நாமக்கல், நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் "தொடுவானம்" எனும் பெயரில் இணைய பயிலரங்கு நடைபெற்றது. இந்த பயிலரங்கில் கிராம தன்னார்வலர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.
நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் கிராம தன்னார்வலர்களுக்கான இணைய பயிலரங்கு நடைபெற்றது.தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி அனைவரையும் வரவேற்று பேசினார்.இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சகாயம் பயிலரங்கினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.பயிலரங்கில் தகவல் தொடர்பில் வலைப்பூ எனும் தலைப்பில் காசி ஆறுமுகம் அவர்களும், எளிய பயிற்சியும் தகவல் தொடர்பும் எனும் தலைப்பில் கோபாலகிருஷ்ணனும்( ஹாய்கோபி), பயனரின் பார்வையில் வலைப்பூ எனும் தலைப்பில் சஞ்சய்காந்தியும், ஒரு அதிகாரியின் பார்வையில் வலைப்பூ எனும் தலைப்பில் நீலகிரி மாவட்ட வனத்துறை அதிகாரி ஆனந்த் (லதானந்த்) அவர்களும், மின்னியல் நிர்வாகம் குறித்து மாவட்ட தகவலியல்(NIC) துறை அதிகாரி செல்வகுமார் , தகவல் அறியும் உரிமைச் சட்டமும் பயன்பாடும் எனும் தலைப்பில் வழக்கறிஞர் மார்டின் அவர்களும் விளக்கவுரையாற்றினர். இதனை அடுத்து காணொளியூடாகா பிரான்சிலிருந்து பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, சிங்கப்பூரிலிருந்து மணியம், லண்டனிலிருந்து பேராசிரியர் சிவாபிள்ளை, மலேசியாவிலிருந்து இளந்தமிழ், ஆஸ்திரேலியாவிலிருந்து முகுந்தராசு,அமெரிக்காவிலிருந்து ஆல்பர்ட் பெர்ணான்டோ ஆகியோர் வாழ்த்து செய்தி வழங்கினர்.
மேலும் தொடர....
Sunday, December 20, 2009
Saturday, December 12, 2009
Sunday, December 6, 2009
போனது பெயிண்டர் வேலைக்கு, செய்வது புல் வெட்டும் வேலை மலேசியாவில் மதுரை இளைஞரின் அவலம்
மலேசியாவில் இறங்கியதுமே அவர்களது பாஸ்போர்ட் பறிக்கப்பட்டு இருக்கும். இது போதாது என்று பலர் சுற்றுலா பயணிகளுக்கான விசாவில் ஏஜென்டுகளால் அனுப்பப்பட்டிருப்பார்கள். மீறி நியாயம் கேட்டால் அடி, உதை சித்ரவதைதான்.
மேலும் படிக்க..
மேலும் படிக்க..
ஆங்கிலத்தை வாசி, தமிழை சுவாசி - மாணவர்களுக்கு நாமக்கல் கலெக்டர் சகாயம் அறிவுரை
ஏழைகளின் கடைசி நம்பிக்கை அரசு பள்ளிக்கூடங்களே,தாழ்வு மனப்பான்மையில் ஊறிப்போன சமூகத்தின் குழந்தைகள் நீங்கள் அதீதமான தன்னம்பிக்கையுடன் முயற்சிக்க வேண்டும்.நீங்கள் மேலும் மேலும் படித்து வளரும் போது ஆங்கிலத்தில் கற்பது தவறல்ல, ஆங்கிலத்தை வாசி, ப்ரெஞ்சை வாசி, ஹிந்தியை வாசி ஆனால் தமிழை சுவாசி. உங்களது இலக்கு தெளிவாக இருக்க வேண்டும் மாநிலத்தில் முதல் மூன்று இடங்களுக்குள் வரவேண்டும் என்ற உங்களது இலக்கு தெளிவாக இருக்க வேண்டும்.
மேலும் வாசிக்க..
மேலும் வாசிக்க..
Wednesday, December 2, 2009
நதிகள் இணைப்பு திட்டம் கைவிடப்பட்டது - மத்திய அரசு
இமயமலைப் பகுதியில் ஓடும் நதிகளை உள்நாட்டில் ஓடும் நதிகளுடன் இணைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக மத்திய நீர் வளத்துறை மந்திரி பவன் குமார் பன்சால் நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். ``ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் கோடி செலவிலான இந்த திட்டத்தை செயல்படுத்துவது இயலாத காரியம். ஆகவே இந்த திட்டம் கைவிடப்படுகிறது. ஆனால் இமயமலைப் பகுதியில் ஓடும் நதிகளை இணைக்கும் திட்டத்தையும், உள் நாட்டில் ஓடும் நதிகளை இணைக்கும் திட்டத்தையும் தனித்தனியாக நிறைவேற்ற மத்திய அரசு பரிசீலிக்கும்'' என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க...
மேலும் படிக்க...
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு 4 ஆண்டு பி.எட் படிப்பு அறிமுகம்
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் +2 படித்த மாணவர்களுக்கு 4 ஆண்டுகள் பி.எட் படிப்பு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக துணைவேந்தர் பத்மநாபன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் 7 அரசு பி.எட் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் பி.எட் கல் லூரிகள் உட்பட 644 பி.எட் கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன. இந்த கல்லூரிகளில் பி.எட் படிக்கும் மாணவர்களின் வசதிக்காக, கற்பித்தல் முறையில் அதிக கவனம் செலுத்தப்படும்.
மேலும் படிக்க...
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் 7 அரசு பி.எட் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் பி.எட் கல் லூரிகள் உட்பட 644 பி.எட் கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன. இந்த கல்லூரிகளில் பி.எட் படிக்கும் மாணவர்களின் வசதிக்காக, கற்பித்தல் முறையில் அதிக கவனம் செலுத்தப்படும்.
மேலும் படிக்க...
சர்வதேச ஊனமுற்றோர் தினம்
உலகளாவிய ரீதியில் சர்வதேச ஊனமுற்றோர் தினம் ஒவ்வொரு ஆண்டிலும் டிசம்பர் 3 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது.ஊனமுற்றோரின் பிரச்சினைகளை சர்வதேச ரீதியில் அனைத்து மக்களும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்குரிய இடத்தையும், உரிமைகளையும் வழங்குவதில் யாரும் பின் நிற்கக்கூடாது என்ற எண்ணக் கருவினை மக்கள் மத்தியில் உருவாக்குவதே இத்தினத்தின் பிரதான எதிர்பார்க்கையாகும். ஊனமுற்றோர் எனும் போது இவர்கள் நோயாளிகளாக அல்லாமல் சமூதாயத்தில் நம்பிக்கைக்குரிய பிரஜைகள் என்ற அடிப்படையில் நோக்கப்படுவதுடன் இவர்களும் மனிதாபிமான சிந்தனை மிக்கவர்களே என்பதை மையமாகக் கொண்டு உலகம் முழுவதும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் படிக்க...
மேலும் படிக்க...
Monday, September 21, 2009
விடுதலைப்புலிகளை பிரிந்த யானை தனித்திருந்து சோகம் காக்கும் அவலம்
அரசியல் அனாதைகள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அடைக்கல அனாதைகள் என்பதை கேள்விப்பட்டிருக்க முடியாது. ஏதோ ஒரு காரணத்தினால் ஒருவர், தான் அன்போடு வளர்த்து வந்த விலங்கை விட்டு சென்றால் அந்த வளர்ப்பு பிராணி அடைக்கல அனாதையாகிறது. வேறு ஒருவரிடம் அடைக்க்லம் தேடி இப்படி அடைக்கல அனாதையாகி இருக்கிறது ஆஜானுபாகுவான 'பிடி' ஒன்று.
இந்த பெண் யானைக்கு பெயர் என்ன என்பது தெரியாவிட்டாலும் அது வளர்ந்த இடம் கண்ணி வெடிகள் காலைக் கவ்வும் யுத்த முனை. ஆம்... விடுதலைப்புலிகளின் மிச்ச சொச்சங்களில் இந்த பிடியும் ஒன்று...
மேலும் படிக்க...
இந்த பெண் யானைக்கு பெயர் என்ன என்பது தெரியாவிட்டாலும் அது வளர்ந்த இடம் கண்ணி வெடிகள் காலைக் கவ்வும் யுத்த முனை. ஆம்... விடுதலைப்புலிகளின் மிச்ச சொச்சங்களில் இந்த பிடியும் ஒன்று...
மேலும் படிக்க...
Labels:
இந்தியா,
இலங்கை,
தமிழ் செய்திகள்,
விடுதலைப்புலிகள்
Sunday, September 20, 2009
``சிட்டி லிமோஸின்ஸ்'' நிறுவனம் மீது 1000 பேர் புகார்; கோடம்பாக்கம் அலுவலகம் முற்றுகை
சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ``சிட்டி லிமோஸின்ஸ்'' நிறுவனம் ஒன்று வாடிக்கையாளர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. ரூ.1 1/2 லட்சம் செலுத்தினால் 5 ஆண்டில் 5 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று கூறி இந்நிறுவனம் சார்பில் விளம்பரங்கள் செய்யப்பட்டது. இதனை நம்பி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணம் கட்டி வாடிக்கையாளர் ஆனார்கள். இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கமிஷனர் அலுவலகத்தில் திரண்டு புகார் மனுக்களை கொடுத்தனர்.
மேலும் படிக்க...
மேலும் படிக்க...
Thursday, August 6, 2009
விடுதலைப்புலிகளின் புதிய தலைவர் செல்வராசா பத்மநாதன் கைது ?
கொழும்பு:தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச பொறுப்பாளரும் விடுதலைப்புலிகள் அமைப்பின் புதிய தலைவராகவும் செயற்பட்ட கே.பி எனப்படும் குமரன் செல்வராசா பத்மநாதன் இன்று தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரில் சர்வதேச போலீசாரால் கைதுசெய்யப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தின் செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது
மேலும் படிக்க...
மேலும் படிக்க...
Wednesday, August 5, 2009
இலங்கை அதிபர் மீது அதிருப்தி, இலங்கை ராணுவத்தளபதி பொன்சேகா வெளியேற முடிவு
கொழும்பு : இலங்கை கூட்டுப்படைத் தளபதி சரத் பொன்சேகா அந்நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவில் தஞ்சமடைய முடிவு செய்துள்ளதாக பரபரப்பு செய்திகள் வெளியாகு உள்ளன.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தரைப்படைத் தளபதியாக இருந்து அந்நாட்டு ராணுவத்திற்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததாக பொன்சேகாவிற்கு செல்வாக்கு அதிகரித்தது. இதனால் அதிருப்தியடைந்த அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே, தரைப்படைத் தளபதி பதவியில் இருந்து பொன்சேகாவை நீக்கினார்.
மேலும் படிக்க..
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தரைப்படைத் தளபதியாக இருந்து அந்நாட்டு ராணுவத்திற்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததாக பொன்சேகாவிற்கு செல்வாக்கு அதிகரித்தது. இதனால் அதிருப்தியடைந்த அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே, தரைப்படைத் தளபதி பதவியில் இருந்து பொன்சேகாவை நீக்கினார்.
மேலும் படிக்க..
Saturday, August 1, 2009
இந்து பத்திரிகையின் பொய் முகம் : திராவிட எதிர்ப்பு
சென்னை, ‘தி இந்து‘ பத்திரிகை ஆசிரியரும் ஆங்கிலேயப் பத்திரிகையாளர்களின் ‘கழிவுக்கதிர்‘ என்று போற்றப்படுபவருமாகிய என். ராம், இலங்கை அதிபர் ராஜபக்ஷேயின் விருந்தாளியாக இலங்கை சென்றார். இலங்கைத் தமிழ் அகதி முகாம்களில் வாழும் தமிழர் ‘சுபிட்சமாக‘ ‘ஷேமமாக‘ வாழ்வதாக எழுதியுள்ள அனைத்தும் பொய் என்றும் கண்டனத்துக்குரியவை என்றும் திராவிட இயக்க வரலாற்று ஆய்வாளரும், மூத்த பத்திரிகையாளருமாகிய மா. பாண்டியன் கூறியுள்ளார்.
மேலும் படிக்க....
மேலும் படிக்க....
தந்தை பெரியார் : நீதிமன்ற தடையும், விடையும்
சென்னை- தந்தை பெரியாரின் கருத்துக்களை, புத்தகங்களை மக்கள் மன்றத்திற்கு கொண்டு சென்று சேர்ப்பதில் பெரியார் வாதிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு உலகத்தமிழர்களிடையே பெரியார் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்ற எண்ணத்தை உருவாக்கி வருகிறது.
பெரியார் நூல்கள் நாட்டுடைமை ஆக்கும் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, இடைக்கால தடை விதித்து மற்றுமொரு தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.
மேலும் படிக்க...
பெரியார் நூல்கள் நாட்டுடைமை ஆக்கும் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, இடைக்கால தடை விதித்து மற்றுமொரு தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.
மேலும் படிக்க...
Monday, July 20, 2009
அடங்காத ஐ.பி.எஸ்., அதிகாரிகள் : அரசு குடியிருப்பில் கொட்டம், அரசுக்கு இழப்பு
சென்னை: ஐ.பி.எஸ் அதிகாரியின் பெயரிலோ அல்லது அவரது மனைவியின் பெயரிலோ சொந்த வீடு இருந்தால், அரசு குடியிருப்பை உடனே காலி செய்ய வேண்டும். இல்லையெனில், அபராதம் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என்ற டி.ஜி.பி., ஜெயினின் உத்தரவு காற்றில் பறக்கிறது.
போலீஸ் அதிகாரிகள் யாரும் அதை கண்டு கொள்ளவில்லை! சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் இருந்து சில நூறு அடி தொலைவில், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தங்கும் அடுக்குமாடி குடியிருப்பில் 12 வீடுகள் உள்ளன. அதில், ஐ.ஜி., கூடுதல் டி.ஜி.பி., மற்றும் டி.ஜி.பி., தங்கியுள்ளனர். இது தவிர, கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு 24 வீடுகள் உள்ளன. இதில், எஸ்.பி.,கள் மற்றும் டி.ஐ.ஜி.,கள் தங்கியுள்ளனர். அதே பகுதியில் புதிதாக 12 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த வீடுகளில் தங்கியுள்ள போலீஸ் அதிகாரிகள் பலர், பல ஆண்டுகளுக்கு முன்பே, வெளியூருக்கு மாற்றப்பட்டுள்ளனர். வெளியூரில் அந்த போலீஸ் அதிகாரிகளுக்கு பங்களா டைப்பில் அரசு குடியிருப்பு உள்ளது.
போலீஸ் அதிகாரிகள் யாரும் அதை கண்டு கொள்ளவில்லை! சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் இருந்து சில நூறு அடி தொலைவில், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தங்கும் அடுக்குமாடி குடியிருப்பில் 12 வீடுகள் உள்ளன. அதில், ஐ.ஜி., கூடுதல் டி.ஜி.பி., மற்றும் டி.ஜி.பி., தங்கியுள்ளனர். இது தவிர, கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு 24 வீடுகள் உள்ளன. இதில், எஸ்.பி.,கள் மற்றும் டி.ஐ.ஜி.,கள் தங்கியுள்ளனர். அதே பகுதியில் புதிதாக 12 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த வீடுகளில் தங்கியுள்ள போலீஸ் அதிகாரிகள் பலர், பல ஆண்டுகளுக்கு முன்பே, வெளியூருக்கு மாற்றப்பட்டுள்ளனர். வெளியூரில் அந்த போலீஸ் அதிகாரிகளுக்கு பங்களா டைப்பில் அரசு குடியிருப்பு உள்ளது.
Monday, July 13, 2009
பிரபாகரனின் கடைசி மகன் இலங்கை ராணுவத்தால் அடித்து கொலை செய்யப்பட்டார்?
கொழும்பு:தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் கடைசி மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவம் உயிருடன் பிடித்து மற்றொரு பகுதிக்கு எடுத்துச் சென்றதாக, இராணுவ உயர் அதிகாரி ஒருரை ஆதாரம்காட்டி, சிங்கள இணைய தளம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. படத்துடன் வெளிவந்துள்ள அச் செய்தியில் , பாலச்சந்திரனை ஒரு சிறுவன் என்று கூடப் பாராமல், அவரை அடித்துக் கொலைசெய்ததாகக் கூறப்பட்டுள்ளது. அரக்கத்தனமாக, பின் மண்டையில் அடித்து கொலைசெய்த இராணுவத்தினர், பின்னர் இறந்த சிறுவனின் உடல் மீது துப்பாக்கியால் சுட்டு, போர் பிரதேசத்தில் இறந்தவர்போல செய்துள்ளனர்.
மேலும் படிக்க..
மேலும் படிக்க..
Friday, July 3, 2009
"லக்" இந்தி படத்தில் கதாநாயகியாக கமலஹாசன் வாரிசு
சென்னை, தமிழ்நாட்டின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகரான சாருஹாசன், நடிகர் கமலஹாசன் குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள ‘லக்‘ இந்தி திரைப்படம், இந்திய சினிமா துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியில் பாலிவுட்டில் பிரபல நடிகர் சஞ்சய்தத், இம்ரான் கான், மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர்களுடன் இணைந்து லக் என்ற படத்தில் கமலஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் கதநாயகியாக நடிக்கிறார். சோகம்ஹா இயக்கத்தில் உருவாகியுள்ள காதல் மற்றும் வீரதீர சாகசங்கள் நிறைந்த ஆக் ஷ்ன் ரக அதிரடி படமாக ‘லக்‘ உருவாகியுள்ளது.
Sunday, June 28, 2009
‘தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் அரசியல் வழியில் போராடும்’- கே.பீ.
விடுதலைப் புலிகள் அமைப்பு வன்முறையைக் கைவிட்டு வன்முறையற்ற வழிகளில் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை மீட்கும் எனத் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய தலைவர் செல்வராஜா பத்மநாதன் சொல்கிறார்.
ஹெட்லையின் இணையத் தளத்துக்கு 25.06.2009 ல் வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் தமிழ்ப் புலிகளின் முக்கிய செயற் திட்டங்களில் தமிழ் புலிகள் அமைப்பு அதற்கு எதிரான சர்வதேசத் தடையை நீக்குவதே முதலாவதாக இருக்கும் என்றார் பத்மநாதன்.
அந்த இணையத்தள நேர்காணலின் சில பகுதிகள்.
ஹெட்லையின் இணையத் தளத்துக்கு 25.06.2009 ல் வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் தமிழ்ப் புலிகளின் முக்கிய செயற் திட்டங்களில் தமிழ் புலிகள் அமைப்பு அதற்கு எதிரான சர்வதேசத் தடையை நீக்குவதே முதலாவதாக இருக்கும் என்றார் பத்மநாதன்.
அந்த இணையத்தள நேர்காணலின் சில பகுதிகள்.
Saturday, June 27, 2009
அக்.23-25.ல் ஜெர்மனியில் தமிழ் இணைய மாநாடு
சென்னை, ஜெர்மனியில் தமிழ் தகவல் தொழில் நுட்பம் குறித்த தமிழ் இணைய மாநாடு அக்டோபர் 23-ம் தேதியிலிருந்து 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
உலக தமிழ் தகவல் தொழில் நுட்பம்-உத்தமம் அமைப்பின் சார்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது என்றும், இதற்கான இந்தியாவின் துணை தலைவர் வெங்கடரங்கன், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் சென்னை பத்தரிகையாளர் மன்றத்தில் மாநாடு தொடர்பான விபரங்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
முன்னாள் துணை வேந்தர் அனந்தகிருஷ்ணன் கூறியது:
உலக தமிழ் தகவல் தொழில் நுட்பம்-உத்தமம் அமைப்பின் சார்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது என்றும், இதற்கான இந்தியாவின் துணை தலைவர் வெங்கடரங்கன், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் சென்னை பத்தரிகையாளர் மன்றத்தில் மாநாடு தொடர்பான விபரங்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
முன்னாள் துணை வேந்தர் அனந்தகிருஷ்ணன் கூறியது:
Friday, June 26, 2009
கூட்டுறவு வியாபாரம் : கூட்டுக் கொள்ளை வர்த்தகம்
சென்னை, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கொத்தவால் சாவடிதான் சென்னையின் மிகப்பெரிய வர்த்தக மையம், காய்கறி மொத்தச் சந்தையும், பருப்பு, மிளகாய் வத்தல் என பலவகைப் பொருட்களின் மொத்தச் சந்தையும் கொத்தவால் சாவடியைச் சுற்றியே இருந்தன. கூடவே சில்லறை விற்பனைக்கானபல மளிகைக் கடைகள். அவற்றில் பல கடைகள் இன்றும் பிரபலம்.
Thursday, June 25, 2009
உலகத் தமிழர்களுக்காக ஒற்றுமை: முதலமச்சர் உறுதி
சென்னை, இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல உலகின் எல்லாத் தமிழர்களையும் பாதுகாப்பதில் இனிமேலாவது தமிழக தலைவர்கள் இன உணர்வுடன் செயல்பட்டு ஒற்றுமை காக்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐரோப்பிய தமிழர்களால் இலங்கை போரினால் பாதிக்கப்பட்டு அகதிகள் முகாம்களில் வாடும் இலங்கை தமிழர்கள் லட்சக்கணக் கானோருக்கு உணவு, உடை, மருத்துவ பொருட்களை வணங்காமண்- கேப்டன் அலி கப்பல் மூலமாக இலங்கைக்கு அனுப்பி வைத்தனர்.
ஐரோப்பிய தமிழர்களால் இலங்கை போரினால் பாதிக்கப்பட்டு அகதிகள் முகாம்களில் வாடும் இலங்கை தமிழர்கள் லட்சக்கணக் கானோருக்கு உணவு, உடை, மருத்துவ பொருட்களை வணங்காமண்- கேப்டன் அலி கப்பல் மூலமாக இலங்கைக்கு அனுப்பி வைத்தனர்.
Thursday, June 18, 2009
இலங்கை எழுத்தாளர் புன்னியமீன் அவர்களுடன் ஒரு நேர்காணல்
இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் புன்னியாமீன் அவர்கள் 150 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள ஒரு முன்னணி எழுத்தாளராவார். சமூக உணர்வுமிக்க இவரும், இவரது நூல் வெளியீட்டகமான சிந்தனைவட்டமும்: 2002, 2006 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் சப்பிரகமுவ மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பாழின் போதும், 2004ஆம் ஆண்டு சுனாமி நிகழ்வின் போதும் மாணவர்களின் கல்வியை இலக்காகக் கொண்டு பல்வேறுபட்ட சேவை நலத்திட்டங்களை முன்னெடுத்து நடத்தியுள்ளனர். மேலும் கல்வியைத் தொடர வசதி இல்லாத நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குக் கல்வியைத் தொடர உதவிகளைச் செய்துள்ளதுடன். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் வசதி குறைந்த மருத்துவ, பொறியியல் துறை மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர்.
Wednesday, June 17, 2009
நாடற்ற இனத்தின் அவலம் - மனுஷ்ய புத்திரன்
சென்னை, இலங்கைத் தமிழர்களின் வீழ்ச்சி விடுதலைப்புலிகளின் வீழ்ச்சி அல்ல என்றும் வேட்டையாடப்பட்ட ஒரு இனக்குழுவின், படுகளத்தில் கைவிடப்பட்ட ஒரு மக்கள் சமூகத்தின் வீழ்ச்சிகளின் சரித்திரம் என்றும் தமிழினம் இந்த அழிவிலிருந்து உயிர்த்து எழும் என்று உயர்மை தமிழ் இலக்கிய இதழின் ஆசிரியரும் கமலஹாசனின் ஆயிரத்தில் ஒருவன் கதாசிரியருமான மனுஷ்ய புத்திரன் கூறியுள்ளார்.
துணை முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக பாராட்டு - சட்டசபையில் பரபரப்பு
சென்னை, தமிழக துணை முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு சட்டப்பேரவையில் அஇஅதிமுக புகழாராம் சூட்டியது. இதனைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர் களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
Saturday, June 6, 2009
புலிகளை அரக்கராய்க் காட்டும் போக்கு - இராம.கி.
அண்மையில் தமிழ்மன்றம் மடற்குழுவில், ”சின்னஞ் சிறுவர், ஆடவர், பெண்டிர் மடியில் வெடி குண்டுகளைக் கட்டிக் கொண்டு, கழுத்தில் சைனைடு வில்லை மாலை சூடிக் கொண்டு ஆயிரக் கணக்கான ஏழை எளியவரைக் கவசச் சுவராகக் கட்டி வைத்துப் போர் புரிவதா அறப்போர் ?” என்றும், “30 வருட ஈழப் போரில 70,000 பேர் மாண்டதில் விடுதலைப் புலிகளின் பங்கு : 55% & சி்ங்கள அரசின் பங்கு : 45%” என்றும் குறிப்பிட்டுச் சாடிக் கருத்து எழுந்தது. இது போன்ற வாசகங்களை எங்கிருந்தோ பரப்புரை ஆவணங்களில் இருந்து தேடிப் பிடிக்கிறார்கள் போலும்.
இந்தியத் திருநாட்டில் இல்லாத குழு அடையாளங்களா? புலிகளிடம் இருந்த / இருக்கிற சில அடையாளங்களை வைத்து அவர்களை அரக்கர்களாய்த் தோற்றம் காட்ட வருவது ஏன்? Why are we demonising the Tigers? As freedom fighters and belonging to an army, they had certain practices, which we may like or dislike.
சீக்கியர் இனத்தில் குரு கோவிந்த் சிங் , ”கல்சா” என்ற இயக்கத்தைத் (அந்தக் காலத்தில், அது ஒரு அரண - military - இயக்கம் தான்.) தொடங்கி, அதன் எல்லா உறுப்பினரும் 5 அடையாளங்களை எப்பொழுதும் வெளிக்காட்ட வேண்டும் என்று ஒரு நடைமுறையை ஏற்படுத்தினார். நீட்ட சடைமுடி(kesh - long hair), சீப்பு (kangha - comb), பிச்சுவாள் (kirpan - dagger), இரும்புக் காப்பு (kara - steel bracelet), குறுங்காற் சட்டை (kaccha - a pair of knicker-bockers) என்ற இந்த அடையாளங்கள் இயக்கத்திற்கு ஒற்றுமையையும், உடன் பிறந்தோர் போன்ற உணர்வையும், ஒக்குமையையும் தந்ததாகவே எல்லோரும் கொண்டார்கள். இந்த அடையாளங்கள் தாங்கள் ஒரு குழு என்ற ஆழ் உணர்வையும் வளர்த்தன. பிச்சுவாள்க் கத்தியை எப்பொழுதும் வைத்துக் கொண்டிருப்பதை யாரும் தவறாக இன்றுவரை நினைக்கவில்லை. அது ஒரு வீர உணர்வின் வெளிப்பாட்டாகவே கருதப் பட்டது.
இந்தியத் திருநாட்டில் இல்லாத குழு அடையாளங்களா? புலிகளிடம் இருந்த / இருக்கிற சில அடையாளங்களை வைத்து அவர்களை அரக்கர்களாய்த் தோற்றம் காட்ட வருவது ஏன்? Why are we demonising the Tigers? As freedom fighters and belonging to an army, they had certain practices, which we may like or dislike.
சீக்கியர் இனத்தில் குரு கோவிந்த் சிங் , ”கல்சா” என்ற இயக்கத்தைத் (அந்தக் காலத்தில், அது ஒரு அரண - military - இயக்கம் தான்.) தொடங்கி, அதன் எல்லா உறுப்பினரும் 5 அடையாளங்களை எப்பொழுதும் வெளிக்காட்ட வேண்டும் என்று ஒரு நடைமுறையை ஏற்படுத்தினார். நீட்ட சடைமுடி(kesh - long hair), சீப்பு (kangha - comb), பிச்சுவாள் (kirpan - dagger), இரும்புக் காப்பு (kara - steel bracelet), குறுங்காற் சட்டை (kaccha - a pair of knicker-bockers) என்ற இந்த அடையாளங்கள் இயக்கத்திற்கு ஒற்றுமையையும், உடன் பிறந்தோர் போன்ற உணர்வையும், ஒக்குமையையும் தந்ததாகவே எல்லோரும் கொண்டார்கள். இந்த அடையாளங்கள் தாங்கள் ஒரு குழு என்ற ஆழ் உணர்வையும் வளர்த்தன. பிச்சுவாள்க் கத்தியை எப்பொழுதும் வைத்துக் கொண்டிருப்பதை யாரும் தவறாக இன்றுவரை நினைக்கவில்லை. அது ஒரு வீர உணர்வின் வெளிப்பாட்டாகவே கருதப் பட்டது.
Thursday, June 4, 2009
தற்கொலை செய்ய கியூ: ஒரு தற்கொலையின் நேரடி காட்சிகள்
லண்டன், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள தற்கொலை கிளினிக்கில், சாவதற்காக பிரிட்டனைச் சேர்ந்த 800 பேர் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டின் ஜூரிச் நகரில் உள் ளது, "டிக்னிடாஸ்' என்ற பிரபல மருத்துவமனை. கேன்சர் உட்பட உயிரைப் பறிக்கும் பயங்கர நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சுயவிருப்பத்தின் பேரில் தற்கொலை செய்து கொள்ள இந்த மருத்துவமனை, சட்டப்படி ஏற்பாடு செய்துவருகிறது.பல நாடுகளைச் சேர்ந்த நோயாளிகள் இங்கு வந்து தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்கின்றனர். ஆனால், அவர்களை, சட்ட நிபுணர்களும், டாக்டர்களும் தீர விசாரித்த பின் தான், அவர்கள் சாவதற்குத் தகுதியானவர் என்று சான்றளிக்கின்றனர்.
Wednesday, June 3, 2009
பகை, விரோதம் வேண்டாம் : கருணாநிதி வேண்டுகோள்
சென்னை, தேர்தலில் தோற்றவர்கள் பகை பாராட்டாமல் வீணான விரோதம் கொள்ளாமல் நாட்டிற்கும், மக்களுக்கும் பயனுள்ள வகையில் தங்களது அரசியல் பணிகளை தொடர வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான கருணாநிதியின் 86 பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் திமுக சார்பில் பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தம்மை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்து ஏற்புரை வழங்கி முதலமைச்ர் பேசியது :
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான கருணாநிதியின் 86 பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் திமுக சார்பில் பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தம்மை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்து ஏற்புரை வழங்கி முதலமைச்ர் பேசியது :
Thursday, May 28, 2009
பிரபாகரன் பெற்றோரை இலங்கை இராணுவம் கைது செய்தது
கொழும்பு:விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெற்றோர் வேலுப்பிள்ளை மற்றும் வள்ளிபுரம் பார்வதி அம்மாள் ஆகியோர் வவுனியா அகதி முகாமில் தங்கியிருப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார். ஆனால் பிரபாகரன் பெற்றோரை இராணுவம் கைது செய்தது காவலில் வைத்துள்ளது .
Wednesday, May 27, 2009
இலங்கை ராணுவத் தாக்குதலில் முடமான குழந்தைகள், மருத்துவமனைகளில் கதறும் தமிழர்கள்
இலங்கையில் ராணுவத்தாக்குதலில் கைகால்கள் இழந்து முடமாகி மருத்துவமனைகளில் பரிதவிக்கும் தமிழ் குழந்தைகளின் அவலநிலையைத் தாங்க முடியாமல் பெற்றோர் கதறிக் கொண்டிருப்பதாக இங்கிலாந்தின் ‘கார்டியன்' பத்திரிக்கை வேதனை கட்டுரை வெளியிட்டுள்ளது.
Tuesday, May 26, 2009
இலங்கைக்கு இந்தியத்தீர்வு : நீதியும் நியாயமும் அமைதியும்
சென்னை, போருக்குப் பிந்தைய வளர்ச்சித் திட்டங்களுக்கு மட்டும் இடமளித்துவிட்டு, அரசிய்ல அதிகார பகிர்வு குறித்து இந்தியாவும், சர்வதேச அமைப்புகளும், தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் கவனம் செலுத்தாமல் இருந்து விடக்கூடாது என்று பிரபல எழுத்தாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
2002ல் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் யாழ் வளைகுடா பகுதியை இலங்கைத் தீவுடன் இணைக்கும் ஏ-9 சாலை திறக்கப்பட்டது. இதுவும் 2005-ல் போர் துவங்கியவுடன் மூடப்பட்டது. இன்று கொழும்பு நகரிலிருந்து யாழ் செல்ல இருக்கும் ஒரே வழி வான்வழிதான். இது மிகவும் செலவு பிடிக்கும் வழியாகும். இதன் 30 வருட போரில் உடமைகளை இழந்து, வீடுகளை இழந்து, வருமானம் ஈட்டக்கூடிய இளைய சமூகத்தை இழந்து இருக்கும் ஒரு மக்களால் தாக்கப்பிடிக்க முடியாது. நாகரீகத்தின் முக்கிய வெளிப்பாடே போக்குவரத்து வசதிதான். இதை உறுதி செய்ய வேண்டிய அவசியம் அனைவருக்கும் உண்டு. அடுத்ததாக, எந்தவிதமான கட்டுமான வசதிகளும் கடந்த 30 வருடத்தில் ஏற்படுத்தப்படவில்லை. அடிப்படை கட்டுமான வசதிகளையும், உருவாக்க வேண்டியது அவசரத் தேவையாகும். கல்வி மற்றும் பொது சுகாதார வசதிகளையும் விரைவாக அனைத்து பகுதிகளிலும் உருவாக்க வேண்டும்.
2002ல் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் யாழ் வளைகுடா பகுதியை இலங்கைத் தீவுடன் இணைக்கும் ஏ-9 சாலை திறக்கப்பட்டது. இதுவும் 2005-ல் போர் துவங்கியவுடன் மூடப்பட்டது. இன்று கொழும்பு நகரிலிருந்து யாழ் செல்ல இருக்கும் ஒரே வழி வான்வழிதான். இது மிகவும் செலவு பிடிக்கும் வழியாகும். இதன் 30 வருட போரில் உடமைகளை இழந்து, வீடுகளை இழந்து, வருமானம் ஈட்டக்கூடிய இளைய சமூகத்தை இழந்து இருக்கும் ஒரு மக்களால் தாக்கப்பிடிக்க முடியாது. நாகரீகத்தின் முக்கிய வெளிப்பாடே போக்குவரத்து வசதிதான். இதை உறுதி செய்ய வேண்டிய அவசியம் அனைவருக்கும் உண்டு. அடுத்ததாக, எந்தவிதமான கட்டுமான வசதிகளும் கடந்த 30 வருடத்தில் ஏற்படுத்தப்படவில்லை. அடிப்படை கட்டுமான வசதிகளையும், உருவாக்க வேண்டியது அவசரத் தேவையாகும். கல்வி மற்றும் பொது சுகாதார வசதிகளையும் விரைவாக அனைத்து பகுதிகளிலும் உருவாக்க வேண்டும்.
Saturday, May 23, 2009
கிராமத்து சப்ஜெக்ட்டா? - ஒட்டமெடுக்கும் தமிழ் ஹீரோக்கள்
“அழகான ஆறு. சுற்றிலும் பச்சைப்பசேல்னு வயல்வெளிகள். அப்போ, ஒரு தாலாட்டு குரல் மெதுவா கேட்குது. வேஷ்டியை மடித்துக்கட்டிக் கொண்டு ஹீரோ வந்துகிட்டு இருக்கார்......... அப்போ......” என்று இயக்குனர்கள் கதை சொல்ல ஆரம்பித்தாலே கோலிவுட் கதாநாயகர்கள் அரண்டு போகிறார்கள். நிறுத்துங்க... நிறுத்துங்க...... இப்படிப்பட்ட கதை வேணாம். நல்ல சிட்டி சப்ஜெக்ட்டா யோசிசிட்டு வாங்க, என்று திருப்பி அனுப்பிவிடுகிறார்கள்.
Friday, May 22, 2009
பிரபாகரன் உயிருடன் உள்ளார், அவர் ஆயுள் 72 வயது :மதுரை ஜோதிடர் கணிப்பு
மதுரை, எண்கணித ஜோதிடப்படி பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று மதுரையை சேர்ந்த ஜோதிடர் வளர்பிறை சோழன் என்பவர் கூறியுள்ளார். மதுரையை சேர்ந்த எண்கணித ஜோதிடர் வளர்பிறைசோழன் இதுதொடர்பாக கூறியது:
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் - விடுதலைப்புலிகளின் புலனாய்வுத் துறை அறிவிப்பு
கொழும்பு:இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவந்ததுள்ளதாகவும், இறுதிப் போரில் பல விடுதலைப்புலிகளின் உயர்மட்ட தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும் இலங்கை அரசும் அதன் ஊடகங்கள் கூறிவருகின்றன.குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிராபாகரனின் இறப்பு குறித்து முரண்பட்ட செய்திகளையே இலங்கை அரசு இதுவரை தெரிவித்துள்ளது.விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை கொன்றுவிட்டோம் என்றும், அவரது உடலை கைப்பற்றி விட்டோம் என்றும் கூறி ஒரு உடலை வீடியோவாக்கி உலகில் உள்ள அனைத்து ஊடகங்களுக்கும் இலங்கை அரசு வழங்கியது. இதனை இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பின.இருந்தாலும் உலகில் உள்ள தமிழர்கள் இந்த காட்சிகளை பார்த்து விட்டு பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர்.இந்நிலையில் பிரபாகரனின் உடல் என காட்டப்பட்ட உடலை இலங்கை அரசு அவசர அவசரமாக இன்று எரித்து விட்டது.
Thursday, May 21, 2009
கேட்ட இடம் தராததால் கருணாநிதி ஆத்திரம் - பதவியேற்பு விழா புறக்கணிப்பு
புதுடெல்லி, பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவோம் என திமுக அறிவித்துள்ளது. மத்திய அமைச்சரவையில் திமுகவிற்கு உரிய பிரதிநிதித்துவம் தராததால் திமுக - காங்கிரஸ் இடையிலான நல்லுறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் கருணாநிதி தனது டெல்லி பயணத்தை முடித்துகொண்டு சென்னை விரைவதாகவும், மத்திய அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என எடுத்துள்ள முடிவு குறித்து தொடர் நடவடிக்கைகளை விவாதிப்பதற்காக திமுகவின் செயற்குழு கூட்டம் நாளை சென்னையில் கூடும் என்று புதுடெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் கருணாநிதி தனது டெல்லி பயணத்தை முடித்துகொண்டு சென்னை விரைவதாகவும், மத்திய அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என எடுத்துள்ள முடிவு குறித்து தொடர் நடவடிக்கைகளை விவாதிப்பதற்காக திமுகவின் செயற்குழு கூட்டம் நாளை சென்னையில் கூடும் என்று புதுடெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tuesday, May 19, 2009
பிரபாகரன் மரணம், உலகத் தமிழர்கள் ஏற்க மறுப்பு
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவந்ததுள்ளதாகவும், இறுதிப் போரில் பல விடுதலைப்புலிகளின் உயர்மட்ட தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும் இலங்கை அரசும் அதன் ஊடகங்கள் கூறிவருகின்றன.
குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிராபாகரனின் இறப்பு குறித்து முரண்பட்ட செய்திகளையே இலங்கை அரசு இதுவரை தெரிவித்துள்ளது.
பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை அரசின் வெளியுறவுத் துறைச் செயலர் பாலித ஹோஹன்னவும், இலங்கை அமைச்சர் கெஹலியா ரம்புக்வல்லவும் கூறினர்.
ஆனால் விடுதலைப்புலிகளின் அனைத்துலக தொடர்பாளர் செல்வராஜா பத்மநாபன் பிரபாகரன் நலமுடனும், பாதுகாப்புடனும் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இதனால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் கடுமையான குழப்பம் நீடித்து வந்தது
குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிராபாகரனின் இறப்பு குறித்து முரண்பட்ட செய்திகளையே இலங்கை அரசு இதுவரை தெரிவித்துள்ளது.
பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை அரசின் வெளியுறவுத் துறைச் செயலர் பாலித ஹோஹன்னவும், இலங்கை அமைச்சர் கெஹலியா ரம்புக்வல்லவும் கூறினர்.
ஆனால் விடுதலைப்புலிகளின் அனைத்துலக தொடர்பாளர் செல்வராஜா பத்மநாபன் பிரபாகரன் நலமுடனும், பாதுகாப்புடனும் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இதனால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் கடுமையான குழப்பம் நீடித்து வந்தது
Monday, May 18, 2009
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் அறிவிப்பு.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் இலங்கைஅரசின் பொய்ப்பிரச்சாரத்தை உலகத் தமிழர்கள் நம்பவ வேண்டாம் என இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
பிரபாகரன் சுட்டுக் கொலை உறுதிப்படுத்தப்படவில்லை என இலங்கை பாதுகாப்புத் துறை தகவல்
கொழும்பு:விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் இன்று காலை போர்ப்பகுதியில் இருந்து தப்பிச்செல்லும் பொழுது இலங்கை ராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.பிரபாகரன் கொல்லப்பட்டது உறுதிபடுத்தப்படவில்லை என இலங்கை பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
Sunday, May 17, 2009
பிரபாகரன் மகன் சார்லஸ் ஆண்டனி பலி?, உடலை கண்டுபிடித்ததாக இலங்கை ராணுவம் தகவல்
கொழும்பு: கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று காலை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ராணுவம் கூறியுள்ளது.
அதேபோல விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன், அமைதி செயலக தலைவர் புலித்தேவன் ஆகியோரும் இறந்து விட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
அதேபோல விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன், அமைதி செயலக தலைவர் புலித்தேவன் ஆகியோரும் இறந்து விட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
பிரபாகரன் பொட்டு அம்மான் உள்ளிட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பினர்.
முல்லைத்தீவு நந்திகடல் களப்பு பகுதியில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியிலிருந்து பிரபாகரன் பொட்டு அம்மான் உள்ளிட்டவர்கள் பலபடகுகளில் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பினர், என்று ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. இதுவிபரமாவது:-
சனிக்கிழமை இரவும் ஞாயிறு அதிகாலையிலும் தரை மற்றும் கடல்ப் பகுதிகளில் மோதல்கள் இடம்பெற்றன. இதில், முல்லைத்தீவு நந்திகடல் களப்பு பகுதியில் விடுதலைப்புலிகளின் 6 படகுகளை தாம் அழித்துள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகள் தப்பிச் செல்ல முற்பட்ட படகு மீதே தாம் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசு பரப்பும் பொய் செய்திகளை நம்ப வேண்டாம் - பழ.நெடுமாறன்
இலங்கை போர் குறித்து இலங்கை அரசு பரப்பி வரும் பொய்ச் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன்,பா.ம.க நிறுவனர் இராமதாசு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சென்னை, இலங்கை தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு
இலங்கைக்கு பாதுகாப்பு : தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கை ராணுவத்திற்கு எதிராக நடத்த வந்த போர் இறுதி தொடர்பான புலிகளின் அறிவிப்பு மற்றும் இந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தொடர்பான செய்திகள் பரவியதை அடுத்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தற்கொலை?
கொழும்பு: விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தற்கொலை செய்துகொண்டதாகவும், அவரது உடலை அடையாளம் காண்பதற்காக இலங்கை ராணுவ முகாமிற்கு எடுத்து செல்லப்படுவதாகவும் இலங்கை ராணுவத் தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய தொலைக்காட்சியான
Saturday, May 16, 2009
தமிழினம் அறுந்து-தோற்றுப்போன தேர்தல் - 2009-நாக.இளங்கோவன்
"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே" என்ற கண்ணதாசனின் வரியோடு, "அவன் தறுதலையானது கழகங்களின் ஆட்சியிலே" என்ற வரியை சேர்த்துக் கொண்டு படித்தால் தேர்தல்-2009 பற்றி தன்மானம் இன்னும் கொஞ்சம் உள்ள தமிழ்நாட்டார்க்கு மனத்துயர் வாராது.
இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் மூன்று கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
தமிழினத்தைப் படுகொலை செய்த காங்கிரசு வெற்றி பெற்றுள்ளது. போனமுறை 10 இடங்கள். இந்த முறை 9 இடங்கள். ஆகவே அவர்கள் தோற்றார்கள், காங்கிரசுக்குத்
தமிழ்மக்கள் பாடம் புகட்டினார்கள் என்றெல்லாம் யாராவது சொன்னால் நான் நகைப்பேன்.
தமிழினத்தை அழித்த காங்கிரசுக்குத் துணை போன திமுக 18 இடங்களில் வென்றுள்ளது. போனமுறை 16 இடங்கள்.
"துரோகம் பழகு; நக்கிப் பிழை" என்றே இது தமிழ்நாட்டுக் குமுகத்திற்குப் போதிக்கிறது.
இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் மூன்று கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
தமிழினத்தைப் படுகொலை செய்த காங்கிரசு வெற்றி பெற்றுள்ளது. போனமுறை 10 இடங்கள். இந்த முறை 9 இடங்கள். ஆகவே அவர்கள் தோற்றார்கள், காங்கிரசுக்குத்
தமிழ்மக்கள் பாடம் புகட்டினார்கள் என்றெல்லாம் யாராவது சொன்னால் நான் நகைப்பேன்.
தமிழினத்தை அழித்த காங்கிரசுக்குத் துணை போன திமுக 18 இடங்களில் வென்றுள்ளது. போனமுறை 16 இடங்கள்.
"துரோகம் பழகு; நக்கிப் பிழை" என்றே இது தமிழ்நாட்டுக் குமுகத்திற்குப் போதிக்கிறது.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த 3 கிமீ பகுதியை மீட்டதாக ராணுவம் தகவல்- பிரபாகரன் தப்பினார்
கொழும்பு:இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவம் இறுதி போரினை நேற்று முன் தினம் தொடங்கியது.இந்த போரில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிங்கள வீரர்கள் போர்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளாதுடன், கனரக ஆயுதங்கள், ரசாயண ஆயுதங்களை பயன்படுத்தி கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.
Thursday, May 14, 2009
அதிமுகவுடன் காங். கூட்டணி - இந்திய அரசியலில் பரபரப்பு
புதுடெல்லி,பாரளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் முடிவுகளை அரசியல் கட்சிகள் எதிர்நோக்கி இருக்கும் இந்த வேளையில் சில தேசிய கட்சிகள் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளன. இந்நிலையில் சில ஆங்கில செய்தி சேனல்கள் இந்திய தேர்தல் குறித்த கருத்துகணிப்பினை நேற்று வெளியிட்டன. அதில் தமிழகத்தில் அதிமுக முன்னிலை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தேசிய கட்சிகள் அதிமுகவை தங்களது பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி முதன்மையானதாக உள்ளதாகத் தெரிகிறது.
Tuesday, May 12, 2009
(வீடியோ) முள்ளிவாய்க்கல் மருத்துவமனை மீது இலங்கை இராணுவம் தாக்குதல் 47 பேர் படுகொலை
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது இலங்கை ராணுவத்தினர் மீண்டும் இன்று காலை நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 47 நோயாளிகள் படுகொலை செய்யப்பட்டும் 55 பேர் காயமடைந்தும் உள்ளதாக வன்னியில் இருந்து வரும் தகவலகள் தெரிவிக்கின்றன.
Sunday, May 10, 2009
ராஜீவ்-ஜெயவர்தனா ஒப்பந்தப்படி இலங்கையில் விரைவில் உரியமுடிவு காணப்படும் - சோனியா காந்தி, சென்னை பேச்சின் முழுவிவரம்
சென்னை, உயிர் இழப்பின் துன்பம் எத்தகையது என்பதை நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்துள்ளேன். எங்களுக்கு இந்த துன்பம் எத்தகையது என்பது தெரியும், விரைவில் போர்நிறுத்தம் ஏற்படவும், பாதுகாப்பான இடங்களுக்கு இலங்கை தமிழர்களை கொண்டு செல்லவும், மனதாபிமான உதவிகளை உடனுக்குடன் வழங்கவும் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என சோனியாகாந்தி கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதாரித்து சென்னை தீவுத்திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி பேசியது:
தமிழக காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதாரித்து சென்னை தீவுத்திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி பேசியது:
இலங்கை ராணுவம் கோரத் தாண்டவம், ஒரே இரவில் குழந்தைகள் உட்பட 2500 பேர் படுகொலை !
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' உள்ளிட்ட பகுதிகளில் இலங்கை ராணுவத்தினர் நேற்றிரவு முதல் நடத்திய கொடூரத் தாக்குதல்களில் குழந்தைகள்,பெண்கள்,நோயாளிகள் உட்பட 2,500-க்கும் அதிகமான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
Saturday, May 9, 2009
இலங்கை,தமிழீழம் சாத்தியம் இல்லாதது - சென்னையில் மன்மோகன்சிங் பேட்டி- முழுவிவரம்
சென்னை, தமிழீழம் அமைவது சாத்தியம் இல்லாதது என்றும் இலங்கைக்கு ராணுவத்தை அனுப்ப வாய்ப்பே கிடையாது என்றும் பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் திமுக தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக ஒருநாள் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் சென்னை வந்தார்.
சென்னையில் இன்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் திமுக தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக ஒருநாள் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் சென்னை வந்தார்.
Friday, May 8, 2009
ஜெ.வின் தமிழீழம் கோஷம் தீர்வாகுமா? ஈழ அதரவாளர்கள் பார்வையில்
சென்னை, தமிழக மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ‘தனித்தமிழ் ஈழம்‘ அமைக்க ராணுவம் அனுப்புவேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இலங்கைத் தமிழர் பிரச்னையில் தனி ஈழம்தான் தீர்வு என்று குரல் எழுந்தபோதெல்லாம் கண்மூடித்தனமாக எதிர்த்தவர் ஜெயலலிதா. “போர் என்றால் சாதாரண மக்கள் சாகத்தான் செய்வார்கள்“ என்று இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னால் வரை அபூர்வத் தகவல்களை அள்ளிவிட்டவர். இன்று, தேர்தல் காய்ச்சலில் பட்டிதொட்டி எங்கும் சென்று ‘தனிஈழம் அமைத்தே தீருவேன்‘ என்கிறார். பல ஆண்டுகளாக ஈழ அரசியலில் மும்முரம் காட்டி வரும் தமிழீழ ஆதரவாளர்கள் ‘ஜெ‘ வின் இந்த மாற்றத்தை பற்றி கூறியது:
இலங்கைத் தமிழர் பிரச்னையில் தனி ஈழம்தான் தீர்வு என்று குரல் எழுந்தபோதெல்லாம் கண்மூடித்தனமாக எதிர்த்தவர் ஜெயலலிதா. “போர் என்றால் சாதாரண மக்கள் சாகத்தான் செய்வார்கள்“ என்று இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னால் வரை அபூர்வத் தகவல்களை அள்ளிவிட்டவர். இன்று, தேர்தல் காய்ச்சலில் பட்டிதொட்டி எங்கும் சென்று ‘தனிஈழம் அமைத்தே தீருவேன்‘ என்கிறார். பல ஆண்டுகளாக ஈழ அரசியலில் மும்முரம் காட்டி வரும் தமிழீழ ஆதரவாளர்கள் ‘ஜெ‘ வின் இந்த மாற்றத்தை பற்றி கூறியது:
Wednesday, May 6, 2009
(ஆடியோ)ஈரோட்டில் காங்.வேட்பாளருக்கு எதிராக சீமான் பேசியது
ஈரோட்டில் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் சார்பாக நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் சீமான் பேசியதன் ஒலிப்பதிவு.
(வீடியோ) இலங்கை தடுப்பு முகாம்களில் தமிழ் இனத்திற்கு நடக்கும் கொடுமைகள்
வன்னியில் இருந்து வெளியேறிய மக்கள் அடைக்கப்பட்டுள்ள 'வதைத் தடுப்பு முகாம்'களில் உணவு,குடிநீர் இல்லை; இறப்போர்களது உடலங்கள் அந்த இடங்களிலேயே கிடக்கின்றன; குடும்பங்களிடம் இருந்து பெண்கள் பிரிக்கப்படுகின்றனர்; பாலியல் கொடுமைகளுக்கு பெண்கள் உள்ளாக்கப்படுகின்றார்கள்.
Tuesday, May 5, 2009
தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வு :ராஜபக்சே சபதம்
கொழும்பு, இலங்கையில் இருந்து பயங்கரவாதத்தை ஒழித்து, தமிழர் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பேன் என்று ராஜபக்சே சபதம் செய்துள்ளார்.
ஜப்பானில் இருந்து வந்துள்ள சிறப்பு தூதர்யசுஷி அகாஷியுடன் நடந்த சந்திப்பின் போது, ராஜபக்சே கூறியதாவது:-
இலங்கையில் பயங்கர வாதத்துக்கு முடிவு கட்ட, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தோற்கடிக்கப்பட வேண்டும். இலங்கை மக்கள் அனைவரும், சகோ தரத்துவத்துடனும், ஒற்றுமையுடனும் ஒன்றாக வசிக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
ஜப்பானில் இருந்து வந்துள்ள சிறப்பு தூதர்யசுஷி அகாஷியுடன் நடந்த சந்திப்பின் போது, ராஜபக்சே கூறியதாவது:-
இலங்கையில் பயங்கர வாதத்துக்கு முடிவு கட்ட, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தோற்கடிக்கப்பட வேண்டும். இலங்கை மக்கள் அனைவரும், சகோ தரத்துவத்துடனும், ஒற்றுமையுடனும் ஒன்றாக வசிக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
Sunday, May 3, 2009
கோவையில் ராணுவம் மீது தாக்குதல்: 200 பேர் மீது வழக்கு 13 பேருக்கு ஜெயில்
இருகூர், கோவையில் ராணுவ லாரிகளை தாக்கிய சம்பவம் தொடர்பாக 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 13 பேர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
Saturday, May 2, 2009
Friday, May 1, 2009
தமிழர் துரோகிகளை தமிழகத்திலிருந்து விரட்ட பாரதிராஜா பிரச்சாரம்
சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தமிழர் விரோத சக்திகளை தமிழர்கள் ஆதரிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வரும் 4-ம் தேதி முதல் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் என்று திரையுலக தமிழ் இன உணர்வாளர்கள் அமைப்பின் சார்பில் இயக்குனர் பாரதிராஜா அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இயக்குனர்கள் பாரதிராஜா, சீமான், சுந்தர்ராஜன் ஆகியோர் கூறியது.
தமிழர் விரோத சக்தியை பேரறிஞர் அண்ணா ஏற்கனவே அடையாளம் காட்டியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இயக்குனர்கள் பாரதிராஜா, சீமான், சுந்தர்ராஜன் ஆகியோர் கூறியது.
தமிழர் விரோத சக்தியை பேரறிஞர் அண்ணா ஏற்கனவே அடையாளம் காட்டியுள்ளார்.
வெறுப்பு (செருப்பு) வீச்சு!
அமெரிக்கா கண்டத்திலிருந்து ஆசியா கண்டம் வரை, மக்கள் வெறுப்பை காட்டும் சம்பவமாக "செருப்பு வீச்சு சம்பவங்கள்" மாறிவிட்டது.
இந்திய தேர்தல் களத்தில் செருப்பு வீச்சு அதிகரித்து வருகிறது. செருப்பு இதற்காகவா மனித சமூகம் கண்டுபிடித்தது.
தமிழகத்தில் சங்க இலக்கியங்களில், காலணி பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அகநானூற்றில், 'தடி புதை தொடு தோல் மறையவேகி' 101 - (5 - 9) வீரர்கள் கடுமையான தரையில் நடக்க காலணிகளை அணிந்தனர் என்றும், கடற்கரைப் பகுதியில் உமணர்கள் தோலினால் ஆன காலணியைப் பயன்படுத்தினர் எனவும் குறிப்பிடுகிறது. தோல்புதை சீரற்றடிக் கோலுடை உமணர் (191 -4).
இந்திய தேர்தல் களத்தில் செருப்பு வீச்சு அதிகரித்து வருகிறது. செருப்பு இதற்காகவா மனித சமூகம் கண்டுபிடித்தது.
தமிழகத்தில் சங்க இலக்கியங்களில், காலணி பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அகநானூற்றில், 'தடி புதை தொடு தோல் மறையவேகி' 101 - (5 - 9) வீரர்கள் கடுமையான தரையில் நடக்க காலணிகளை அணிந்தனர் என்றும், கடற்கரைப் பகுதியில் உமணர்கள் தோலினால் ஆன காலணியைப் பயன்படுத்தினர் எனவும் குறிப்பிடுகிறது. தோல்புதை சீரற்றடிக் கோலுடை உமணர் (191 -4).
Thursday, April 30, 2009
தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை இலங்கை அரசு புறக்கணிக்கிறது - பழ.நெடுமாறன் குற்றச்சாட்டு
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடுவாழ் ஈழத் தமிழர்களின் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், தமிழ் ஆர்வலர்கள் தியாகு, புகழேந்தி, தங்கராஜா, திருச்சி வேலுச்சாமி, விடுதலை ராஜேந்திரன், வைத்தியலிங்கம், கவிஞர் தாமரை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை ஆதரித்து பேசினர்.
இந்த போராட்டத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், தமிழ் ஆர்வலர்கள் தியாகு, புகழேந்தி, தங்கராஜா, திருச்சி வேலுச்சாமி, விடுதலை ராஜேந்திரன், வைத்தியலிங்கம், கவிஞர் தாமரை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை ஆதரித்து பேசினர்.
Wednesday, April 29, 2009
இலங்கை பிரச்சனையில் கருணாநிதி - ராஜபக்சே கூட்டு சதி - ஜெயலலிதா பகீர் குற்றச்சாட்டு
தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கருணாநிதி ராஜபக்சவுடன் சேர்ந்து கூட்டு சதித் திட்டம் தீட்டியிருப்பதாக நாமக்கல்லில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதா பகீர் குற்றச்சாட்டை தெரிவித்தார்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட, உண்ணாவிரத நாடகம் நடத்தி; தான் உண்ணாவிரதம் இருந்ததால், உடனே இலங்கை அரசு, போர் நிறுத்தம் என்று அறிவித்துவிட்டது; எனவே தனது உண்ணாவிரதத்திற்கு வெற்றி கிடைத்துவிட்டது என்று அறிவித்துவிட்டு, வந்த வேகத்தில் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு, வீடு திரும்பிவிட்டார் கருணாநிதி.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட, உண்ணாவிரத நாடகம் நடத்தி; தான் உண்ணாவிரதம் இருந்ததால், உடனே இலங்கை அரசு, போர் நிறுத்தம் என்று அறிவித்துவிட்டது; எனவே தனது உண்ணாவிரதத்திற்கு வெற்றி கிடைத்துவிட்டது என்று அறிவித்துவிட்டு, வந்த வேகத்தில் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு, வீடு திரும்பிவிட்டார் கருணாநிதி.
Tuesday, April 28, 2009
இந்தியா தான் சிங்கள ராணுவத்தை வழி நடத்தியது- பிரணாப் முகர்ஜி ஒப்புதல்
மும்பை, சிங்கள் ராணுவத்திற்கும் , தனி நாடு கேட்டு போராடும் விடுதலை புலிகளுக்கும் கடந்த 30 வருடங்களாக நடந்து வரும் போரில் சில சமயம் ராணுவத்திற்கு பின்னடைவும் சில சமயம், விடுதலைபுலிகளுக்கு பின்னடைவும் ஏற்பட்டு கொண்டு இருந்தது. ஆனால் கடந்த வருடம் ஆரம்பத்தில் சிங்கள அரசாங்கம், ஒரு தலை பட்சமாக போர் நிறுத்த அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு விடுதலை புலிகளின் மீது போர் தொடுத்தது,
கடந்த வருடம் சனவரியில் ஆரம்பித்த இந்த போர் நடவடிக்கை இரண்டு தரப்பிற்கு கடுமையான இழப்புகள் ஏற்பட்டது, விடுதலை புலிகளின் பெருவாரியான இடங்களை சிங்கள ராணுவம் கைப்பற்றியது.
கடந்த வருடம் சனவரியில் ஆரம்பித்த இந்த போர் நடவடிக்கை இரண்டு தரப்பிற்கு கடுமையான இழப்புகள் ஏற்பட்டது, விடுதலை புலிகளின் பெருவாரியான இடங்களை சிங்கள ராணுவம் கைப்பற்றியது.
பிரபாகரன் தப்பினார்
கொழும்பு, போர் பகுதியில் இருந்து பிரபாகரன் தப்பிச் சென்று விட்டதாக விடுதலைப் புலி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையில் புதுக்குடியிருப்பை ஒட்டியுள்ள 5 சதுர கி.மீ.நிலப்பரப்புக்குள் விடுதலைப் புலிகள் முடக்கப்பட்டுள்ளனர். அங்கு தான் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் இருப்பதாக கருதப்பட்டது.
பிரபாகரன், நீர்மூழ்கி கப்பல் மூலமாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சிக்கக் கூடும் என்று ராணுவத்திடம் சரண் அடைந்த விடுதலைப்புலிகள் மூத்த தலைவர் தயாமாஸ்டர் தெரிவித்தார்.
இலங்கையில் புதுக்குடியிருப்பை ஒட்டியுள்ள 5 சதுர கி.மீ.நிலப்பரப்புக்குள் விடுதலைப் புலிகள் முடக்கப்பட்டுள்ளனர். அங்கு தான் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் இருப்பதாக கருதப்பட்டது.
பிரபாகரன், நீர்மூழ்கி கப்பல் மூலமாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சிக்கக் கூடும் என்று ராணுவத்திடம் சரண் அடைந்த விடுதலைப்புலிகள் மூத்த தலைவர் தயாமாஸ்டர் தெரிவித்தார்.
Monday, April 27, 2009
கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் ஏன்?
ஆறேழுமாதங்களாக இலங்கையில் இட்லர் அராசபக்சேவின் அகோரபசிக்கு ஈழத்தமிழர்கள் நாள்தோறும் இரையாகி, வாழும் இல்லங்களே அவர்களுக்கு கல்லறையாக மாறியது; இல்லங்களை விட்டு காடுகளில் தஞ்சம் புகுந்தனர் நம் தமிழர்கள். அவர்கள் நொடிக்கு நொடி மரணபயத்தோடு மரத்தடிகளில் வானமே கூரையாகக் கொண்டு இருந்தபோதுகூட குண்டுகளை வீசி குடும்பம் குடும்பமாக கொன்று குவித்து எங்கும் பிணக்காடாக மாற்றி மகிழ்ந்தது மகிந்தவின் அரசு. சரணடையுங்கள் அல்லது செத்து மடியுங்கள் http://thelede.blogs.nytimes.com/2009/04/20/endgame-in-sri-lanka/?hp என்ற குறிக்கோளோடு கொன்று குவித்துவருகிறது. தங்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாகி இருக்கும் இந்த நேரத்தில் யாராவது போரை நிறுத்த மாட்டார்களா, இந்த மரணபயத்திலிருந்து விடுதலை கிடைக்காதா? என்று தம் தொப்புள்கொடி உறவாக எண்ணியிருக்கும் தமிழகத்தை எதிர்பார்த்தனர். ஆனால் நடந்தது என்ன?
இலங்கையில் தனி ஈழம் அமைப்பேன் - ஜெயலலிதா
திருப்பூர்:இலங்கை மண்ணிலேயே ஈழத் தமிழர்கள் ஈழம் காண்பார்கள்; அது அவர்களின் அன்னை பூமி; அது அவர்களின் உரிமை பூமியும் கூட. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி நான் ஈழம் அமைப்பேன். இலங்கையில் தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னது இந்திய தேசத்திற்கு விரோதமான செயல் அல்ல என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அட்சய திரிதியையின் பெருமை
குறைவில்லாத நிறைவு அதுதான் அட்சயம் என்ற சொல்லின் பொருள். வளரக்கூடியது; பெருகக் கூடியது; செழித்தோங்கக் கூடியது அட்சயம் எனப்படும்.
அட்சய திரிதியைப் பற்றி வெவ்வேறுவிதமான வரலாறுகளை அண்மைக்
காலத்தில் சொல்லி வருகிறார்கள். வளர்ச்சி தொடர்பாக சொல்லப்படும் புராணக் கதைகள் அவை.
மணிமேகலை மாதவியின் மகள். இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையின் பாட்டுடைத் தலைவி சீத்தலைச் சாத்தனார் என்பவரால் எழுதப்பட்டதுதான் மணிமேகலை. இந்த நூலில் மணிமேகலையின் கையில் ஒரு அமுதசுரபி இருந்தது. அது ஆபுத்திரன் கையில் இருந்த அமுதசுரபி. அள்ள அள்ளக் குறையாமல் வளரக்கூடிய தன்மை படைத்த பாத்திரத்தைத் தான் அட்சய பாத்திரம் என்று சொல்வார்கள்.
அட்சய திரிதியைப் பற்றி வெவ்வேறுவிதமான வரலாறுகளை அண்மைக்
காலத்தில் சொல்லி வருகிறார்கள். வளர்ச்சி தொடர்பாக சொல்லப்படும் புராணக் கதைகள் அவை.
மணிமேகலை மாதவியின் மகள். இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையின் பாட்டுடைத் தலைவி சீத்தலைச் சாத்தனார் என்பவரால் எழுதப்பட்டதுதான் மணிமேகலை. இந்த நூலில் மணிமேகலையின் கையில் ஒரு அமுதசுரபி இருந்தது. அது ஆபுத்திரன் கையில் இருந்த அமுதசுரபி. அள்ள அள்ளக் குறையாமல் வளரக்கூடிய தன்மை படைத்த பாத்திரத்தைத் தான் அட்சய பாத்திரம் என்று சொல்வார்கள்.
கருணாநிதி உண்ணாவிரதம் முடித்து அற்றிய உரை - முழு விவரம்
சென்னை, இலங்கைப் போர் நிறுத்த அறிவிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து தனது உண்ணாவிரதத்தை முடித்து வைத்த திமுக தலைவர் கருணாநிதி உரை.
முழு விபரம்
1924-ம் ஆண்டு ஜூன் திங்கள் 3-ம்நாள் முத்துவேலர் என்கிற இசைத் தமிழ் தந்தைக்கும்-அஞ்சுகம் என்கிற அன்னைக்கும் திருக்குவளை எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து, ‘குவா குவா’ என்று குளிர் தமிழ் மொழியில் ஒலியெழுப்பிய அந்தக் காலத்தில் நான் பிறந்த அறையிலேயே திருடர்கள் புகுந்து பொருட்களைக் களவாடிய போது, அவர்களிலே யாரோ ஒருவருடைய கையோ, காலோ என் கழுத்தில் அழுத்தப்பட்டிருந்தால் அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி தமிழ் என்கிற அந்த தன்னேரில்லா சொல் என்னால் உச்சரிக்கப்பட்டிருக்க மாட்டாது.
முழு விபரம்
1924-ம் ஆண்டு ஜூன் திங்கள் 3-ம்நாள் முத்துவேலர் என்கிற இசைத் தமிழ் தந்தைக்கும்-அஞ்சுகம் என்கிற அன்னைக்கும் திருக்குவளை எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து, ‘குவா குவா’ என்று குளிர் தமிழ் மொழியில் ஒலியெழுப்பிய அந்தக் காலத்தில் நான் பிறந்த அறையிலேயே திருடர்கள் புகுந்து பொருட்களைக் களவாடிய போது, அவர்களிலே யாரோ ஒருவருடைய கையோ, காலோ என் கழுத்தில் அழுத்தப்பட்டிருந்தால் அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி தமிழ் என்கிற அந்த தன்னேரில்லா சொல் என்னால் உச்சரிக்கப்பட்டிருக்க மாட்டாது.
Sunday, April 26, 2009
தமிழக முதல்வருக்கு ஒரு மனம் திறந்த மடல்! (9)
இரட்டை வேடம் அல்ல இருக்கும் வேடம் எல்லாம் போடுபவர்தான் கருணா(அ)நிதி
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்.
கம்யூனிஸ்ட்டுகள் இரட்டை வேடம் போடுவதாக ஒரு கவிதை எழுதியிருக்கிறீர்கள்!
அந்தக் அக்விதையைப் படித்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை முதல்வர் அவர்களே!
இரட்டைவேடம் போடுவதில் உலகத்தில் உங்களை விட சிறந்த நடிகர் யாரும் கிடையாது என்பதை நடைமுறையில் உலகுக்கு நீரூபித்துக்கொண்டுள்ள நீங்கள் அடுத்தவர்களை இரட்டைவேடம் போடுவதாகச் சொல்லுவது மகா அயோக்கியத்தனமானது; மனச்சாட்சி என்பது கொஞ்சம் கூட இல்லாமல் ஈழத்தமிழர்களை தேர்தல் பாடுபொருளாக எடுத்தாளும் உங்களை நாங்கள் புழுவினும் கீழாக மதிக்கிறோம். ஈழத் தமிழர் பிரச்னை அவ்வளவு கேவலாமாகப் போய்விட்டது உங்களுக்கு!
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்.
கம்யூனிஸ்ட்டுகள் இரட்டை வேடம் போடுவதாக ஒரு கவிதை எழுதியிருக்கிறீர்கள்!
அந்தக் அக்விதையைப் படித்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை முதல்வர் அவர்களே!
இரட்டைவேடம் போடுவதில் உலகத்தில் உங்களை விட சிறந்த நடிகர் யாரும் கிடையாது என்பதை நடைமுறையில் உலகுக்கு நீரூபித்துக்கொண்டுள்ள நீங்கள் அடுத்தவர்களை இரட்டைவேடம் போடுவதாகச் சொல்லுவது மகா அயோக்கியத்தனமானது; மனச்சாட்சி என்பது கொஞ்சம் கூட இல்லாமல் ஈழத்தமிழர்களை தேர்தல் பாடுபொருளாக எடுத்தாளும் உங்களை நாங்கள் புழுவினும் கீழாக மதிக்கிறோம். ஈழத் தமிழர் பிரச்னை அவ்வளவு கேவலாமாகப் போய்விட்டது உங்களுக்கு!
இலங்கை இரண்டாக உடைந்து விடும் : அமெரிக்கா எச்சரிக்கை
நியூயார்க். இலங்கையில் உடனடியாக போரை நிறுத்தாவிட்டால் அந்த நாடு இரண்டாக உடைந்துவிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. மேலும், தமிழர்களின் நிலைமை குறித்து விசாரிப்பதற்காக ஐ.நா. மனிதநேய பிரிவு தலைவர் ஜான் ஹோம்ஸ், 3 நாள் பயணமாக கொழும்பு சென்றார்.
இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து ஒரு லட்சத்து 9 ஆயிரம் தமிழர்கள் தப்பி வந்துவிட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. மேலும், சில ஆயிரம் பேர் மட்டுமே அங்கு இருப்பதாக கூறி வருகிறது. ஆனால், போர் நடைபெறும் பகுதிக்குள் இன்னும் 50 ஆயிரம் பேர் இருப்பதாக ஐ.நா. சபை மதிப்பீடு செய்து உள்ளது.
இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து ஒரு லட்சத்து 9 ஆயிரம் தமிழர்கள் தப்பி வந்துவிட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. மேலும், சில ஆயிரம் பேர் மட்டுமே அங்கு இருப்பதாக கூறி வருகிறது. ஆனால், போர் நடைபெறும் பகுதிக்குள் இன்னும் 50 ஆயிரம் பேர் இருப்பதாக ஐ.நா. சபை மதிப்பீடு செய்து உள்ளது.
Friday, April 24, 2009
இலங்கை சித்திரவதை முகாம்களில் : 45 ஆயிரம் தமிழர்கள்?
கொழும்பு. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு வளையத்தின் மீது நடத்திய கடும் தாக்குதல்களைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களில் 56 ஆயிரம் தமிழர்கள் அங்கிருந்து இலங்கை ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சுமார் 10 ஆயிரம் பேர் மட்டுமே சுகாதார முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஏனைய சுமார் 45 ஆயிரம் பேருக்கும் என்ன நடந்தது என்ற கேள்வி இப்போது எழுப்பப்படுகின்றது. அவர்களை ராணுவ முகாம்களில் அடைத்து சித்ரவதை செய்வதாக பல மனித உரிமைகள் அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஈழத் தமிழர்களுக்கான குரல்கள் ( வீடியோ)
ஈழத் தமிழர்களுக்காக நடிகர் சத்யராஜ், கவிஞர் தாமரை, ஈழத்திலிருந்து ஒரு தமிழனின் அவலக் குரல்கள்
இலங்கைக்கு வேண்டுகோள் - அமெரிக்கா ஏமாற்றம்
வாசிங்டன். போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற எங்களது வேண்டுகோளுக்கோ அல்லது உலகச் சமுதாயத்தின் வேண்டுகோளுக்கோ இலங்கை அரசு செவி சாய்க்க மறுப்பது குறித்து அமெரிக்க அரசு ஏமாற்றம் தெரிவித்துள்ளது. இலங்கை நிலைமை இடர் மிக்கதாக உள்ளது என்றும் அது கூறியுள்ளது.
அமெரிக்கா அரசின் வேண்டுகோளுக்கு மட்டுமின்றி, பரந்த பன்னாட்டுச் சமுதாயத்தின் வேண்டுகோளுக்கும் மோதலில் ஈடுபட்டுள்ள தரப்புகள் செவிசாய்க்க மறுக்கின்றன என்பதுதான் இப்போதுள்ள சிக்கல் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இராபர்ட் உட் கூறியுள்ளார்.
அமெரிக்கா அரசின் வேண்டுகோளுக்கு மட்டுமின்றி, பரந்த பன்னாட்டுச் சமுதாயத்தின் வேண்டுகோளுக்கும் மோதலில் ஈடுபட்டுள்ள தரப்புகள் செவிசாய்க்க மறுக்கின்றன என்பதுதான் இப்போதுள்ள சிக்கல் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இராபர்ட் உட் கூறியுள்ளார்.
Wednesday, April 22, 2009
தமிழக முதல்வருக்கு ஒரு மனம் திறந்த மடல்! (8)
.."பொது வேலைநிறுத்தம் இந்திய அரசியலமைப்புசட்டத்திற்கு எதிரானது"
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்.
ஈழத்தமிழர் நலனுக்காக, இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் கடந்தமாதம் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தபொழுது .."பொது வேலைநிறுத்தம் என்பது இந்திய அரசியலமைப்புசட்டத்திற்கு எதிரானது" என்று நீங்கள் சொன்னது உங்களுக்கே மறந்து அறிவித்திருக்கிறீர்கள்,முதல்வர் அவர்களே!
உங்களிடம் தொலைபேசி வசதியோ..அலைபேசி வசதியோ, தொலைநகல் வசதியோ.. மின்னஞ்சல் வசதியோ.. அட ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பக்கூட ஒரு கைத்தொலைபேசி வசதிகூட இல்லாத நிலையில்... இலங்கையில் போரை நிறுத்தச் சொல்லி இதுவரை மூன்று தந்திகளை அன்னை சோனியாவிற்கும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் அனுப்பியுள்ளீர்கள்.!
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்.
ஈழத்தமிழர் நலனுக்காக, இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் கடந்தமாதம் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தபொழுது .."பொது வேலைநிறுத்தம் என்பது இந்திய அரசியலமைப்புசட்டத்திற்கு எதிரானது" என்று நீங்கள் சொன்னது உங்களுக்கே மறந்து அறிவித்திருக்கிறீர்கள்,முதல்வர் அவர்களே!
உங்களிடம் தொலைபேசி வசதியோ..அலைபேசி வசதியோ, தொலைநகல் வசதியோ.. மின்னஞ்சல் வசதியோ.. அட ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பக்கூட ஒரு கைத்தொலைபேசி வசதிகூட இல்லாத நிலையில்... இலங்கையில் போரை நிறுத்தச் சொல்லி இதுவரை மூன்று தந்திகளை அன்னை சோனியாவிற்கும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் அனுப்பியுள்ளீர்கள்.!
இலங்கை பிரச்சனை தீராததற்கு காரணம் சுய நலமிக்க அரசியல்வதிகளே : வாழும்கலை ரவிசங்கர்
சென்னை. இலங்கை தமிழர் பிரச்சனை தீராததற்கு சுயநலம் கொண்ட அரசியல் வாதிகளே முழு முதல் காரணம் என்றும் இப்பிரச்சனையில் இந்தியா மிகபெரும் தவறு செய்துவிட்டது என்றும் வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சுவாமிகள் கூறியுள்ளார்.
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடந்த நேருக்குநேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரவிசங்கர் இலங்கையில் இருந்து தாம் நேராக இந்த பத்திரிக்கையாளர் மன்றத்திற்கு வந்துள்ளதாகவும், கடந்த 3 நாட்களாக வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் போரால் பாதிக்கப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகள் முகாமில் வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்ததாகவும் கூறினார். தமிழ் அகதிகளில் பெரும்பான்மையோர் கடும மனநோய்க்கு ஆளாகி உள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பான வாழ்விடங்களுக்கு செல்வேண்டும் என்ற ஆசையில் இருப்பதாகவும் கூறினார்.
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடந்த நேருக்குநேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரவிசங்கர் இலங்கையில் இருந்து தாம் நேராக இந்த பத்திரிக்கையாளர் மன்றத்திற்கு வந்துள்ளதாகவும், கடந்த 3 நாட்களாக வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் போரால் பாதிக்கப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகள் முகாமில் வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்ததாகவும் கூறினார். தமிழ் அகதிகளில் பெரும்பான்மையோர் கடும மனநோய்க்கு ஆளாகி உள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பான வாழ்விடங்களுக்கு செல்வேண்டும் என்ற ஆசையில் இருப்பதாகவும் கூறினார்.
தமிழகத்தில் வேலைக்காக காத்திருப்போர் : 55 லட்சம்
சென்னை. அரசு வேலைக்காக, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில், பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 55 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில், கடந்த ஜனவரி முதல் மாரச் 31 வரையிலான மூன்று மாதங்களில் மட்டும் 81 ஆயிரத்து 66 பேர் புதிதாக பதிவு செய்துள்ளனர்.
Tuesday, April 21, 2009
இலங்கை அப்பாவித் தமிழர்களின் அவலம் (வீடியோ)
இலங்கையில் நேற்றைய தாக்குதலி படுகாயமடைந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களின் அவலம் வீடியோவாக.
Monday, April 20, 2009
அரசியல் லாபத்திற்காக சாணக்கியரானவர் கருணாநிதி - டக்ளஸ் தேவானந்தா
கொழும்பு, பிரபாகரன் தீவிரவாதி அல்ல என்று சொன்னதன் மூலம், அரசியல் லாபத்துக்காக சாணக்கியர் போல கருணாநிதி செயல்படுகிறார் என இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.
இதுகுறித்து டக்ளஸ் தேவானந்தா கூறியதாவது:-
இதுகுறித்து டக்ளஸ் தேவானந்தா கூறியதாவது:-
Sunday, April 19, 2009
6,000 ஆசிரியர் நியமனம்: தேர்தல் கமிஷன் தடை
சென்னை, இடைநிலை ஆசிரியர் களை நியமனம் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கோரிக்கையை தலைமைத் தேர்தல் கமிஷன் நிராகரித்துவிட்டது.
அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் இடை நிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் இடை நிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
போர் முனையில் இருந்து 3000 ஈழ தமிழர்கள் முதல்வர் கருணாநிதி முயற்சியால் மீட்பு
சென்னை. இலங்கையில் போர் பகுதியில் சிக்கி தவித்த 3 ஆயிரம் ஈழத் தமிழர்கள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முயற்சியால் மீட்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தனி நாடு கேட்டு போராடி வரும் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போரில் இலங்கை ராணுவம் தினந்தோறும் குண்டுகளை வீசி அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது.
இலங்கையில் தனி நாடு கேட்டு போராடி வரும் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போரில் இலங்கை ராணுவம் தினந்தோறும் குண்டுகளை வீசி அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது.
Saturday, April 18, 2009
திமுக - காங்கிரஸ் தேர்தல் கூட்டணி உறவை எவனும், விளக்கவோ, சிதைக்கவோ முடியாது - கருணாநிதி
சென்னை. திமுக - காங்கிரஸ் தேர்தல் கூட்டணி உறவை எவனும், விளக்கவோ, சிதைக்கவோ முடியாது என்றும், நாற்பது தொகுதிகளிலும், நாம் வெற்றி பெற வேண்டும் என்றும் திமுக தலைவரும், முதலமைச்சருமான, கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார துவக்க விழாவும், வேட்பாளர்களின் அறிமுக விழாவும், மத்திய சென்னை மக்களவை தொகுதி புரசைவாக்கத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் கல்வி அமைச்சர் அன்பழகன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கூட்டணி வேட்பாளர்களை வாழ்த்தி கூடியிருந்த தொண்டர்களிடையே கருணாநிதி பேசியதாவது:-
திமுக - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார துவக்க விழாவும், வேட்பாளர்களின் அறிமுக விழாவும், மத்திய சென்னை மக்களவை தொகுதி புரசைவாக்கத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் கல்வி அமைச்சர் அன்பழகன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கூட்டணி வேட்பாளர்களை வாழ்த்தி கூடியிருந்த தொண்டர்களிடையே கருணாநிதி பேசியதாவது:-
இலங்கை படுகொலையை தடுக்க கோரி: 6-வது நாளாக பெண்கள் உண்ணாவிரதம்; - கண்டு கொள்ளாத அரசுகள்
சென்னை, இலங்கையில் போரை, சோனியாவே தடுத்து நிறுத்து என்ற ஒற்றை வரி கோஷத்துடன் சென்னையில் பெண்கள் குழு உண்ணாவிரத போராட்டத்தில் களம் இறங்கி உள்ளது.
ஈழத்தமிழ் இன அழிப்புக்கு எதிரான பெண்கள் அமைப்பு என்ற அமைப்பின் கீழ் 20 பெண்கள் கடந்த 13-ந்தேதி கொளத்தூரில் முத்துக்குமரன் வீடு அருகே உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால் அதற்கு போலீஸ் அனுமதி மறுத்ததால் எழும்பூரில் ம.தி.மு.க. அலுவலக வாசலில் சாமியானா பந்தல் அமைத்து உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
ஈழத்தமிழ் இன அழிப்புக்கு எதிரான பெண்கள் அமைப்பு என்ற அமைப்பின் கீழ் 20 பெண்கள் கடந்த 13-ந்தேதி கொளத்தூரில் முத்துக்குமரன் வீடு அருகே உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால் அதற்கு போலீஸ் அனுமதி மறுத்ததால் எழும்பூரில் ம.தி.மு.க. அலுவலக வாசலில் சாமியானா பந்தல் அமைத்து உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
Friday, April 17, 2009
தமிழக முதல்வருக்கு ஒரு மனம் திறந்த மடல்! (7)
திமுகவா? சோனியா திமுகவா?
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்.
"அ(றிக்கை)க்கப்போர் அறிக்கை மன்னன்"......"அறிக்கை கொண்டான்".....!"வெத்துவேட்டு அறிக்கையான்"..."காமெடி அறிக்கை கில்லாடி"....அடாடா என்ன இதெல்லாம் என்று நீங்கள் கோபமாகக் கேட்பது என் காதுமடல்களில் இடி ஓசையாக விழுகிறது முதல்வர் அவர்களே!
நாளொருமேனியும் பொழுதொருவண்ணமாக நீங்கள் அறிக்கை என்ற பெயரில் அடிக்கும் லூட்டி தாங்காமல் உங்களுக்கு ஒரு "கல்லக்குடி கொண்டான்" போல ஒரு பட்டத்தை வழங்கி கவுரவிக்கலாமா? என்று பார்த்தேன். ஒரு நல்ல பெயர்கூட கிடைக்க மாட்டேன் என்கிறது.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்.
"அ(றிக்கை)க்கப்போர் அறிக்கை மன்னன்"......"அறிக்கை கொண்டான்".....!"வெத்துவேட்டு அறிக்கையான்"..."காமெடி அறிக்கை கில்லாடி"....அடாடா என்ன இதெல்லாம் என்று நீங்கள் கோபமாகக் கேட்பது என் காதுமடல்களில் இடி ஓசையாக விழுகிறது முதல்வர் அவர்களே!
நாளொருமேனியும் பொழுதொருவண்ணமாக நீங்கள் அறிக்கை என்ற பெயரில் அடிக்கும் லூட்டி தாங்காமல் உங்களுக்கு ஒரு "கல்லக்குடி கொண்டான்" போல ஒரு பட்டத்தை வழங்கி கவுரவிக்கலாமா? என்று பார்த்தேன். ஒரு நல்ல பெயர்கூட கிடைக்க மாட்டேன் என்கிறது.
சுடிதார் அணிந்த நயன்தாராவிற்கு மடாதிபதி ஆதரவு
பாலக்காடு, கேரள மாநிலம் ஒற்றப்பாலம் அருகே உள்ள மனிசேரி என்ற இடத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட நடிகை நயன்தாரா சென்றார். அப்போது அவர் சுடிதார் அணிந்து இருந்தார். இந்த கோவிலுக்கு செல்லும் பெண்கள், சேலை தான் அணிந்து செல்ல வேண்டும் என்பது விதி.
இயக்குநர் சீமான் மீதான தேசியபாதுகாப்பு சட்டம் ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு
இயக்குநர் சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும் படிக்க...
மேலும் படிக்க...
Wednesday, April 15, 2009
தொல்.திருமாவளவன்:அரசியலில் வேதனை, விரக்தி
சென்னை, தேர்தல் அரசியல் என்னை மிகவும் சோர்வடையச் செய்கிறது. அதில் என்னால் தாக்கப் பிடிக்க முடியவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
அக்கட்சியின் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக் கூட்டம் பிறந்த நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் திருமாவளவன் பேசியது.
சூது, சூழ்ச்சி, வஞ்சகம் நிறைந்த தேர்தல் அரசியல் களத்தில் என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மனச் சோர்வின் விளிம்புக்கே சென்று திரும்புகிறேன்.
அக்கட்சியின் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக் கூட்டம் பிறந்த நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் திருமாவளவன் பேசியது.
சூது, சூழ்ச்சி, வஞ்சகம் நிறைந்த தேர்தல் அரசியல் களத்தில் என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மனச் சோர்வின் விளிம்புக்கே சென்று திரும்புகிறேன்.
இலங்கையில் பாதுகப்பான பகுதி தான் உலகிலேயே ஆபத்தான பகுதி - பிராட் ஆடம்ஸ்
நியூயார்க், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் இலங்கை பிரச்சனையில் தலையிட்டு அவசர நடவடிக்கை எடுத்து மனித உயிர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமை அமைப்பின் ஆசிய பிராந்திய இயக்குனர் பிராட் ஆடம்ஸ் தெரிவித்தார்.
ஐ.நா. சிறப்புத் தூதர் இலங்கைக்கு அனுப்பி, சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மேலும் கோரினார்.
ஐ.நா. சிறப்புத் தூதர் இலங்கைக்கு அனுப்பி, சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மேலும் கோரினார்.
Tuesday, April 14, 2009
சிலை திருடர்களை தண்டித்த கடவுள்!
செம்பனார்கோயில், நாகை மாவட்டம் செம்பனார் கோயில் அருகே உள்ள பெருமாள் கோயிலில் ஜனவரி 22-ம் தேதி 6 சாமி சிலைகள் கொள்ளை போயின. இந்நிலையில், கொள்ளை போன சிலைகளில் நான்கினை செங்கல்பட்டு அருகே உள்ள ஏரியில் மீட்டனர்.
இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், திண்டிவனம் அருகே 2 சிலைகளை நேற்று அதிகாலை மீட்டனர்.
இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், திண்டிவனம் அருகே 2 சிலைகளை நேற்று அதிகாலை மீட்டனர்.
Monday, April 13, 2009
இலங்கைப் பிரச்சனை: மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் - லயோலா கல்லூரி கருத்துகணிப்பு
சென்னை, தமிழக மக்களவைத் தேர்தலில் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் தேர்தல் முடிவுகளை ஏற்படுத்தும் முக்கிய காரணங்களில் ஒன்றாக விளங்கும் என்று மக்கள் ஆய்வகம் நடத்திய கருத்துகணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் ஆய்வகம் சார்பில் லயோலா கல்லூரி முதுகலை ஊடகக்தலைத்துறை மாணவர்கள் சார்பில் பேராசிரியர் டாக்டர் ராஜநாயகம் தலைமையில் தேர்தல் காலங்களில் மாநில அளவிலான கள ஆய்வு கருத்து கணிப்புகள் நடத்தப்படுகின்றன.
ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து 10-ம் தேதி வரை 39 தொகுதிகளிலும் தொகுதிக்கு 150 பேர் வீதம், மொத்தம் ஐந்து ஆயிரத்து 850 வாக்காளர்களிடம் கருத்துகள் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் குறித்து பேராசிரியர் ராஜநாயகம் நிருபர்களிடம் கூறியது.
மக்கள் ஆய்வகம் சார்பில் லயோலா கல்லூரி முதுகலை ஊடகக்தலைத்துறை மாணவர்கள் சார்பில் பேராசிரியர் டாக்டர் ராஜநாயகம் தலைமையில் தேர்தல் காலங்களில் மாநில அளவிலான கள ஆய்வு கருத்து கணிப்புகள் நடத்தப்படுகின்றன.
ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து 10-ம் தேதி வரை 39 தொகுதிகளிலும் தொகுதிக்கு 150 பேர் வீதம், மொத்தம் ஐந்து ஆயிரத்து 850 வாக்காளர்களிடம் கருத்துகள் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் குறித்து பேராசிரியர் ராஜநாயகம் நிருபர்களிடம் கூறியது.
Sunday, April 12, 2009
கருணாநிதி நடத்திய பேரணியால் தான் ராஜபக்சே பணிந்தார் - சொல்கிறார் செல்வநாயகத்தின் மகன் சந்திரஹாசன்.
இலங்கையில் போரை நிறுத்தக்கோரி சென்னையில் கடந்த 10 ம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழர் பேரணி ந்டைபெற்றது. இதன் காரணமாகதான் இலங்கை அரசு 2 நாள் போர் நிறுத்தம் அறிவித்துள்ளதாக இலங்கை தமிழர் தந்தை செல்வ நாயகத்தின் மகன் சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 2 நாட்கள் போர் நிறுத்தம் - ராஜபக்சே அறிவிப்பு
கொழும்பு, போர் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி தமிழர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக இலங்கை அரசு 2 நாட்கள் போர் நிறுத்தம் அறிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இது அமலுக்கு வந்தது. இந்த போர் நிறுத்தத்துக்கு விடுதலைப் புலிகளும் சம்மதம் தெரிவித்துள்ளனர் என கூறப்படுகிறது.
Saturday, April 11, 2009
நடிகர் மீது முட்டை வீச்சு - ஆந்திராவில் பரபரப்பு
சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் மீது முட்டை வீச்சு - ஆந்திராவில் பரபரப்பு
சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் கர்னூலில் பிரஜா ராஜ்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தபோது அவர் மீது செருப்பு, முட்டை வீசப்பட்டது.
ஆந்திராவில் மக்களவை மற்றும் சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது. பிரஜா ராஜ்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் பிரசாரம் செய்து வருகிறார். மாநில இளைஞரணி தலைவரான இவர், மகபூப் நகர் மாவட்டம் நாகர் கர்னூல் பகுதியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் கர்னூலில் பிரஜா ராஜ்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தபோது அவர் மீது செருப்பு, முட்டை வீசப்பட்டது.
ஆந்திராவில் மக்களவை மற்றும் சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது. பிரஜா ராஜ்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் பிரசாரம் செய்து வருகிறார். மாநில இளைஞரணி தலைவரான இவர், மகபூப் நகர் மாவட்டம் நாகர் கர்னூல் பகுதியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
Friday, April 10, 2009
அதிமுக வேட்பாளர்கள் மாற்றம் - ஜெ அதிரடி
சென்னை, அதிமுக சார்பில் பெரம்பலூர், திருவள்ளூர் மக்களவைத் தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அதிரடியாக நீக்கியுள்ளார்.
விரைவில் மதிமுக சார்பில் வைகோ டிவி
சென்னை, ம.தி.மு.க.வின் பொதுக் குழு வைகோ தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. 1000-க்கும் மேற்பட்ட நிர் வாகிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் வைகோ மதிமுகவிற் ஒரு டிவி ஆரம்பிக்க இருப்பதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
நமது இயக்கத்திற்காக ஒரு டி.வி. இந்த ஆண்டுக்குள் தொடங்கப்படும் என்று வைகோ கூறியதும், தொண் டர்கள் கை தட்டி மகிழ்ச்சி தெரிவித்து வரவேற்றனர். நமது கட்சிக்கு என்று ஒரு டி.வி. வேண்டும் என் பது உங்களது நீண்ட கால கனவு. ஒவ்வொரு பொதுக் குழுவிலும் டி.வி. தொடங்க வேண்டும் என்று தொண்டர்கள் கருத்து கூறி னார்கள். அவர்களது ஆசை, எண்ணம் எல்லாம் இந்த ஆண்டு நிறைவேற போகிறது என்று வைகோ கூறினார்.
நமது இயக்கத்திற்காக ஒரு டி.வி. இந்த ஆண்டுக்குள் தொடங்கப்படும் என்று வைகோ கூறியதும், தொண் டர்கள் கை தட்டி மகிழ்ச்சி தெரிவித்து வரவேற்றனர். நமது கட்சிக்கு என்று ஒரு டி.வி. வேண்டும் என் பது உங்களது நீண்ட கால கனவு. ஒவ்வொரு பொதுக் குழுவிலும் டி.வி. தொடங்க வேண்டும் என்று தொண்டர்கள் கருத்து கூறி னார்கள். அவர்களது ஆசை, எண்ணம் எல்லாம் இந்த ஆண்டு நிறைவேற போகிறது என்று வைகோ கூறினார்.
சீக்கியர்களுக்கு நியாயம் வழங்கிய சோனியா காங்கிரசே, எங்கள் சகோதரர்களுக்கு நீதி எப்போது ?
1984 முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தி சுட்டு கொல்லபட்டார். அவரை சுட்டு கொன்றவர் அவரது பாதுகாவலர்களான சீக்கியர் இருவர். ஏன் சுட்டு கொன்றனர் சீக்கியர்களின் புனித ஸ்தலம் அவர்களின் தலைமை புனிதஸ்தலம் உலகத்தின் ராஜா வந்தாலும் பாதங்களை கழுவாமல் உள்ளே செல்ல அனுமதி இல்லை, இதற்காகவென்றே தனியாக பொற்றாமரை குளம் ஒன்று கட்டி வைத்தனர். உடலில் மட்டுமல்ல உள்ளத்திலும் அசுத்தம் இன்றி செல் , பசி இன்றி செல் என்று சொல்வது போல் இலவச உணவு, தியானம் போன்றவற்றை செய்து விட்டு தங்களது புனித கோவிலுக்குள் செல்வர் சீக்கியர்கள். ஆனால் அந்த புனித கோவிலில் ஆயுதம் ஏந்திய ராணுவம் நுழைந்தது.
புலி ஆதரவுப் பேச்சு - வைகோ மீது நடவடிக்கை இல்லை தேர்தல் கமிஷன்
கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசிய போது, விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் மீது சிறு துரும்பு விழுந்தாலும் தமிழ்நாட்டில் ரத்த ஆறு ஓடும் என்று கூறினார்.
வைகோவின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியது தவறு என்று புகார் கூறப்பட்டது. வைகோவின் பேச்சை வடக்கு கடற்கரை போலீசார் வீடியோவில் பதிவு செய்திருந்தனர்.
Thursday, April 9, 2009
இறுதிப் போருக்கு புலிகள் தயார்!
கொழும்பு, இலங்கையில் இராணுவத்திற்கும் விடுதப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. விடுதலைப்புலிகள் வசம் இருந்த புதுக்குடியிருப்பு பகுதியையும் இராணுவத்தினர் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இராணுவத் தகவலின் படி இன்னும் விடுதலைப் புலிகள் வசம் 20 கி.மீ சதுரப் பரப்பளவு மட்டுமே உள்ளது. இந்த பகுதிகளையும் கைப்பற்றுவதற்காக இராணுவத்தினர் கடுமையாக போராடி வருகின்றனர்.இந்த பகுதிகளை காப்பற்றி கொள்ள விடுதலைப் புலிகளும் கடுமையான எதிர்தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
பிரபாகரன் உடல் நிலை பாதிப்பு, பொட்டு அம்மன் தலைவரானார் - இலங்கை இராணுவம் தகவல்
கொழும்பு, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் புலிகளின் தலைவராக பொட்டு அம்மன் பொறுப்பேற்றுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே புலிகள் சரண் அடைந்தால் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என ராஜபக்சே அறிவித்துள்ளார்.
இலங்கையில் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே போர் தீவிரம் அடைந்தது. கிளிநொச்சி மற்றும் யானையிறவு பகுதிகளை இராணுவம் கைப்பற்றி முன்னேறி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு புலிகள் வசம் இருந்த புதுகுடியிருப்பு பகுதியை கைப்பற்றி விட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. பாதுகப்பு வலையப் பகுதியில் புலிகளின் முக்கியத் தலைவர்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இலங்கையில் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே போர் தீவிரம் அடைந்தது. கிளிநொச்சி மற்றும் யானையிறவு பகுதிகளை இராணுவம் கைப்பற்றி முன்னேறி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு புலிகள் வசம் இருந்த புதுகுடியிருப்பு பகுதியை கைப்பற்றி விட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. பாதுகப்பு வலையப் பகுதியில் புலிகளின் முக்கியத் தலைவர்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சோனியாவிற்கு எங்களால் எந்த ஆபத்தும் வராது - விடுதலைப்புலிகள்
Thursday, April 09, 2009 10:05 AM
இலங்கையில் போரை நிறுத்த இந்தியா உதவ வேண்டும் என்று தமிழ்நாட்டில் இருந்தும், உலகத் தமிழர்களிடம் இருந்தும் மீண்டும், மீண்டும் கோரிக்கைகள் வந்த போதிலும் சோனியா மவுனமாக உள்ளார்.
ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க சோனியா எந்த ஒரு முயற்சியும் எடுக்காதது விடுதலைப்புலி தலைவர்களிடம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் விடுதலைப்புலிகளால் சோனியா உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்தது.
ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க சோனியா எந்த ஒரு முயற்சியும் எடுக்காதது விடுதலைப்புலி தலைவர்களிடம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் விடுதலைப்புலிகளால் சோனியா உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்தது.
இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்: ம.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்Thursday, April 09, 2009 9:59 AM
அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருதுநகர், ஈரோடு, தஞ்சை, நீலகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்த நிலையில் ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் அண்ணாநகர் நியூ ஆவடி ரோடு சந்திப்பில் உள்ள விஜய்ஸ்ரீ மகாலில் இன்று நடந்தது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். பொருளாளர் மாசிலாமணி, துணைப் பொதுச்செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா, துரை பால கிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் ஜீவன், மணி மாறன், தாமரைக்கண்ணன் மற்றும் ஆட்சிமன்ற உறுப்பி னர்கள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் அண்ணாநகர் நியூ ஆவடி ரோடு சந்திப்பில் உள்ள விஜய்ஸ்ரீ மகாலில் இன்று நடந்தது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். பொருளாளர் மாசிலாமணி, துணைப் பொதுச்செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா, துரை பால கிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் ஜீவன், மணி மாறன், தாமரைக்கண்ணன் மற்றும் ஆட்சிமன்ற உறுப்பி னர்கள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடுThursday, April 09, 2009 9:18 AM
சென்னை, தமிழக மக்களவைத் தேர்தலில் அண்ணா திமுக சார்பில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த 23 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வருமாறு:-
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த 23 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வருமாறு:-
இலங்கையில் சிறுவர் பராமரிப்பு நிலையம் மீது இராணுவம் தாக்குதல்: 40 பொதுமக்கள் படுகொலை;Wednesday, April 08, 2009 5:22 PM
வன்னியில் பாதுகாப்பு வலயப் பகுதி என இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பொக்கணை பிரதேசத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையம், பால்மா விநியோக நிலையம் ஆகியவற்றின் மீது இன்று இலங்கை இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 100 சிறுவர்கள் உட்பட 258 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு இழப்புWednesday, April 08, 2009 5:18 PM
மும்பை, வங்கிகள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்கள் மார்ச் மாதத்தில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு மியூச்சுவல் பண்டு முதலீடுகளை திரும்பப் பெற்றதால் மியூச்சுவல் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஷூ வீசிய நிருபருக்கு சீட் - அகாலிதளம் அறிவிப்புWednesday, April 08, 2009 5:00 PM
1984ம் ஆண்டில் இந்திரா காந்தி கொலையான சமயத்தில் டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் டைட்லர் சமீபத்தில் இந்த வழக்கில் விடுவிக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தைனிக் ஜார்கன் பத்திரிக்கை நிருபர் ஜர்னைல் சிங், சிதம்பரம் மீது தனது ஷூவை கழற்சி வீசினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தைனிக் ஜார்கன் பத்திரிக்கை நிருபர் ஜர்னைல் சிங், சிதம்பரம் மீது தனது ஷூவை கழற்சி வீசினார்.
பஞ்சாப், வெடித்தது சீக்கியர்கள் போராட்டம்Wednesday, April 08, 2009 4:54 PM
சண்டிகர்: சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் ஜெகதீஷ் டைட்லர் நிரபராதி என அறிவிக்கப்பட்டதைக் கண்டித்து பஞ்சாப் முழுவதும் சீக்கியர்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவுகிறது.
அதிமுக கூட்டணி ம.தி.மு.க.வுக்கு 4 தொகுதிகள்; இன்று உடன்பாடுWednesday, April 08, 2009 4:48 PM
சென்னை, அ.தி.மு.க. கூட்டணி யில் இடம் பெற்றுள்ள பா.ம.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. பா.ம.க. 7 தொகுதியிலும், கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. பா.ம.க.வும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் வேட்பாளர்களை அறிவித்து விட்டன.
ம.தி.மு.க.வுக்கு தொகுதி கள் ஒதுக்குவது தொடர்பாக 4 கட்ட பேச்சு நடந்த பிறகும் உடன்பாடு ஏற்படாமல் இழுபறி ஏற்பட்டது. ம.தி.மு.க. 5 தொகுதிகள் கேட்டது. அ.தி.மு.க. தரப்பில் 3 தொகுதிகளே ஒதுக்க முன் வந்தது. இதை ம.தி.மு.க. ஏற்க மறுத்ததால் பேச்சு வார்த்தை நீடித்தது. இதனால் ம.தி.மு.க.வினர் அதிருப்தியில் இருந்தனர்.
ம.தி.மு.க.வுக்கு தொகுதி கள் ஒதுக்குவது தொடர்பாக 4 கட்ட பேச்சு நடந்த பிறகும் உடன்பாடு ஏற்படாமல் இழுபறி ஏற்பட்டது. ம.தி.மு.க. 5 தொகுதிகள் கேட்டது. அ.தி.மு.க. தரப்பில் 3 தொகுதிகளே ஒதுக்க முன் வந்தது. இதை ம.தி.மு.க. ஏற்க மறுத்ததால் பேச்சு வார்த்தை நீடித்தது. இதனால் ம.தி.மு.க.வினர் அதிருப்தியில் இருந்தனர்.
பிரபாகரன் மீது துரும்பு விழுந்தால் தமிழ்நாட்டில் இரத்த ஆறு ஓடும்: வைகோWednesday, April 08, 2009 4:40 PM
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மீது சிறு துரும்பு விழுந்தாலும் தமிழ்நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளதுடன் விடுதலைப் புலிகளை எவரும் அழிக்க முடியாது என்றும் சூளுரைத்துள்ளார்.
உலகத் தமிழர்களிடம் கலைஞர் கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்: இராமதாஸ்Wednesday, April 08, 2009 4:37 PM
உலகத் தமிழர்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இலங்கை அரசாங்கம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது : விடுதலைப்புலிகள் குற்றச்சாட்டுWednesday, April 08, 2009 4:00 PM
கடந்த வாரம் இராணுவத்தினர் புதுக்குடியிருப்பில் மேற்கொண்ட தாக்குதல்களின் போது, இரசாயன ஆயுதங்களை பாவித்துள்ளனர் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல்களில் இருந்து தப்பி வந்த விடுதலைப் புலிகளின் தளபதியான லாரன்ஸ் இந்த தகவலினை வெளியிட்டுள்ளார்.
இந்த தாக்குதல்களில் இருந்து தப்பி வந்த விடுதலைப் புலிகளின் தளபதியான லாரன்ஸ் இந்த தகவலினை வெளியிட்டுள்ளார்.
சிதம்பரம் தொகுதியில் தொல்.திருமாவளவன் போட்டிWednesday, April 08, 2009 3:53 PM
சென்னை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களாக தொழில் அதிபர் மடிப்பாக்கம் வேலாயுதமும், சிதம்பரம் தொகுதியின் வேட்பாளராக விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும், அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
10-ம் வகுப்பு தேர்வுத்தாள் திருத்தும் பணி ஏப்.15 ல் துவக்கம்Wednesday, April 08, 2009 3:25 PM
சென்னை, எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வுத் தாள்கள் திருத்தும் பணி வரும் 15-ம் தேதி துவங்குகிறது.
புதுச்சேரி அரசுக்கு அளித்து வந்த ஆதரவினை பாமக வாபஸ் பெற்றதுWednesday, April 08, 2009 3:24 PM
புதுச்சேரி, புதுச்சேரி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாட்டாளி மக்கள் கட்சி வாபஸ் பெற்றுள்ளது.
கூட்டணி குறித்து பேச மதிமுக விலிருந்து யாரும் வரவில்லை - இல.கணேசன்Wednesday, April 08, 2009 3:35 AM
சென்னை, பாரதீய ஜனதா கட்சித்தலைவர் இல.கணேசன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சோனியா காந்தியை போலவே ராகுல்காந்தியும் வேட்புமனுவில் தன்னுடைய கல்வி பற்றி தவறான தகவல் அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? வருண்காந்திக்கு ஒரு நியாயம்? ராகுல்காந்திக்கு ஒரு நியாயமா?
லாலுபிரசாத் யாதவ், ஒரு குறிப்பிட்ட நபரை ரோடுரோலரை ஏற்றி நசுக்கி கொல்வேன் என்று பகிரங்கமாக சொல்லியிருக்கிறார். கொடூரமான வாசகங்களை உதிர்த்திருக்கிறார். லாலு பிரசாத் யாதவ் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும்.
சோனியா காந்தியை போலவே ராகுல்காந்தியும் வேட்புமனுவில் தன்னுடைய கல்வி பற்றி தவறான தகவல் அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? வருண்காந்திக்கு ஒரு நியாயம்? ராகுல்காந்திக்கு ஒரு நியாயமா?
லாலுபிரசாத் யாதவ், ஒரு குறிப்பிட்ட நபரை ரோடுரோலரை ஏற்றி நசுக்கி கொல்வேன் என்று பகிரங்கமாக சொல்லியிருக்கிறார். கொடூரமான வாசகங்களை உதிர்த்திருக்கிறார். லாலு பிரசாத் யாதவ் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும்.
இலங்கையில் போர் நிறுத்த கோரி - பிரதமருக்கு கருணாநிதி தந்திWednesday, April 08, 2009 3:32 AM
சென்னை, இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. அப்பாவி தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இலங்கை ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகிறது. கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றிய இலங்கை ராணுவம் தற்போது புதுக்குடியிருப்பு பகுதியில் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.
இலங்கை இராணுவத்தில் இந்திய இராணுவ வீரர்கள்?Tuesday, April 07, 2009 5:03 PM
இலங்கையின் வட பகுதியில் சிங்கள இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்களும் பங்கெடுத்துள்ளதாகவும், இந்திய வீரர்கள் இரு படைப் பிரிவுகளில் இடம் பெற்றிருப்பதாகவும், இந்திய இராணுவ அதிகாரிகள், இலங்கைப் படையினரை வழி நடத்தி வருவதாகவும் பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கை தமிழர்களின் ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் இந்திய அரசாங்கமே பொறுப்பு – வை. கோTuesday, April 07, 2009 4:46 PM
இலங்கை இராணுவத்தினர் புதுக்குடியிருப்பை கைப்பற்றியதாக அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் தமது அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்ககழகம் நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த போராட்டத்தின் இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் ஒன்றினை அறிவிக்கை வேண்டும் என அவர்கள் வலியுறுத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்ககழகம் நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த போராட்டத்தின் இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் ஒன்றினை அறிவிக்கை வேண்டும் என அவர்கள் வலியுறுத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருணாசல பிரதேச ஜனாதிபதி சுற்றுப்பயணத்திற்கு சீனா எதிர்ப்புTuesday, April 07, 2009 4:41 PM
ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் அருணாசல பிரதேச சுற்றுப்பயணத்துக்கு சீனா ஆட்சேபம் தெரிவித்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் சீனாவை ஒட்டியுள்ள அருணாசலபிரதேசத்துக்கு வெகுநாட்களாகவே சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. பிரதமர் மன்மோகன்சிங் அருணாசல் சென்ற போதும் ஆட்சேபணை தெரிவித்தது. இதற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதி என நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன்சிங் திட்டவட்டமாக அறிவித்தார்.
இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் சீனாவை ஒட்டியுள்ள அருணாசலபிரதேசத்துக்கு வெகுநாட்களாகவே சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. பிரதமர் மன்மோகன்சிங் அருணாசல் சென்ற போதும் ஆட்சேபணை தெரிவித்தது. இதற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதி என நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன்சிங் திட்டவட்டமாக அறிவித்தார்.
இத்தாலி பூகம்பம் 150 க்கு மேற்பட்டோர் பலிTuesday, April 07, 2009 4:40 PM
இத்தாலியின் அப்ரூசோ மாநிலத்தில் 26 நகரங்களில் நேற்று அதிகாலை பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதில் 15 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. தலைநகர் அக்யூல்லாவில் பள்ளி மாணவர் விடுதி ஒன்றும் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் பலியாயினர். மீட்பு பணிகள் நேற்று உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. இதுவரை 150க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என கருதப்படுகிறது. காயம் அடைந்த 1500 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர்.
மும்பை, கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் மயக்க மருந்து கொடுத்து பயணிகளிடம் கொள்ளைTuesday, April 07, 2009 4:36 PM
சேலம், மும்பையில் இருந்து கோவை வரும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் மூன்று பயணிகள் மயங்கி கிடந்தனர். இவர்களுக்கு கொள்ளை கும்பல் மயக்க மருந்து கொடுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மும்பையிலிருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட குர்லா எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று இரவு 9.30 மணியளவில் பெங்களூர் வந்தது. அப்போது மூன்றடுக்கு ஏசி பெட்டியில் மூன்று பயணிகள் மயங்கி கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் இதுகுறித்து விசாரிப்பதற்குள், பெங்களூரில் இருந்து ரயில் புறப்பட்டு விட்டது. இதுகுறித்து பெங்களூர் ரயில்வே போலீசார், சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
மும்பையிலிருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட குர்லா எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று இரவு 9.30 மணியளவில் பெங்களூர் வந்தது. அப்போது மூன்றடுக்கு ஏசி பெட்டியில் மூன்று பயணிகள் மயங்கி கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் இதுகுறித்து விசாரிப்பதற்குள், பெங்களூரில் இருந்து ரயில் புறப்பட்டு விட்டது. இதுகுறித்து பெங்களூர் ரயில்வே போலீசார், சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்Tuesday, April 07, 2009 4:32 PM
தமிழகத்தில் மே 13ம் தேதி மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 17ம் தேதி துவங்குகிறது. தேர்தலுக்காக ஒவ்வொரு கட்டமாக பல்வேறு நிலைகளில் உள்ள அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் பயிற்சி அளித்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தின் 32 மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள், நேர்முக உதவியாளர்கள் (தேர்தல்) மற்றும் தாசில்தார் களுக்கு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கவும், பயிற்சி அளிக்கவும் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா ஏற்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தின் 32 மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள், நேர்முக உதவியாளர்கள் (தேர்தல்) மற்றும் தாசில்தார் களுக்கு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கவும், பயிற்சி அளிக்கவும் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா ஏற்பாடு செய்துள்ளார்.
எந்த எந்த ஆவணங்களை காட்டி ஓட்டு போடுவது? தேர்தல் ஆணையம் பட்டியல்Tuesday, April 07, 2009 4:16 PM
புதுடெல்லி, புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் அதற்கு மாற்றாக பயன்படுத்தக் கூடிய 13 ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில், ரேஷன் அட்டை இடம் பெறவில்லை.
மக்களவைக்கு வரும் 16ம் தேதி முதல் மே 13 வரை ஐந்து கட்டமாக தேர்தல் நடக்கிறது.
மக்களவைக்கு வரும் 16ம் தேதி முதல் மே 13 வரை ஐந்து கட்டமாக தேர்தல் நடக்கிறது.
அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வு முறையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்குTuesday, April 07, 2009 4:11 PM
சென்னை, அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வு முறையை எதிர்த்து ஐகோட்டில் தொடரப்பட்ட வழக்கில் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கோவை பொறியியல் கல்லூரிகள் நிர்வாக சங்கத்தின் தலைவர் சுதானந்தன், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:
கோவை பொறியியல் கல்லூரிகள் நிர்வாக சங்கத்தின் தலைவர் சுதானந்தன், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:
அதிமுக,மதிமுக தொகுதி பங்கீட்டில் இழுபறி:Tuesday, April 07, 2009 4:08 PM
சென்னை, அதிமுக கூட்டணியில் மதிமுகவுடன் மட்டும் இன்னும் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை. இதுகுறித்து இன்றும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், பாமக, மார்¢க்சிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணியில் புதிதாக சேர்ந்த பாமகவுக்கு எடுத்த எடுப்பிலேயே 7 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதன்பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 இடங்கள் தரப்பட்டது. மார்க்சிஸ்ட்டுக்கும் மதிமுகவுக்கும்தான் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது. கேட்ட தொகுதிகள் கிடைக்காததாலும் கூடுதல் தொகுதிகள் கேட்டதாலும் இந்த சிக்கல் தொடர்ந்தது.
அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், பாமக, மார்¢க்சிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணியில் புதிதாக சேர்ந்த பாமகவுக்கு எடுத்த எடுப்பிலேயே 7 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதன்பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 இடங்கள் தரப்பட்டது. மார்க்சிஸ்ட்டுக்கும் மதிமுகவுக்கும்தான் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது. கேட்ட தொகுதிகள் கிடைக்காததாலும் கூடுதல் தொகுதிகள் கேட்டதாலும் இந்த சிக்கல் தொடர்ந்தது.
Wednesday, April 8, 2009
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு இழப்பு
சங்கமம் இன்றைய செய்திகள்
இலங்கையில் சிறுவர் பராமரிப்பு ...Wednesday, April 08, 2009 5:22 PM
வன்னியில் பாதுகாப்பு வலயப் பகுதி என இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பொக்கணை பிரதேசத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையம், பால்மா விநியோக நிலையம் ஆகியவற்றின் மீது இன்று இலங்கை இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 100 சிறுவர்கள் உட்பட 258 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ...Wednesday, April 08, 2009 5:18 PM
மும்பை, வங்கிகள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்கள் மார்ச் மாதத்தில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு மியூச்சுவல் பண்டு முதலீடுகளை திரும்பப் பெற்றதால் மியூச்சுவல் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஷூ வீசிய நிருபருக்கு சீட் - ...Wednesday, April 08, 2009 5:00 PM
1984ம் ஆண்டில் இந்திரா காந்தி கொலையான சமயத்தில் டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் டைட்லர் சமீபத்தில் இந்த வழக்கில் விடுவிக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தைனிக் ஜார்கன் பத்திரிக்கை நிருபர் ஜர்னைல் சிங், சிதம்பரம் மீது தனது ஷூவை கழற்சி வீசினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தைனிக் ஜார்கன் பத்திரிக்கை நிருபர் ஜர்னைல் சிங், சிதம்பரம் மீது தனது ஷூவை கழற்சி வீசினார்.
பஞ்சாப், வெடித்தது சீக்கியர்கள் ...Wednesday, April 08, 2009 4:54 PM
சண்டிகர்: சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் ஜெகதீஷ் டைட்லர் நிரபராதி என அறிவிக்கப்பட்டதைக் கண்டித்து பஞ்சாப் முழுவதும் சீக்கியர்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவுகிறது.
அதிமுக கூட்டணி ம.தி.மு.க. ...Wednesday, April 08, 2009 4:48 PM
சென்னை, அ.தி.மு.க. கூட்டணி யில் இடம் பெற்றுள்ள பா.ம.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. பா.ம.க. 7 தொகுதியிலும், கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. பா.ம.க.வும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் வேட்பாளர்களை அறிவித்து விட்டன.
ம.தி.மு.க.வுக்கு தொகுதி கள் ஒதுக்குவது தொடர்பாக 4 கட்ட பேச்சு நடந்த பிறகும் உடன்பாடு ஏற்படாமல் இழுபறி ஏற்பட்டது. ம.தி.மு.க. 5 தொகுதிகள் கேட்டது. அ.தி.மு.க. தரப்பில் 3 தொகுதிகளே ஒதுக்க முன் வந்தது. இதை ம.தி.மு.க. ஏற்க மறுத்ததால் பேச்சு வார்த்தை நீடித்தது. இதனால் ம.தி.மு.க.வினர் அதிருப்தியில் இருந்தனர்.
ம.தி.மு.க.வுக்கு தொகுதி கள் ஒதுக்குவது தொடர்பாக 4 கட்ட பேச்சு நடந்த பிறகும் உடன்பாடு ஏற்படாமல் இழுபறி ஏற்பட்டது. ம.தி.மு.க. 5 தொகுதிகள் கேட்டது. அ.தி.மு.க. தரப்பில் 3 தொகுதிகளே ஒதுக்க முன் வந்தது. இதை ம.தி.மு.க. ஏற்க மறுத்ததால் பேச்சு வார்த்தை நீடித்தது. இதனால் ம.தி.மு.க.வினர் அதிருப்தியில் இருந்தனர்.
பிரபாகரன் மீது துரும்பு ...Wednesday, April 08, 2009 4:40 PM
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மீது சிறு துரும்பு விழுந்தாலும் தமிழ்நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளதுடன் விடுதலைப் புலிகளை எவரும் அழிக்க முடியாது என்றும் சூளுரைத்துள்ளார்.
உலகத் தமிழர்களிடம் கலைஞர் ...Wednesday, April 08, 2009 4:37 PM
உலகத் தமிழர்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இலங்கை அரசாங்கம் இரசாயன ஆயுதங்களை ...Wednesday, April 08, 2009 4:00 PM
கடந்த வாரம் இராணுவத்தினர் புதுக்குடியிருப்பில் மேற்கொண்ட தாக்குதல்களின் போது, இரசாயன ஆயுதங்களை பாவித்துள்ளனர் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல்களில் இருந்து தப்பி வந்த விடுதலைப் புலிகளின் தளபதியான லாரன்ஸ் இந்த தகவலினை வெளியிட்டுள்ளார்.
இந்த தாக்குதல்களில் இருந்து தப்பி வந்த விடுதலைப் புலிகளின் தளபதியான லாரன்ஸ் இந்த தகவலினை வெளியிட்டுள்ளார்.
சிதம்பரம் தொகுதியில் தொல். ...Wednesday, April 08, 2009 3:53 PM
சென்னை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களாக தொழில் அதிபர் மடிப்பாக்கம் வேலாயுதமும், சிதம்பரம் தொகுதியின் வேட்பாளராக விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும், அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
10-ம் வகுப்பு தேர்வுத்தாள் ...Wednesday, April 08, 2009 3:25 PM
சென்னை, எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வுத் தாள்கள் திருத்தும் பணி வரும் 15-ம் தேதி துவங்குகிறது.
புதுச்சேரி அரசுக்கு அளித்து வந்த ...Wednesday, April 08, 2009 3:24 PM
புதுச்சேரி, புதுச்சேரி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாட்டாளி மக்கள் கட்சி வாபஸ் பெற்றுள்ளது.
கூட்டணி குறித்து பேச மதிமுக ...Wednesday, April 08, 2009 3:35 AM
சென்னை, பாரதீய ஜனதா கட்சித்தலைவர் இல.கணேசன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சோனியா காந்தியை போலவே ராகுல்காந்தியும் வேட்புமனுவில் தன்னுடைய கல்வி பற்றி தவறான தகவல் அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? வருண்காந்திக்கு ஒரு நியாயம்? ராகுல்காந்திக்கு ஒரு நியாயமா?
லாலுபிரசாத் யாதவ், ஒரு குறிப்பிட்ட நபரை ரோடுரோலரை ஏற்றி நசுக்கி கொல்வேன் என்று பகிரங்கமாக சொல்லியிருக்கிறார். கொடூரமான வாசகங்களை உதிர்த்திருக்கிறார். லாலு பிரசாத் யாதவ் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும்.
சோனியா காந்தியை போலவே ராகுல்காந்தியும் வேட்புமனுவில் தன்னுடைய கல்வி பற்றி தவறான தகவல் அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? வருண்காந்திக்கு ஒரு நியாயம்? ராகுல்காந்திக்கு ஒரு நியாயமா?
லாலுபிரசாத் யாதவ், ஒரு குறிப்பிட்ட நபரை ரோடுரோலரை ஏற்றி நசுக்கி கொல்வேன் என்று பகிரங்கமாக சொல்லியிருக்கிறார். கொடூரமான வாசகங்களை உதிர்த்திருக்கிறார். லாலு பிரசாத் யாதவ் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும்.
இலங்கையில் போர் நிறுத்த கோரி - ...Wednesday, April 08, 2009 3:32 AM
சென்னை, இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. அப்பாவி தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இலங்கை ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகிறது. கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றிய இலங்கை ராணுவம் தற்போது புதுக்குடியிருப்பு பகுதியில் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.
இலங்கை இராணுவத்தில் இந்திய இராணுவ ...Tuesday, April 07, 2009 5:03 PM
இலங்கையின் வட பகுதியில் சிங்கள இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்களும் பங்கெடுத்துள்ளதாகவும், இந்திய வீரர்கள் இரு படைப் பிரிவுகளில் இடம் பெற்றிருப்பதாகவும், இந்திய இராணுவ அதிகாரிகள், இலங்கைப் படையினரை வழி நடத்தி வருவதாகவும் பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கை தமிழர்களின் ஒவ்வொரு துளி ...Tuesday, April 07, 2009 4:46 PM
இலங்கை இராணுவத்தினர் புதுக்குடியிருப்பை கைப்பற்றியதாக அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் தமது அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்ககழகம் நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த போராட்டத்தின் இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் ஒன்றினை அறிவிக்கை வேண்டும் என அவர்கள் வலியுறுத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்ககழகம் நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த போராட்டத்தின் இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் ஒன்றினை அறிவிக்கை வேண்டும் என அவர்கள் வலியுறுத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருணாசல பிரதேச ஜனாதிபதி ...Tuesday, April 07, 2009 4:41 PM
ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் அருணாசல பிரதேச சுற்றுப்பயணத்துக்கு சீனா ஆட்சேபம் தெரிவித்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் சீனாவை ஒட்டியுள்ள அருணாசலபிரதேசத்துக்கு வெகுநாட்களாகவே சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. பிரதமர் மன்மோகன்சிங் அருணாசல் சென்ற போதும் ஆட்சேபணை தெரிவித்தது. இதற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதி என நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன்சிங் திட்டவட்டமாக அறிவித்தார்.
இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் சீனாவை ஒட்டியுள்ள அருணாசலபிரதேசத்துக்கு வெகுநாட்களாகவே சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. பிரதமர் மன்மோகன்சிங் அருணாசல் சென்ற போதும் ஆட்சேபணை தெரிவித்தது. இதற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதி என நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன்சிங் திட்டவட்டமாக அறிவித்தார்.
இத்தாலி பூகம்பம் 150 க்கு ...Tuesday, April 07, 2009 4:40 PM
இத்தாலியின் அப்ரூசோ மாநிலத்தில் 26 நகரங்களில் நேற்று அதிகாலை பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதில் 15 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. தலைநகர் அக்யூல்லாவில் பள்ளி மாணவர் விடுதி ஒன்றும் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் பலியாயினர். மீட்பு பணிகள் நேற்று உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. இதுவரை 150க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என கருதப்படுகிறது. காயம் அடைந்த 1500 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர்.
மும்பை, கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் ...Tuesday, April 07, 2009 4:36 PM
சேலம், மும்பையில் இருந்து கோவை வரும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் மூன்று பயணிகள் மயங்கி கிடந்தனர். இவர்களுக்கு கொள்ளை கும்பல் மயக்க மருந்து கொடுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மும்பையிலிருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட குர்லா எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று இரவு 9.30 மணியளவில் பெங்களூர் வந்தது. அப்போது மூன்றடுக்கு ஏசி பெட்டியில் மூன்று பயணிகள் மயங்கி கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் இதுகுறித்து விசாரிப்பதற்குள், பெங்களூரில் இருந்து ரயில் புறப்பட்டு விட்டது. இதுகுறித்து பெங்களூர் ரயில்வே போலீசார், சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
மும்பையிலிருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட குர்லா எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று இரவு 9.30 மணியளவில் பெங்களூர் வந்தது. அப்போது மூன்றடுக்கு ஏசி பெட்டியில் மூன்று பயணிகள் மயங்கி கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் இதுகுறித்து விசாரிப்பதற்குள், பெங்களூரில் இருந்து ரயில் புறப்பட்டு விட்டது. இதுகுறித்து பெங்களூர் ரயில்வே போலீசார், சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை ...Tuesday, April 07, 2009 4:32 PM
தமிழகத்தில் மே 13ம் தேதி மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 17ம் தேதி துவங்குகிறது. தேர்தலுக்காக ஒவ்வொரு கட்டமாக பல்வேறு நிலைகளில் உள்ள அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் பயிற்சி அளித்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தின் 32 மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள், நேர்முக உதவியாளர்கள் (தேர்தல்) மற்றும் தாசில்தார் களுக்கு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கவும், பயிற்சி அளிக்கவும் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா ஏற்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தின் 32 மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள், நேர்முக உதவியாளர்கள் (தேர்தல்) மற்றும் தாசில்தார் களுக்கு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கவும், பயிற்சி அளிக்கவும் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா ஏற்பாடு செய்துள்ளார்.
எந்த எந்த ஆவணங்களை காட்டி ஓட்டு ...Tuesday, April 07, 2009 4:16 PM
புதுடெல்லி, புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் அதற்கு மாற்றாக பயன்படுத்தக் கூடிய 13 ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில், ரேஷன் அட்டை இடம் பெறவில்லை.
மக்களவைக்கு வரும் 16ம் தேதி முதல் மே 13 வரை ஐந்து கட்டமாக தேர்தல் நடக்கிறது.
மக்களவைக்கு வரும் 16ம் தேதி முதல் மே 13 வரை ஐந்து கட்டமாக தேர்தல் நடக்கிறது.
அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வு ...Tuesday, April 07, 2009 4:11 PM
சென்னை, அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வு முறையை எதிர்த்து ஐகோட்டில் தொடரப்பட்ட வழக்கில் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கோவை பொறியியல் கல்லூரிகள் நிர்வாக சங்கத்தின் தலைவர் சுதானந்தன், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:
கோவை பொறியியல் கல்லூரிகள் நிர்வாக சங்கத்தின் தலைவர் சுதானந்தன், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:
அதிமுக,மதிமுக தொகுதி பங்கீட்டில் ...Tuesday, April 07, 2009 4:08 PM
சென்னை, அதிமுக கூட்டணியில் மதிமுகவுடன் மட்டும் இன்னும் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை. இதுகுறித்து இன்றும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், பாமக, மார்¢க்சிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணியில் புதிதாக சேர்ந்த பாமகவுக்கு எடுத்த எடுப்பிலேயே 7 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதன்பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 இடங்கள் தரப்பட்டது. மார்க்சிஸ்ட்டுக்கும் மதிமுகவுக்கும்தான் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது. கேட்ட தொகுதிகள் கிடைக்காததாலும் கூடுதல் தொகுதிகள் கேட்டதாலும் இந்த சிக்கல் தொடர்ந்தது.
அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், பாமக, மார்¢க்சிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணியில் புதிதாக சேர்ந்த பாமகவுக்கு எடுத்த எடுப்பிலேயே 7 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதன்பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 இடங்கள் தரப்பட்டது. மார்க்சிஸ்ட்டுக்கும் மதிமுகவுக்கும்தான் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது. கேட்ட தொகுதிகள் கிடைக்காததாலும் கூடுதல் தொகுதிகள் கேட்டதாலும் இந்த சிக்கல் தொடர்ந்தது.
சோமாலிய கடற்கொள்ளையர்கள் ஜெர்மன் ...Tuesday, April 07, 2009 4:01 PM
சோமாலிய கடற்கொள்ளையர்கள் 22,000 டன் எடை கொண்ட ஜெர்மன் நாட்டு சரக்கு கப்பல் ஒன்றை இந்திய பெருங்கடல் பகுதியில் கடத்தியுள்ளனர்.
கென்யாவுக்கும் ஷெஷல்ஸ்க்கும் இடைப்பட்ட இடத்தில், சோமாலிய கடற்கரையில் இருந்து சுமார் 400 கடல் மைல்களுக்கு அப்பால் இந்த கப்பலை இவர்கள் பிடித்துள்ளனர்.
கென்யாவுக்கும் ஷெஷல்ஸ்க்கும் இடைப்பட்ட இடத்தில், சோமாலிய கடற்கரையில் இருந்து சுமார் 400 கடல் மைல்களுக்கு அப்பால் இந்த கப்பலை இவர்கள் பிடித்துள்ளனர்.
வருண்காந்தியை தாக்கி பேசிய லாலு ...Tuesday, April 07, 2009 3:38 PM
பாட்னா, வருண்காந்தியை தாக்கிய பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மீது மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் கிருஷணன்கஞ்சில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பேசுகையில், Ôநான் மட்டும் உள்துறை அமைச்சராக இருந்திருந்தால், முஸ்லிம்களுக்கு எதிராக பேசிய வருண்காந்தியை ரோடு ரோலர் ஏற்றி நசுக்கியிருப்பேன்Õ என்றார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
பீகார் மாநிலம் கிருஷணன்கஞ்சில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பேசுகையில், Ôநான் மட்டும் உள்துறை அமைச்சராக இருந்திருந்தால், முஸ்லிம்களுக்கு எதிராக பேசிய வருண்காந்தியை ரோடு ரோலர் ஏற்றி நசுக்கியிருப்பேன்Õ என்றார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
நியூசிலாந்தில், 41 ஆண்டுக்கு பின் ...Tuesday, April 07, 2009 3:11 PM
வெலிங்டன், நியூசிலாந்து மண்ணில் 41 ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சாதனை படைத்தது. வெலிங்டனில் நடந்த கடைசி போட்டியில் இந்தியாவின் வெற்றியை மழை தட்டிப் பறித்தது.
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து இரு அணிகளும் 3 டெஸ்ட் கொண்ட தொடரில் மோதின. ஹாமில்டனில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. நேப்பியரில் நடந்த 2-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து இரு அணிகளும் 3 டெஸ்ட் கொண்ட தொடரில் மோதின. ஹாமில்டனில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. நேப்பியரில் நடந்த 2-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
Subscribe to:
Comments (Atom)