சென்னை, மார்ச் 15- ‘‘தமிழகத்தில் வீடு வீடாக சென்று முழு ஆய்வு நடத்தப்பட்டதில், வாக்காளர் பட்டியலில் இருந்து 35 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் நரேஷ்குப்தா நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் தேர்தல் விதிமீறல் இல்லாதவாறு பணிகள் நடக்க கூடுதல் தேர்தல் அதிகாரியாக சத்தியகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 18ம் தேதி பொறுப்பு ஏற்பார். தேர்தல் பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகளில், 3 ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிபவர்களை மாற்ற கூறியுள்ளோம். மூன்று நாட்களில் அவர்கள் மாற்றப்படுவார்கள் என்று கூடுதல் டிஜிபி உறுதி அளித்துள்ளார்.
மதுரையில் சில அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் வேறு அதிகாரிகள் விரைவில் பணியில் சேர்வார்கள். என நரேஷ்குப்தா தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் நரேஷ்குப்தா நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் தேர்தல் விதிமீறல் இல்லாதவாறு பணிகள் நடக்க கூடுதல் தேர்தல் அதிகாரியாக சத்தியகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 18ம் தேதி பொறுப்பு ஏற்பார். தேர்தல் பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகளில், 3 ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிபவர்களை மாற்ற கூறியுள்ளோம். மூன்று நாட்களில் அவர்கள் மாற்றப்படுவார்கள் என்று கூடுதல் டிஜிபி உறுதி அளித்துள்ளார்.
மதுரையில் சில அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் வேறு அதிகாரிகள் விரைவில் பணியில் சேர்வார்கள். என நரேஷ்குப்தா தெரிவித்தார்.
No comments:
Post a Comment