உலகில் உள்ள முக்கிய திருவிழாக்கள் அனைத்தும் ஆரம்பம் எப்படியோ ஆனால் மக்களின் மனதில் உள்ள இறுக்கங்களை போக்கி கொள்ளவும், வாழ்க்கையின் சுவையை அன்று ஒரு நாளாவது அனைவருடன் சேர்ந்து கொண்டாடி மகிழவும், தங்களுக்குள் உள்ள இருக்கங்களை போக்கி, சிற் சில சிறிய பெரிய காரணங்களால் மனவருத்தம் ஏற்பட்டிருந்தால் அந்த வருத்தங்கள் நீங்கி, புதுப்பிக்கும் திருநாளாக விழாக்களை பயன்படுத்தி கொள்ள விழாக்களை நமது மூதாதையார்கள் உருவாக்கினர்.
இந்த விழாக்கள் அனைத்தும் தோன்ற காரணம் இதற்காத்தான் மற்ற கதை, கற்பனை, புராணங்கள் எல்லாம் பிறகுதான். இதற்கு நல்ல உதாரனம் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர். மதுரை நகரம் முழுவதும் இணைந்து ஒரு விழாவை கொண்டாட வேண்டும். அந்த விழாவில் ஏழை முதல் பணக்காரர் வரை இணைந்து தங்களில் மன இறுக்கங்களை போக்கி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். அதன் விளைவாக அமைச்சர்களிடமும் மற்றும் சமய பெரியவர்களிடமும் ஆலோசித்து தான் மீனாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சியுடன் மதுரையில் இருந்து பல கிலோ மீட்டர் தூரம் உள்ள அழகர் பெருமானை மதுரைக்கு கொண்டு வரும் சித்திரைத்திருவிழா தொடங்கியது. இதில் திருமலை நாயக்கரின் பார்மூலா வெற்றிபெற்றது.
ஆம் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஊர்களின் மக்கள் அனைவரும் சித்திரை திருவிழா என்றால் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.
இன்றைய ஏழை பணக்கார பேதம் மிகுந்த சமயத்தில் தீபாவளி போன்ற பண்டிகைகளில் பணக்காரர்கள் பகட்டு உடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடுவதும், ஏழை குழந்தைகள் அவர்களை பரிதாப கண்களுடன் பார்ப்பதும் இது ஒரு கொண்டாட்டமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு போய்விட்டது.
பல ஏழை குடும்பங்களில் இது போன்ற விழாக்களில் தங்களின் குழந்தைகளை மகிழ்விக்க அவர்கள் எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பது ஏழை குடும்பத்தில் இருந்து வந்த பலருக்கு தெரியும். இதனால் தான் தமிழர்கள் இது போன்ற பகட்டான விழாக்களை தவிர்த்து உழைப்பிற்கு உறுதி சேர்க்கும் பொங்கல் திருவிழா, கோடையில் சித்திரை திருவிழா, புதுவருடம், மற்றும் வசந்த விழா என பல கொண்டாடி வந்தனர்.
இந்த விழாக்கள் அனைத்தும் தோன்ற காரணம் இதற்காத்தான் மற்ற கதை, கற்பனை, புராணங்கள் எல்லாம் பிறகுதான். இதற்கு நல்ல உதாரனம் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர். மதுரை நகரம் முழுவதும் இணைந்து ஒரு விழாவை கொண்டாட வேண்டும். அந்த விழாவில் ஏழை முதல் பணக்காரர் வரை இணைந்து தங்களில் மன இறுக்கங்களை போக்கி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். அதன் விளைவாக அமைச்சர்களிடமும் மற்றும் சமய பெரியவர்களிடமும் ஆலோசித்து தான் மீனாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சியுடன் மதுரையில் இருந்து பல கிலோ மீட்டர் தூரம் உள்ள அழகர் பெருமானை மதுரைக்கு கொண்டு வரும் சித்திரைத்திருவிழா தொடங்கியது. இதில் திருமலை நாயக்கரின் பார்மூலா வெற்றிபெற்றது.
ஆம் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஊர்களின் மக்கள் அனைவரும் சித்திரை திருவிழா என்றால் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.
இன்றைய ஏழை பணக்கார பேதம் மிகுந்த சமயத்தில் தீபாவளி போன்ற பண்டிகைகளில் பணக்காரர்கள் பகட்டு உடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடுவதும், ஏழை குழந்தைகள் அவர்களை பரிதாப கண்களுடன் பார்ப்பதும் இது ஒரு கொண்டாட்டமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு போய்விட்டது.
பல ஏழை குடும்பங்களில் இது போன்ற விழாக்களில் தங்களின் குழந்தைகளை மகிழ்விக்க அவர்கள் எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பது ஏழை குடும்பத்தில் இருந்து வந்த பலருக்கு தெரியும். இதனால் தான் தமிழர்கள் இது போன்ற பகட்டான விழாக்களை தவிர்த்து உழைப்பிற்கு உறுதி சேர்க்கும் பொங்கல் திருவிழா, கோடையில் சித்திரை திருவிழா, புதுவருடம், மற்றும் வசந்த விழா என பல கொண்டாடி வந்தனர்.
No comments:
Post a Comment