SANGAMAM - LIVE NEWS

Tuesday, March 3, 2009

அமலுக்கு வந்தது தேர்தல் விதிமுறைகள், வேட்பாளர் செலவை கண்காணிக்க குழு

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. அமைச்சர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பயன்படுத்தும் அரசு வாகனங்களை திரும்ப ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் செலவை கண்காணிக்க, வருமான வரித்துறை சார்பிலும் தனிக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

மக்களவைக்கு ஏப்ரல் 16-ல் துவங்கி மே 13 வரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக மே 13-ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் நேற்று மாலை வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகளும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails