பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:-
விரக்தியின் விளிம்பிற்கும், கோபத்தின் உச்சிக்கும் சென்றுவிட்டால், ஒருவர் எப்படியெல்லாம் பேசுவார், எழுதுவார் என்பதற்கு முதலமைச்சர் கலைஞரின் " கள்ளத் தோணி" கருத்து சிறந்த எடுத்துக்காட்டக அமைந்திருக்கிறது. நாளைக்கே தோணிகளைத் தயார் செய்யட்டும்; அவை கள்ளத் தோணிகளாக இருந்தாலும் பரவாயில்லை; அவற்றில் படைகளை ஏற்றிச்செல்லட்டும், இராணுவ அணிவகுப்பு நடத்தட்டும்; யார் குறுக்கே நிற்கிறார்கள்; நாங்கள் கண்கொட்டாமல் அவற்றைப் பாத்துக் களிக்கிறோம், கைதட்டி ஜெயகோஷம் போடுகிறோம் என்றெல்லாம் முதலமைச்சர் கோபம் கொப்பளிக்க கதைத்திருக்கிறார்.
விரக்தியின் விளிம்பிற்கும், கோபத்தின் உச்சிக்கும் சென்றுவிட்டால், ஒருவர் எப்படியெல்லாம் பேசுவார், எழுதுவார் என்பதற்கு முதலமைச்சர் கலைஞரின் " கள்ளத் தோணி" கருத்து சிறந்த எடுத்துக்காட்டக அமைந்திருக்கிறது. நாளைக்கே தோணிகளைத் தயார் செய்யட்டும்; அவை கள்ளத் தோணிகளாக இருந்தாலும் பரவாயில்லை; அவற்றில் படைகளை ஏற்றிச்செல்லட்டும், இராணுவ அணிவகுப்பு நடத்தட்டும்; யார் குறுக்கே நிற்கிறார்கள்; நாங்கள் கண்கொட்டாமல் அவற்றைப் பாத்துக் களிக்கிறோம், கைதட்டி ஜெயகோஷம் போடுகிறோம் என்றெல்லாம் முதலமைச்சர் கோபம் கொப்பளிக்க கதைத்திருக்கிறார்.
No comments:
Post a Comment