திருச்செங்கோடு,மார்ச்.14- திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி மற்றும் தமிழ்மணம் இணையதளம் இணைந்து தமிழ் இணைய பயிலரங்கினை நடத்தின.
இந்த பயிலரங்கில் கல்லூரி மாணவ,மாணவியருடன் தமிழகத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் இணைய ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி மற்றும் தமிழ்மணம்.நெட் இணைய தளமும் இணைந்து தமிழ் இணையதளங்களும், வலைப்பூக்களும் எனும் தலைப்பில் இணைய பயிலரங்கினை நடத்தின. இந்த பயிலரங்கிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் நா.கண்ணன் தலைமை வகித்தார். கல்லூரியின் முதுநிலை விரிவுரையாளர் மா.கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் இரா. சந்திரசேகரன் அறிமுகவுரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் முனைவர் கண்ணன் தனது தலைமை உரையில் மாணவர்கள் இணையதளங்களை நன்முறையில் நல்ல விசயங்களுக்கு பயன்படுத்த வேண்டும், இணையம் இன்று நல் அறிவு பகிர்விற்கு பயன்பட்டு வருகிறது, இணைய தளங்களில் பல்வேறு நூல்கள் இருந்தாலும் அவை நேரில் ஒரு நூலினை படிக்கும் அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும். நல்ல செய்திகளை நல்ல முறையில் பரப்ப வேண்டும் என பேசினார்.
இதனைத் தொடர்ந்து கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வலைப்பூக்களை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் தமிழ் ஆராய்ச்சியாளரும், கல்வெட்டு ஆராய்ச்சியாளரும், கொங்கு ஆய்வு மையம் பேராசிரியர் புலவர் செ.இராசு அவர்கள் சிறப்புரையாற்றினார். அப்பொழுது அவர் தமிழர்கள் அறிவியலின் முன்னோடிகளாக சிறந்து விளங்கியதையும், கலை, பண்பாடு, மரபு, பாரம்பரியம் ஆகியவை இதற்கு வித்தாக அமைந்தது எனவும் பேசினார் ( இவரின் முழுமையான உரையினை வீடியோவில் காண்க).
இந்த பயிலரங்கில் கல்லூரி மாணவ,மாணவியருடன் தமிழகத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் இணைய ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி மற்றும் தமிழ்மணம்.நெட் இணைய தளமும் இணைந்து தமிழ் இணையதளங்களும், வலைப்பூக்களும் எனும் தலைப்பில் இணைய பயிலரங்கினை நடத்தின. இந்த பயிலரங்கிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் நா.கண்ணன் தலைமை வகித்தார். கல்லூரியின் முதுநிலை விரிவுரையாளர் மா.கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் இரா. சந்திரசேகரன் அறிமுகவுரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் முனைவர் கண்ணன் தனது தலைமை உரையில் மாணவர்கள் இணையதளங்களை நன்முறையில் நல்ல விசயங்களுக்கு பயன்படுத்த வேண்டும், இணையம் இன்று நல் அறிவு பகிர்விற்கு பயன்பட்டு வருகிறது, இணைய தளங்களில் பல்வேறு நூல்கள் இருந்தாலும் அவை நேரில் ஒரு நூலினை படிக்கும் அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும். நல்ல செய்திகளை நல்ல முறையில் பரப்ப வேண்டும் என பேசினார்.
இதனைத் தொடர்ந்து கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வலைப்பூக்களை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் தமிழ் ஆராய்ச்சியாளரும், கல்வெட்டு ஆராய்ச்சியாளரும், கொங்கு ஆய்வு மையம் பேராசிரியர் புலவர் செ.இராசு அவர்கள் சிறப்புரையாற்றினார். அப்பொழுது அவர் தமிழர்கள் அறிவியலின் முன்னோடிகளாக சிறந்து விளங்கியதையும், கலை, பண்பாடு, மரபு, பாரம்பரியம் ஆகியவை இதற்கு வித்தாக அமைந்தது எனவும் பேசினார் ( இவரின் முழுமையான உரையினை வீடியோவில் காண்க).
No comments:
Post a Comment