SANGAMAM - LIVE NEWS

Sunday, March 1, 2009

எனது உயிர் இனி தமிழர்களுக்கு சொந்தமானது- கருணாநிதி

அறுவைச் சிகிச்சை மூலம் வந்துள்ள இந்த உயிர் இனி தமிழர்களுக்குச் சொந்தமான உயிர் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து கருணாநிதி எழுதியுள்ள கடிதம்:

"சட்டம் ஒரு இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஒளிவிளக்கு''- என்ற வரலாற்றுப் புகழ் மிக்க பொன்மொழிக்குச் சொந்தக்காரர் அண்ணா, இன்றிருந்தால் இப்போது நடைபெறுகிற விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் குறித்து எவ்வளவு வேதனைப்படுவார் என்று எண்ணிப்பார்க்கிறேன்.

தந்தை பெரியார், தன்மான இயக்கக் கொள்கைகளைப் பரப்புவதற்கும், சுய மரியாதைக்கு மாறாக நடைபெறும் காரியங்களைச் சூழ்ந்து எதிர்ப்பதற்கும், எத்தனையோ போராட்டங்களை நடத்திய வையம் புகழ் வைக்கம் வீரர் ஆவார்.

வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து சட்ட மறுப்பு இயக்கம் நடத்திய- வெள்ளை உள்ளம் கொண்ட காந்தியடிகள்- சௌரி சௌரா போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கச்சொல்லி வெளியிட்ட அறிக்கை-அந்த அண்ணலின் அறவழியை உலகிற்கு ஒளிகாட்டி உணர்த்திக்கொண்டிருக்கின்ற அறிக்கையாகும்.



allvoices

1 comment:

karu said...

thavaruthalaaka vayathu kuraivukoodapaarkkaamal annai soniyavukku enru sollavillai

Post a Comment

Related Posts with Thumbnails