பாரத தேசம் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆன பின்னும் கல்வி வளர்ச்சியில் தேக்க நிலையே நீடித்து வருகிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் நாட்டு மக்களின் அறியாமை வீழ்ச்சிக்கும் கல்வித்துறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் இன்றளவும் ஏராளமாக உள்ளன. நமது நாடு சுதந்திரம் பெற்ற பொழுது ஆங்கிலேயர்களை மட்டுமே நாட்டை விட்டு விரட்ட முடிந்ததே தவிர அவர்களின் கலாச்சாரத்தையோ கல்வித் துறையின் தேக்கங்களையோ நம்மால் விரட்டி அடிக்க முடியவில்லை.
ஆங்கிலேயர்கள் நம் நாட்டைவிட்டு வெளியேறும் முன் நாட்டைத் துண்டாடி பழி தீர்த்துக் கொண்டனர். பாரத மாதாவின் ஒட்டிப் பிறந்த கவசம் போல் இருந்த இந்து-இஸ்லாமிய ஒற்றுமையை உடைத்து அதன் மூலம் ஒன்றுபட்ட பாரதத்தை சிதைத்து பாகிஸ்தான் பிரிவினைக்கு வழி கோலினர்.
தலைக்கு வந்த பிரச்சினை தலைப் பாகையுடன் போனது… என பாகிஸ்தான் பிரிவினையை வேண்டா வெறுப்பாக ஏற்றுக்கொண்டோம் நாம். பிரிவினையில் ‘சுண்டு விரல்' (பாகிஸ்தான்); தானே போனது… என நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்… ஆனால் நமக்கே தெரியாமல் நம் நாட்டு மக்களை நிரந்தரமாக ‘ஆட்டுமந்தை' போல் அறியாமை இருளில் சிக்க வைக்கும் ‘மெல்லக் கொல்லும் விஷம்' போன்ற ‘மெக்காலே கல்வித் திட்டம்' எனும் உயிர் கொல்லிக் கிருமியை நம் தேசத்தின் தேகத்தில் ஊசியை ஏற்றி விட்டது ஆங்கிலேய அரசு.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் நாட்டு மக்களின் அறியாமை வீழ்ச்சிக்கும் கல்வித்துறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் இன்றளவும் ஏராளமாக உள்ளன. நமது நாடு சுதந்திரம் பெற்ற பொழுது ஆங்கிலேயர்களை மட்டுமே நாட்டை விட்டு விரட்ட முடிந்ததே தவிர அவர்களின் கலாச்சாரத்தையோ கல்வித் துறையின் தேக்கங்களையோ நம்மால் விரட்டி அடிக்க முடியவில்லை.
ஆங்கிலேயர்கள் நம் நாட்டைவிட்டு வெளியேறும் முன் நாட்டைத் துண்டாடி பழி தீர்த்துக் கொண்டனர். பாரத மாதாவின் ஒட்டிப் பிறந்த கவசம் போல் இருந்த இந்து-இஸ்லாமிய ஒற்றுமையை உடைத்து அதன் மூலம் ஒன்றுபட்ட பாரதத்தை சிதைத்து பாகிஸ்தான் பிரிவினைக்கு வழி கோலினர்.
தலைக்கு வந்த பிரச்சினை தலைப் பாகையுடன் போனது… என பாகிஸ்தான் பிரிவினையை வேண்டா வெறுப்பாக ஏற்றுக்கொண்டோம் நாம். பிரிவினையில் ‘சுண்டு விரல்' (பாகிஸ்தான்); தானே போனது… என நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்… ஆனால் நமக்கே தெரியாமல் நம் நாட்டு மக்களை நிரந்தரமாக ‘ஆட்டுமந்தை' போல் அறியாமை இருளில் சிக்க வைக்கும் ‘மெல்லக் கொல்லும் விஷம்' போன்ற ‘மெக்காலே கல்வித் திட்டம்' எனும் உயிர் கொல்லிக் கிருமியை நம் தேசத்தின் தேகத்தில் ஊசியை ஏற்றி விட்டது ஆங்கிலேய அரசு.
No comments:
Post a Comment