SANGAMAM - LIVE NEWS

Wednesday, March 18, 2009

மார்ச்.23 ல் சட்டக் கல்லூரி திறப்பு!

சென்னை, மார்ச் 18- சென்னை அரசு சட்டக் கல்லூரி வரும் 23-ம் தேதி திறக்கப்படுகிறது.

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் கடந்த நவம்பர் மாதம் மாணவர்களுக்கு இடையே மோதல் நடந்தது. இதையடுத்து சட்டக் கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டது. ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்பட்டு 19-ம் தேதி கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டது.

வகுப்புகள் 9 நாட்கள் நடைபெற்று வந்த நிலையில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் சட்டக் கல்லூரி உள்பட அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளும், தொழிற்கல்லூரிகளும் காலவரையின்றி மூடப்பட்டன.



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails