SANGAMAM - LIVE NEWS

Sunday, March 1, 2009

துபாயில் மானுட‌ வ‌ச‌ந்த‌ம், டாக்ட‌ர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது பங்கேற்பு

துபாய் ஈமான் அமைப்பு சார்பாக மானுட வசந்தம் நிகழ்ச்சி இந்திய கன்சுலேட் அரங்கில் நடைபெற்றது

இந்நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் தலைவர் செய்யது எம். ஸலாஹுத்தீன் தலைமை வகித்தார்.

ஹாபிஸ் முஹம்மது இப்ராஹிம் இறைவசனங்களையும், அதன் தமிழ் மொழியாக்கத்தை ஈமான் விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன் வாசித்தனர்.

ஈமான் அமைப்பின் துணைத்தலைவர்கள் எம்.அப்துல் கத்தீம், ஏ. அஹமது முஹைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ.
லியாக்கத் அலி அனைவரையும் வரவேற்றார்.

ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் துவக்கவுரை நிகழ்த்தினார். அவ‌ர் த‌ன‌து உரையில் ஒரு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப‌ர‌ப்பாகிவ‌ரும் மானுட‌ வச‌ந்த‌ம் நிக‌ழ்ச்சி துபாயிலும் ஈமான் அமைப்பின் சார்பில் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு ச‌கோத‌ர‌ ச‌முதாய‌ ம‌க்க‌ள் இஸ்லாம் குறித்த‌ த‌ங்க‌ள‌து ஐய‌ப்பாடுக‌ளுக்கு உரிய‌ விள‌க்க‌த்தை டாக்ட‌ர் கே.வி.எஸ். ஹ‌பீப் முஹ‌ம்ம‌து அவ‌ர்க‌ள் மூல‌ம் பெற‌ வேண்டும் என‌ ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. நாம் ப‌ல்வேறு ம‌த‌ங்க‌ளைச் சார்ந்த‌வ‌ர்க‌ளாக‌ இருந்தாலும் ம‌ன‌ங்க‌ளால் ஒத்த‌வ‌ர்க‌ள். ம‌னித‌நேய‌த்தை வ‌லியுறுத்தாத‌ ச‌முதாய‌ம் இல்லை. இத‌னைப் புரிந்து கொண்டு நாம் அனைவ‌ரும் ஒரு குடும்ப‌மாக‌ இணைந்து செய‌ல்ப‌ட‌ இந்நிக‌ழ்ச்சி பெரிதும் உத‌வும் என்ற‌ ந‌ன்னோக்கில் துபாய் ஈமான் அமைப்பு இம்மானுட‌ வ‌சந்த‌ம் நிக‌ழ்ச்சியினை வ‌ழ‌ங்குகிற‌து. என பேசினார்.



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails