் ஈடுபட்டு அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக தாக்கியது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச் செயலாகும்.

இதே போன்று திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச்செயல் தான் ஜாலியன்வாலா பாக் படுகொலை. ஆனால், கருணாநிதியால் குறிப்பிடப்படும் மகாமகம் சம்பவம் தற்செயலாக நடைபெற்ற ஒரு விபத்து.

உச்ச நீதிமன்றம் கருணாநிதியை பதில் அளிக்கச் சொல்லவில்லை, காவல் துறையைத்தான் பதில் அளிக்கச் சொன்னது என்று தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கிறார்.


allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails