ஈழத்தமிழர்கள் இன்றைக்கு உலகிலே படுகின்ற துயர் ஒட்டு மொத்த தமிழினத்தை அதிர்வுக்கு உள்ளாக்கியிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் வாழ்கின்ற தமிழர்களை பெரும் சிந்தனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. தமிழீழம் என்ற நிலையைத் தாண்டி இந்திய வாழ் தமிழர்களின் எதிர்காலத்தைக் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.
தமிழ் மொழி, இனம், வாழ்வியல், உரிமை என்ற எல்லாமே இன்று கேலிக்கும் தாழ்வுக்கும் உள்ளாகியிருக்கின்றன.திட்டமிட்ட தன்னல அரசியல் சதிகளும்,கூடவே இருந்து குழிபறிக்கும் கூட்டமும் தமிழ் மக்களை அப்படியே மாயைக்குள் மூடியிருக்கின்றன. தமிழ்நாட்டு மக்களின் மானமும் உணர்வும் மயிரினும் சிறிதென மதிக்கப் படுகின்றன.
தமிழர்களின் மானத்தையும் உணர்வையும் தமிழர்களே முன்னின்று களையும் ஒரு அவல நிலை தமிழகத்தைப் பற்றியிருக்கின்றது. தமிழீழத்தில் கொட்டுகின்ற ஒவ்வொரு துளிக் குருதியும் தமிழ் நாட்டுத் தமிழனுக்கு ஒவ்வொரு பாடத்தைச் சொல்லித் தருகிறது. இழந்து போன மதியைக் கூர்ப்பாக்குகிறது.
தமிழ்நாட்டில் விளைந்திருக்கிற கேடுகளைக் களைய நீண்டகாலச் சிந்தனைகளையும் சித்தாந்தங்களையும் விதைத்து "தமிழை" மீள உருவாக்குவதே இன்றைக்கு நாம் முன்னெடுக்க வேண்டிய தேவையாகும். அவசர கோலத்தில் உடனடியாகச் செய்ய நினைக்கும் எதுவும் பயன் தராது.
தமிழ் மொழி, இனம், வாழ்வியல், உரிமை என்ற எல்லாமே இன்று கேலிக்கும் தாழ்வுக்கும் உள்ளாகியிருக்கின்றன.திட்டமிட்ட தன்னல அரசியல் சதிகளும்,கூடவே இருந்து குழிபறிக்கும் கூட்டமும் தமிழ் மக்களை அப்படியே மாயைக்குள் மூடியிருக்கின்றன. தமிழ்நாட்டு மக்களின் மானமும் உணர்வும் மயிரினும் சிறிதென மதிக்கப் படுகின்றன.
தமிழர்களின் மானத்தையும் உணர்வையும் தமிழர்களே முன்னின்று களையும் ஒரு அவல நிலை தமிழகத்தைப் பற்றியிருக்கின்றது. தமிழீழத்தில் கொட்டுகின்ற ஒவ்வொரு துளிக் குருதியும் தமிழ் நாட்டுத் தமிழனுக்கு ஒவ்வொரு பாடத்தைச் சொல்லித் தருகிறது. இழந்து போன மதியைக் கூர்ப்பாக்குகிறது.
தமிழ்நாட்டில் விளைந்திருக்கிற கேடுகளைக் களைய நீண்டகாலச் சிந்தனைகளையும் சித்தாந்தங்களையும் விதைத்து "தமிழை" மீள உருவாக்குவதே இன்றைக்கு நாம் முன்னெடுக்க வேண்டிய தேவையாகும். அவசர கோலத்தில் உடனடியாகச் செய்ய நினைக்கும் எதுவும் பயன் தராது.
No comments:
Post a Comment